<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8830351</id><updated>2012-01-28T01:15:01.206+09:00</updated><category term='தமிழக மீனவர்'/><category term='பகடி.'/><category term='Parody'/><category term='நந்தலாலா'/><category term='வெகுசினிமா'/><category term='உதவி'/><category term='திரை விமர்சனம்'/><title type='text'>ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.</title><subtitle type='html'>எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>164</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-3093376420056488944</id><published>2012-01-25T15:31:00.001+09:00</published><updated>2012-01-25T15:34:54.435+09:00</updated><title type='text'>காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.</title><content type='html'>அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.  இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;(என் 'தூவானம்' வலைப்பதிவில் இடப்பட்ட பதிவின் முக்கியத்துவம் கருதி இங்கேயும் இடுகிறேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-3093376420056488944?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/3093376420056488944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=3093376420056488944' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3093376420056488944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3093376420056488944'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2012/01/blog-post_25.html' title='காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-868534894340821010</id><published>2012-01-10T02:41:00.005+09:00</published><updated>2012-01-10T10:33:03.148+09:00</updated><title type='text'>கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பார்த்தல்.</title><content type='html'>பொலிடிகல் கரெக்ட்னெஸ் பற்றி பாடம் எடுப்பதையும், அதை முன்வைத்து எதிர்வினை புரிவதையும் எழுத்தில் இனி செய்யக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்பதில், இன்னமும் ஒண்ணாங்கிளாஸ் பாஸ் செய்யாத தமிழ் சூழலில், அப்படி எல்லாம் விபரீத முடிவு எடுக்கக்கூடாது என்று தெரிகிறது. மறத்தமிழர்கள் பச்சையாக காட்டும் ஆணாதிக்க வெறியை இணையத்தில் வாசிக்க நேரும்போதெல்லாம், வேறு ஏதோ நாட்டில் நடக்கும் வன்முறை செய்தியை வாசிப்பதுபோல எதிர்கொள்ளும் பழக்கம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மதியம்கூட ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடும் படம் ஒன்றை எடுத்துப் போட்டு, அதை ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக சொல்லி, அந்த செய்தியை இணையத்தில் பரப்பும்படி வேறு கேட்டுக் கொள்ளும் ஃபேஸ்புக் செய்தியை பார்த்தேன்; அதற்கு நிறைய 'லைக்'கள் வேறு; ஸ்ருதிஹாசன் பீர் சாப்பிடுவதில்  உனக்கேன் இந்த கொலைவெறி என்று ஒருவர் கேட்கக்கூட நாதியில்லாத அளவில் தமிழ் சூழல் உள்ளது. நேற்றிரவு அன்றாடம் ட்விட்டரில் உரையாடும் நண்பர்கள், அவ்வளவு பச்சைத் தமிழ்தனமாக இல்லாவிட்டாலும், அதே தமிழ் ஜோரில் எதிர்வினை செய்திருக்கிறார்கள்; பல கொக்கிப் பிடி கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள்.  &lt;a href="http://tamil.oneindia.in/movies/news/2012/01/suhasini-wants-colour-heroes-aid0091.html"&gt;இப்போதய சுகாசினி சர்ச்சை&lt;/a&gt;யில், போஸ்டர், தக்காளி, முட்டை வீசுதல், தமிழ் அடையாளக் குழப்பம் பற்றிய அறிவுச் சொறிதல்வரை வளரும் அளவிற்கு சீரியஸாக இல்லையென்றாலும், சில தெளிவுகளுக்காக, எழுதுவதில் எனக்கே இருக்கும் மொக்கையை சகித்து மெனக்கிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் சுகாசினி மீது பரிவு கொண்டு பேச எனக்கு காரணம் எதுவும் கிடையாது; குஷ்பு மீதான தாக்குதல் நடந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர, சுகாசினி சொல்லும் எதையும் நான் ஆதரித்தது கிடையாது. அவர் எதை பற்றி பேசினாலும், ஐந்து நிமிடம் கேட்கும் பொறுமை கூட கிடையாது; எலீட் குரலான அவரை பலமுறை திட்டக் கூட தயங்கியது கிடையாது; எதிர்காலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் அதிகம்.  இந்த சந்தர்ப்பத்தில் சுகாசினி பற்றிய சர்ச்சை என்று அல்லாது, குறிப்பிட்ட பிரச்சனையின் அரசியல் பரிமாணங்களும், நம் மக்களின் எதிர்வினையும், என்னை நோக்கிய கேள்வியுமே என்னை எழுத வைக்கிறது. அதே போல அழகான ஆண் என்பதன் இலக்கணத்திற்கு எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத்தை ஒருநாளும் நான் உதாரணமாக கொண்டதில்லை. நடிகைகள் விஷயத்திலும்,  பெரும்பான்மை தமிழ் மக்களின் ரசனைக்கு எதிராக, 'கலர்' கண்டு அழகியல் இலக்கணத்தை நான் கற்பித்து கொண்டதில்லை.  இவை எல்லாம் என்னை ஒருமுறை வாசித்தவர்களுக்கும் தெரியும் என்றாலும், விவாதம் என்று வந்துவிட்டால், சதாம் குர்து இனத்தவரை கொன்றதை பற்றி பேசினால், புஷ் செய்த அக்கிரமங்களை பதிலாக முன்வைப்பது ஒரு விவாத அணுமுறையாகி விட்டதால் இந்த சுய விளக்கத்தை சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல சுகாசினி இதற்கு முன்வாழ்க்கையில் என்னவெல்லாம் பேசினார் என்ற முழுத் தகவல்கள் என்னிடம் கிடையாது; தெரியாது; நண்பர் டிபிசிடி அளித்த &lt;a href="http://tamil.oneindia.in/movies/news/2012/01/suhasini-wants-colour-heroes-aid0091.html"&gt;இந்த செய்தியை&lt;/a&gt; மட்டும் வைத்தே பேசுகிறேன். இந்த செய்தியையும் தட்ஸ்டமில் போன்ற ஒரு நம்பகதன்மையில்லாத தளத்தை வைத்து பேசுவதில் பிரச்சனையிருந்தாலும் ஒரு கருத்து சார்ந்த விவாதத்திற்காக அதை அப்படியே எடுத்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகாசினி இப்போது சொன்னது என்ன? 'எம்ஜியார், கமல், அரவிந்த்சாமி, அஜீத் போன்று அழகானவர்களை' கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகையாக தான் கேட்டுக் கொள்வதாக சொல்லியுள்ளார்; அவ்வளவுதான் சொல்லியுள்ளதாக செய்தி வந்துள்ளது.  நேரடியாக அவர் தமிழ் கலாச்சாரத்தின் அதி முக்கிய கருத்தாக்கமான 'கலர்' பற்றி எதுவும் சொல்லவில்லை.  அவர் சொன்னதை பற்றிய ஒரு தனிப்பட்ட வாசிப்பாகத்தான் 'கலராக' கதாநாயகர்கள் வேண்டும் என்று அவர் கேட்பதாக பொருள் கொள்ள முடியும். ஆனாலும் அப்படி அவர் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். அதிலேதான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு யாரும் திருப்தியான பதில் எதுவும் சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தனக்கு வெள்ளை நிறத்தில் கதாநாயகர்கள் பிடிக்கும் என்று சொல்வது ரேசிசமா? அப்படியானால் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று நான் சொன்னால் அது என்ன? அதை ஒரு சமூகத்தின் பொதுவான ரசனையாக கட்டமைப்பதும், முன்னனுமானமாக கொள்வதும்,  கருப்பாக இருக்கும் ஒருவரை மட்டமாக பேசியிருந்தால் அதுவும்தான் பிரச்சனை. நிச்சயமாக சுகாசினி அப்படி நேரடியாக கருப்பான ஒருவரை மட்டமாக சொல்லவில்லை 'எம்ஜியார் கமல், அஜித்தான் தேவை, தனுஷ் தேவையில்லை என்பது ரேசிசம் இல்லையா' என்று கேட்கிறார் தமிழ் சசி. 'தனுஷ் தேவையில்லை' என்ற கருத்தை சசி எங்கே வாசித்தாரோ எனக்கு தெரியாது; வெளிவந்த செய்தியில் நான் வாசிக்கவில்லை. ஆனால் ஒருவேளை தனுஷின் கலரை பற்றி அவர் பேசியிருந்தால் கூட, அதில் எந்த தவறும் இல்லை. அதை ஒரு எதிர்வினையாக நிச்சயம் பார்க்கமுடியும்.  'வொயிட்டு கலரு கேர்ளு..' என்று பாடுபவருக்கு, பெண்மட்டும் வொயிட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு, அவர் கருப்புதான் என்று உணர்த்துவது ஒருவகையான எதிர்வினைதான். (உண்மையில் 'வொயிட் கலரு கேர்ளு' என்று தனுஷ் பாடுவதில் கிடப்பது அல்ல ரேசிசம், 'கேர்ளு ஹார்ட்டு ப்ளாக்கு..' என்று எதிர்மறையான ஒரு விஷயத்திற்கு கருப்பு நிறத்தை குறியீடாக்குவதுதான் நிறம் சார்ந்த ரேசிச மனப்பான்மை.) &lt;br /&gt;&lt;br /&gt;'வெள்ளை கலர் பிடிக்கும்' என்று ஒருவர் கருதுவதும், கருத்து சொல்வதும் ரேசிசமா என்று நேரடியாக கேட்பதை விடுவோம்; சமூக பொது அழகியலாக அது இருப்பதனால், அதன் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவ்வாறு கருதுவதை எதிர்ப்பதாக கொள்வோம்; அப்படியானாலும் உண்மையில் எதிர்க்க வேண்டியது சுகாசினி பேசியதையா? மேலும் சுகாசினி பேசியதை எதிர்க்கும் அருகதை யாருக்காவது இங்கு இருக்கிறதா? நிச்சயமாக அதற்கான அருகதை சேரனுக்கு கிடையாது. சேரனுக்கு மட்டுமின்று எனக்கு @போட்டு பேசிய யாருக்கும் கூட இருப்பதாக தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சேரன் எத்தனை கறுப்பு நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்? சேரனை விடுவோம், இந்த செந்தமிழன் சீமான் நடிக்க வைத்துள்ள கறுப்பு நடிகைகள் ஒன்றாவது உண்டா? நடிகைத் தேர்வு என்பது வெகுஜன ரசனையை கணக்கில் கொண்டு மட்டும் நடப்பது அல்லவே; இவர்களின் அழகியல் ரசனை, இன்னபிற ரசனைகள் சார்ந்தும் நடப்பதுதானே. தன் படத்தில் நடிக்க கலரான, புத்தம் புதிய, இளைமையான நடிகை வேண்டும் என்று தெளிவாக இருப்பவர், பெண்கள் மட்டும் தங்களை போன்று வயசாகி கன்னச்சதை தொங்கும் 'ஹேண்ட்சம் கருப்பர்களை' ரசிக்க வேண்டும் என்பது என்ன எண்ணம்? இதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். நண்பர்கள் புரியவில்லை என்கிறார்கள். இதென்ன அவ்வளவு கடினமான கான்செப்டா?  பெண்களுக்கான அழகியலாக வெள்ளையையும், ஆண்களுக்கான அழகியல் என்று வரும்போது மட்டும் சுய அடையாளத்தை முன்வைத்து கருப்பை ரசிக்க வேண்டும் என்று பெண்களை நோக்கி சொல்வதைத்தான் ஆணாதிக்க ரேசிசம் என்கிறேன். வெள்ளை கதாநாயகியை தனக்கு தேர்வு செய்துவிட்டு, சுகாசினியை கறுப்பு கதாநாயகர்களை ரசிக்க சொல்வது நிறம் சார்ந்த ஆணாதிக்க திமிர் அன்றி வேறென்ன? (அடிப்படையில் இது ஆணாதிக்கம் சார்ந்த பிரச்சனை என்பதால்  இதை நான் ரேசிச ஆணாதிக்கம் என்று சொல்லியிருக்க வேண்டும்.) இதைத்தானே தமிழ் அரசியலை முன்வைக்கும் சேரன், சீமான், பாரதிராஜா பொன்ற அனைவரும் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நிலை கூட இல்லாமல், கலைஞரின் பொன்னர்-சங்கரில் கூட நீல நிற கண்களுடன் நடிகைகள் இருக்கும் இன்றய சூழலில், சுகாசினி சொன்னதை சூழலுக்கான எதிர்வினையாக பார்க்கமுடியும். நடிகைகள் எல்லாம் உங்களுக்கு வெள்ளை வெள்ளையாக வேண்டும்; இதில் நடிகர்கள் வெள்ளையாக இருக்க ஒரு பெண் ஆசைப்பட்டால் அது ரேசிசமா? என்ன லாஜிக் இது! இன்று நிலவும் அழகியல் அடிப்படையில், தங்களுக்கும், தங்களது ரசனைக்கும் பங்கு கேட்கிறார் சுகாசினி. தொடர்ந்து நிலவும் சமூக ரசனையை பற்றி தொடர் விமர்சனம் செய்யாத யாருக்கும் சுகாசினிக்கு எதிர்வினை வைக்கும் தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தினமும்தானே தமிழ் சேனலில், எஃபெம்மில், நண்பர்களிடத்தில், பேருந்தில், பொது இடத்தில் என்று எங்கும் வெள்ளை கலரை புகழும், தீ ஃபிகரை வியக்கும் வசனங்களை கேட்கிறோம். இதில் எத்தனை இடத்தில் இவர்கள் எதிர்வினை செய்திருக்கிறார்கள்? அதை பற்றிய பிரஞ்ஞையில்லாமல், சுகாசினிக்கு மட்டும் பொங்குவதன் உளவியல் ஆணாதிக்கம் சார்ந்தது என்று நான் கருதுகிறேன்.  சுகாசினியின் பேச்சுக்கு எதிர்வினை வைத்தவர்களால் சின்ன சுயவிமரசனத்தை கூட செய்து கொள்ள முடியவில்லை; ஒரு கறுப்பு கதாநாயகியை யதார்த்தத்தில் முன்வைக்காத, சேரனை குற்றம் சொல்ல கூட யாருக்கும் தோன்றவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இது ஏதோ சினிமாக்காரர்களின் தேர்வு சார்ந்த பிரச்சனையும் அல்ல. நமது வெகுஜன ரசனை சார்ந்ததும்தான். கன்னங்கரேல் இளைஞன் ரொம்ப கலரான பெண்ணை மணம் செய்ய விரும்புவதாக, வெளிப்படையாக சொல்வதை கேட்கும் யதார்த்தத்தில்தானே நாம் இருக்கிறோம். ஒருவேளை உண்மையில் நம் வெகுஜன ரசனைக்கு கறுப்புதான் பிடிக்கும் என்றால், பணம் செலவழித்து மும்பையிலிருந்து அழைத்து வந்து, ஹோட்டல் வாடகை எல்லாம் கொடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நம் சினிமாக்காரர்களுக்கு இருக்காது. நம் சமூகத்தின் பொதுமகன் வெள்ளை கதாநாயகியுடன் கற்பனையில் குலாவ சினிமாவிற்கு செல்கிறான்; சினிமா அதை அளிக்கிறது. இந்த சமூக இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத போது, பெண்களும் அதே போன்ற கதநாயகர்களை விரும்பினால் அதை ரேசிசமாக பார்க்கமுடியாது; நிலவும் யதார்த்தத்திற்கு எதிர்வினையாகத்தான் பார்க்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம்விட நம் கருப்பு கதாநாயகர்களே மேக்கப் போட்டு வெள்ளையாகத்தானே தோன்றுகிறார்கள். 'மண்டேலா மண்டையா' என்று திட்டப்படும் செந்தில் கூட மூஞ்சியில் சிகப்பு சாயம் பூசாமல் தோன்றுவதில்லையே. இதில் ஒரிஜினலாகவே 'கலரில்' ஒரு கதாநாயகனை கேட்டால் அதில் என்ன பெரிய பிரச்சனை?  &lt;br /&gt;&lt;br /&gt;'அயன்' படம் வெளிவந்த போது ஏதோ ஒரு டீவியில் இயக்குனர் ஆனந்த், தமன்னா, ஜெகன், சூர்யா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. படக்குழுவை சேர்ந்த ஒருவர் இயக்குனரை கேட்கிறார், "ஏங்க இவன் (ஜெகன்) இப்படி அண்டங்காங்காக்கா மாதிரி இருக்கான், இவனைப்போய் எப்படி தமன்னாவிற்கு அண்ணனா சூஸ் பண்ணிங்க?' டைரக்டரும் ஏதோ பதில் சொல்கிறார். அதற்கு பிறகு டைரக்டர் ஆனந்தே தமன்னாவிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;" அது எப்படி நீங்க இவ்வளவு கலரா இருக்கீங்க?" என்று கேட்கிறார். தமன்னா தான் வெயிலுக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கைகள், குங்குமப்பூ, பப்பாளி அரைத்து தேய்த்தல் என்று பலதை வரிசையாக சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. இதெல்லாம் செஞ்சா உங்களை மாதிரி கலரா மாறிரலாமா?" (ஒரே சிரிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;தமன்னாவும் சிரித்து "இல்ல.. பேசிக்கா இது ஹெரிடிடரியா வர்ரது, அதுக்கு மேலே ப்ருகாஷனா..." &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்குனார் இன்னொரு விழாவில் சுகாசினியின் ரேசிசத்தை கண்டித்தால், நம் மக்கள் அதற்கு விசில் அடித்தால் ஆச்சரியமே படவேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-868534894340821010?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/868534894340821010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=868534894340821010' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/868534894340821010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/868534894340821010'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2012/01/blog-post.html' title='கறுப்பு வெள்ளையை கருப்பு வெள்ளையாக பார்த்தல்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-2544644516905908468</id><published>2011-11-12T03:12:00.002+09:00</published><updated>2011-11-12T03:24:59.736+09:00</updated><title type='text'>அழிவிற் சிறந்தது.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அ&lt;/span&gt;ப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார்.  அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு 'கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சனையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்' என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும் கூட தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் கலாம் கூடங்குளம் சென்று, 'ஆய்வு செய்து', கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டு, இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எல்லா பொதுமக்கள் மனங்களிலும் படிந்து விட்ட பிம்பமான,   இந்தியாவின் தலை சிறந்த 'விஞ்ஞானி'யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்படுகிறது.  அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில் நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சனை அல்ல;  கூடங்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப் படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாக முன்வைக்கப்பட்டு, அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாக பரப்புரை செய்யப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சனை. அரசியல் நிலைபாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதை விட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதை முன்வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரணங்களால், கலாம் ஒரு அணு விஞ்ஞானி என்கிற பொய்யை மறுதலிக்க வேண்டியுள்ளது.  ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும்,  எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை.  இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலை சொல்லி, அதன்  மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், ஒரு அணு விஞ்ஞானியாக ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதை சொல்ல வேண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களை ஒரு அணு உலை விபத்திற்கு பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடங்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும் ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சனையை தீர்க்காமல் இழுத்துக் கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் திசைகளில் கருத்துக்களை உதிர்த்து கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றி பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்து துவங்குவதை காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை. &lt;br /&gt;ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தை தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணுவுலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதை தவிர, ஒரு நாளில் கூடங்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் (&lt;a href="http://www.thehindu.com/opinion/op-ed/article2601471.ece "&gt;ஆங்கிலம்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://news.vikatan.com/?nid=4832"&gt;தமிழ்&lt;/a&gt; )இரண்டு கட்டுரைகளும்  ஒரு ஆய்வு கட்டுரையின் எந்த பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரச்சார தொனியில் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாமின் கட்டுரையில் தரப்படும்  உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சனைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற  உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை மனித சமூதாயம் படைத்த எந்த தொழில் நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதி விலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின் படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்த பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரேபார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சனைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்த சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல. இன்று பிரச்சனையுள்ளதாக கருதப்படும்  ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட ட்சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளதாக கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்ற பின் குளூரூட்ட இயலாமல் வெடித்தது.  நம்மூர் கூடங்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறை புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சனைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டி, கண்களை கட்டி விட்டிருக்கிறது இயற்கை.  பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும், ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொது மக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;'விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா' என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.  விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ள வாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும்  - விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற -  வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;'நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு'  என்று சொல்லப் படுவதுடன்தான்,  விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்கு முன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாக பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்க போகிறார்கள்; கூடங்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரச்சாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். 'Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year.' என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய  நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு   1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt; 'நாங்கள் எங்களால் முடிந்த எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம், அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது' என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்க கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்கு பிறகும், கூடங்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள, ஆனால் சாத்தியமுள்ள, ஆபத்தை எதிர்கொள்ள தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம்.  நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா?  &lt;br /&gt;&lt;br /&gt;அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை  'நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்' என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும் போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற  ''நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்'  வாதம்தானே இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம்  முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதை விட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இதையெல்லாம் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடங்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தை கற்பனையே செய்து பார்க்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் ஒரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சனையை சுத்தமாக கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாத தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமும் அணு உலைக்கு எந்த தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாத தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையை போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்க போவதாக சொல்லப்படும் பல பிரச்சனைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவித புற்று நோய்களால் பாதிக்கபடுவதாக பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன.  நான் நேரடியாக இந்த புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதை மட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால்,  பொய் என்று நிறுவி,  பொய் தகவல்களை தேசத்தின் முக்கிய பிரச்சனைகளின் போது பரப்பியதற்கு நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம்.  உதாரணமாக &lt;a href="http://tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp"&gt;இங்கேயும்&lt;/a&gt;,  &lt;a href="http://www.greenpeace.org/india/en/What-We-Do/Nuclear-Unsafe/Safety/Nuclear-accidents/Nuclear-accidents-in-India/Accidents-at-nuclear-power-plants/)"&gt;இங்கேயும்&lt;/a&gt;  தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விபத்து என்பது சாத்தியக்கூறு  மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்து சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சனை அணு கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்கு பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாக கொண்டவைகளை, நூறு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது  exponentialஆக  வளர்ந்து, இன்னும்  பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும்  அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே   இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது,  பிரச்சனைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;நம் நுகர்வு கலாச்சாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமீங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவண படங்களை பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யதார்த்தத்தில் அணு கழிவுகளை பிரச்சனையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும் நம்மை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.  அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள் தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகி சூழலுக்குள் நுழைவதை தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது.  அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சனையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை.  இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு- ஒருவேளை அவர்கள் எல்லாவகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சனையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்து விட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சனையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை.  கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடைப்படை என்றான பின், பெரும் அளவில் சேர்ந்து கொண்டே இருக்கப் போகும் கழிவுகளை தொடர்ந்து கையாண்டு கொண்டே இருக்க வேண்டும். மருத்து கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதை பற்றியும் - தன் வீட்டிற்கு வெளியே- எந்த தளத்திலும் பிரஞ்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாம் தொழில் நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லாவகை பழைமைவாதிகளும் கூட தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில் நுட்பம் நம்மை விடுதலை செய்த்திருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லாவகை பற்றுக்களை போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப் பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமரசனம் செய்து கொள்வதில், தொழில் நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம்.   இன்றய அதீத தொழில் நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றி பலர் பேசும் போது, தொழில் நுட்பத்தின் மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரச்சாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;0         &lt;br /&gt;0&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எ&lt;/span&gt;ன்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தை குறிப்பிடுகிறார்.  இதை குறிப்பிடும் போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப் பட்டதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.  ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால்  Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாக பல புள்ளி விவரங்களை தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவைகளை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கிய பின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக் கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாக தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும் போது, பொறுப்பற்ற எல்லாவகை குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளை தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம்.  ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றய வாகனங்களை போல புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல், உடனடி சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரி சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காக தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்த அளவில் எல்லாவிதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சுடேற்றம் பற்றி கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள்.  இதற்கு மேல்  வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் தீவிர சுரண்டல், அளிக்கக் போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன.  இதில் உடனடி ஆபத்து  என்று பார்த்தால் அணுக்கழிவுகள்  குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றலுக்காக  நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக் கொண்டு அழிவைத்  தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் பதில் எதுவும் இல்லை.  ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதை பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும் போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டு தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்க போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சனையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காத போது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்கு செலுத்த வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளை போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது.  வேறு ஒரு மக்கள் என்று கூடங்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த புலம்பல்களை விட்டு விட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்து கொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை.  உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடங்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின் பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களை விட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்...  முடியும்... முடியும்... என்று கோஷிக்கிறார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. 1. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையை செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைதளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கில கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வு கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதை கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில்,  இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://www.tamilpaper.net/?p=4743"&gt;தமிழ் பேப்பரில் வெளியாகியது.)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-2544644516905908468?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/2544644516905908468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=2544644516905908468' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/2544644516905908468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/2544644516905908468'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2011/11/blog-post.html' title='அழிவிற் சிறந்தது.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-905634009257574080</id><published>2011-08-29T01:27:00.006+09:00</published><updated>2011-08-29T15:38:33.368+09:00</updated><title type='text'>நம் கூட்டுக் கொலை.</title><content type='html'>செப்டம்பர் 9 அன்று முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட சாத்தியங்கள் அதிகமாக‌ இருக்கின்றன.  அது நிறைவேறினால் அரசதிகாரமும், நீதிமன்றமும், சமூகத்தின் பொதுப்புத்தியும் சேர்ந்து, பகுத்தறிவினால் நிதானமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்த்திய ஒரு கொடூரமான கூட்டுக் கொலையாக  அது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சமூகத்தில்  எத்தனையோ அநீதிகள் அன்றாடம் நடக்கிறது;  நாம் ஒப்புக் கொள்ளாத, நம்மால் சகிக்க முடியாத அநீதிகள்  எல்லாவற்றிற்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுமில்லை;  கொடுக்கும் குரலின் அழுத்தமும் கோபமும், அநீதி மற்றும் அது நிகழும் தரப்புக்கும் ஏற்ப வேறுபடத்தான் செய்கிறது; அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அதற்கான தேர்ந்தெடுப்பும், அந்த தேர்ந்தெடுப்பிற்கு காரணமான கொள்கைசார்புகளும் இருக்கின்றன.  இதற்கு விதிவிலக்காக எந்த தரப்பும் இருப்பதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அநீதிகள் என்று எதுவுமே நடக்காத சமூகத்திற்கான சட்டகத்தை நாம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.   அநியாயம் என்று நாம் நினைக்கும் ஒன்றை தன்னளவில் எதிர்கொள்ளாமலும், மற்றவருக்கு அது நிகழ்வதை எல்லா சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்டுக் கொண்டும்  இருக்க‌ முடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லையாக, 'என்ன காரணத்தாலும் நாம் இதை பொறுக்க முடியாது' என்று சுய அறத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று நமக்கு இருந்தாக வேண்டாம். அதை சமூகமும், அரசும், அதன் நீதியும் அறிவித்து, எல்லா ஏற்பாடுகளையும் நிதானமாக செய்து நிறைவேற்றுமானால் நம்முடைய இருப்பின் மிக பெரிய‌தொரு தோல்வி அது;  வாழ்வதன் அர்த்தத்தையே கேள்விக்குரியாக்கும் நிகழ்வு அது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் மரண தண்டனை என்பது  நாகரீக சமூகத்தில் ஒப்புக் கொள்ள முடியாத விஷயமாக கருதுகிறேன். குறிப்பாக இந்த பிரச்சனையில் பேரறிவாளனுக்கான தண்டனையை, எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள‌ முடியாத அநியாயமான விஷயமாக, நம் இருப்பையே  கேள்விகுறியாக்குவதாக கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மரண தண்டனையை, அதாவது எல்லாவித மரணதண்டனையையும், ஏன் எதிர்க்கிறேன் என்று விளக்கமாக எழுத இந்த இக்கட்டான நிலை சரிபடவில்லை. &lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_27.html"&gt; இந்த பழைய பதிவில் என் அன்றய புரிதலை எழுதியிருக்கிறேன்.&lt;/a&gt; சுருக்கமாக சொல்வதானால், செய்த எந்த குற்றத்தையும் விட மரணதண்டனை  கொடூரமானது. மிக அல்பமான உதாரணத்தை யோசிக்கலாம். ப்ளேடினால் ஒருவன் நம்மை எதிரபாராத சமயத்தில் கீறிவிட்டால் அது சாதாரண விஷயம்; பதிலுக்கு குறிப்பிட்ட நேரத்தை நிச்சயித்து, அந்த ஒருவனுக்கு அதை அறிவித்து, கையை சுத்தமாக கழுவி,  அவனை  எல்லாவகையிலும் தயார் செய்து, கையை குறிப்பிட்ட நிலையில் வைத்து, தயாராக வைக்கப்பட்ட ப்ளேடினால் கையில் கீறுவது, அதை விட பல மடங்கு கொடுமை நிறைந்தது. இது எந்த தண்டனைக்கும் பொருந்தும்; ஆக எல்லாவித தண்டனையும் குற்றத்தை விட கொடுமையானதுதான். ஆனால் மரண தண்டனை என்பது,  ஒருவேளை வலியற்று நிறைவேற்ற முடியும் என்று ஒரு நிலை வந்தாலும்  கூட,  மனிதன் நிகழ்த்த கூடிய எல்லா குற்றங்களையும் விட கொடூரமானது; செய்த குற்றங்களை விட அநீதியானது. கடவுளின் இடத்தை சில மனிதர்கள் எடுத்து, நம் அனைவர்களின் பெயராலும் நிறைவேற்றப் பெறுவது.&lt;br /&gt; &lt;br /&gt;நிகழ்ந்த குற்றம் என்பது  மனித பைத்தியக்காரத்தனத்தின் வன்முறை; மரண தண்டனை அரசதிகாரத்தின் நீதியும் பகுத்தறிவும் சேர்ந்து  நிகழ்த்தும் பயங்கரம்.  தூக்கு தண்டனை,  அதை நிகழ்த்தும் பணியாளர்கள் உட்பட பலருக்கும்,  எவ்வளவு பயங்கரமான அனுபவம்  என்பது பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளது.    இந்த பயங்கரம் செப்டம்பர் 9இல், நாம் இட்ட இத்தனை கூக்குரலுக்கு பிறகும் நடக்கப் போகிற‌து என்றால், நம் சமூகத்தில் இயங்குவது குறித்த ஆழ்ந்த அவ நம்பிக்கையையே கொள்ள முடியும். குறிப்பிட்ட அரசியல் தரப்பின் மாறாத காழ்ப்பையும், வெறுப்பையும் விமர்சிக்கும் (ஏற்கனவே இல்லாத) அருகதை  இனியும்  எந்த பக்க அறிவுலகமும் கோர முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பகுத்தறிவும், நீதியும் சார்ந்த பயங்கரவாத கொலையை,  தன்னிச்சையாக எதிர்த்து கொதிக்தெழும் அளவிற்கு, நம் சமூகத்தின் பொதுப்புத்தி நாகரீகம் கொள்ளவில்லை. இப்போது இரு வாரங்களுக்கு குறைவான நாட்களே கைவசம் இருக்க, மிக இக்கட்டான நிலையில் இருக்கிறோம். நமது எதிர்ப்பை மீறி இந்த பயங்கரம் நடக்காமல் இருக்க ஒரே நம்பிக்கை, மனமிரங்கி  ஜெயலலிதா செயல்பட்டு இதை தடுப்பதுதான். ஜெயலலிதா தன் எண்ணம் என்ன வென்று சின்ன சமிஞ்ஞை கூட கொடுக்காத நிலையில்,  இந்த பயங்கரத்தை நிறுத்த வைப்பதற்கு, அவரை நிர்பந்திக்க‌,  இந்த மரணதண்டனைக்கு எதிராக  பெரும் வெகுமக்கள் எதிர்ப்பு இருப்பதாக காட்டுவதும், உண்மையிலேயே அதை உருவாக்குவதுமே.  &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய வெகுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவதற்கு பேரறிவாளனை முக்கியமான‌ உதாரணமாக  முன்வைத்து, அவர் மீதான தண்டனை மிக அநியாயமானது என்கிற வாதத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதுதான்; அதுதான் உண்மைக்கு அருகில் வருவதும் கூட. அந்த நியாயமான வேலையைத்தான் தமிழ்தேசிய பார்வை கொண்டவர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய முன்னெடுப்பிற்கு எதிராக‌  ஷோபாசக்தி, &lt;a href="http://www.jeyamohan.in/?p=20229"&gt;ஜெயமோகன்&lt;/a&gt;, &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_27.html"&gt;பத்ரி &lt;/a&gt;போன்றவர்கள் (நான் வாசித்த வரையில்) எழுதியுள்ளனர்.  ஷோபாசக்தியின் வாதம் அவரது அரசியல் அப்செஷன் என்று நான் கருதுகிறேன். அதை விரிவாக எழுதுவது இன்றய சூழலில் தேவையில்லை என்று நினைக்கிறேன். பத்ரியும், ஜெயமோகனும் இந்த‌ மரண தண்டனையை எதிர்ப்பதாக‌ சொன்னாலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் அவ்வாறு பிரச்சாரம் செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.  எப்படி என்று எனக்கு புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'பேரறிவாளன் ஒரு சதித்திட்டக் குற்றவாளிதான், ஆனால் மரண தண்டனை கூடாது என்பத‌னால்  அவருக்கான தண்டனையை எதிர்க்க வேண்டும்' என்று ஒரு பிரச்சாரத்தை மட்டும் செய்து, அவர் அப்பாவி என்பதை சொல்லாமல் மக்களிடம் சென்றால் என்னவகையில் அது  நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? இன்னமும் போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும், குற்றவாளிகள் அடித்து கொல்லப்படுவதை ஆதரிக்கும் மனம் கொண்டவர்கள் நம்  வெகுஜன மக்கள். தர்மபுரி வழக்கு தீர்ப்பில் மக்கள் மன நிலை என்ன?  'தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும்.' என்று பத்ரியே எழுதுகிறார். ஆனால் 'குற்றத்தில் பங்கு உண்மைதான், மரண தண்டனை மட்டும் கூடாது' என்று பிராசாரம் செய்யவேண்டும், அதுதான் நேர்விளைவுகளை தரும் என்று வலையுறுத்துவதில் என்ன லாஜிக் வைத்திருக்கிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி வழக்கில் கூட ஒருவேளை மக்கள் வேறு மாதிரி யோசிக்கலாம்; தேசிய உணர்வு, ராஜீவின் பிம்பம், அந்த கொடூர பயங்கரவாத செயல் தமிழகம் முழுக்க பரப்பிய அதிர்வின் நினைவுகள், எல்லாம் சேர்ந்து மக்கள் கருத்தை இன்னமும் எதிர்மறையாகவே ஆக்கும்.  மேலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்கிற போது அதைத்தான் ஆதாரங்களுடன் முன்னெடுக்க வேண்டும். ஜெயமோகனும் பத்ரியும் பேரறிவாளன் குற்றவாளிதான் என்று நினைப்பதற்கான வாதம் எதையும் தனியாக தரவில்லை. மற்றவர்களை ஆதாரபூர்வமாக எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள், பேரறிவாளனின் பங்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை பொருட்படுத்தவில்லை. 'நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது, அதில் மேல் மட்டத்தில் ஊழல் இருக்காது' என்பது மட்டுமே ஜெமொ வாதம். பத்ரி ரகோத்தமன் வேறு மாதிரி சொல்கிறார் என்று ஒரு வாதத்தை சொல்கிறார். அது என்ன வேறு மாதிரி என்பதை சொல்வதில்லை.  எத்தனையோ பேர்களை பத்ரியும், ஜெயமோகனும் வாதங்களையும், ஆதாரங்களையும் தராமல் ஒப்பேத்துவதை சாடுவார்கள். முக்கியமான ஒரு விஷயத்தில் இவர்களுக்கு மட்டும் அந்த பொறுப்பும், கட்டாயங்களும் கிடையாது. போகிற‌ போக்கில் எதையாவது சொல்வதும், நீதிமன்றம் சொன்னால் சரி என்கிற வாதம் போதுமானது. உண்மையிலேயே மனசாட்சி நெருடவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதய சூழலில் இது குறித்த விவாதத்தில் இறங்குவது தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகள் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது ஒரு துவக்கம் மட்டுமே; தமிழ் தேசிய சொல்லாடல்களை ஏற்காதவர்களும் இந்த மரணதண்டனைக்கு எதிரான குரலையும் ஒலிக்கும்போதுதான் இதற்கான நியாயம் வலுப்பெறும் என்று ஜெயமோகனை போலவே நானும் நினைக்கிறேன்.  குறிப்பாக ஜெயலலிதா மனமிரங்க நிர்பந்தம் வரவேண்டுமானால், தீவிர தமிழ் தேசியவாதிகள் தவிர, மற்ற பலர் தங்கள் குரலை ஒலிக்கவேண்டும். அப்படி யாரும் தீவிரமாக ஒலிக்காத‌ நிலையில், பேசாதவர்களை குற்றம் சொல்லாமல், தமிழ் தேசியவாதிகள்தான் அதற்கும் காரணம் என்கிற வழக்கமான விநோதமான தர்க்கத்தில் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்பேடு உண்ணாவிரதப் போராட்டம், ஊடக கவனத்தை பெற்று வரும் வேளையில் இது போன்ற‌ கருத்துக்கள்தான் உண்மையாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். வேறு சிலரும் இதே போல பேசத்தொடங்கிய நிலையில் பொதுக்கருத்தை உருவாக்குவதில் என் சிறிய பங்காக, இந்த பிரச்சனையில் கடமை என்று நினைத்து  இந்த எதிர்வினை. 8000 பேர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள்  ஒரு 200 பேராவது என் பதிவை வாசிக்க மாட்டார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மரண தண்டனை நிகழக்கூடாது என்பதுதான் இவர்களின் முக்கியமான   அக்கறையாக இருக்கும் பட்சத்தில், அதை எதிர்க்கும் காரணங்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும். ஜெயமோகன் பதிவில் முன்னிலைபடுத்தப்படும் கருத்து என்னவென்று வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். எனக்கும் தமிழ் தேசியவாதிகள் மீது மட்டுமின்றி, அவர்கள் போரட்டத்தை முன்னெடுப்பதிலும் விமர்சனம் உண்டு.   நமது முக்கிய நோக்கமான மரணதண்டனைக்கு எதிரான கருத்தை உருவாக்குதல் என்ற நோக்கத்திற்கு தீங்கிழைக்காதவரை அந்த விமர்சனங்கள் இப்போதைக்கு முக்கியமனவை அல்ல. நான் மட்டுமல்ல,  தமிழரல்லாத‌ மனித உரிமையாளர்கள், முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷ் இந்த தண்டனையை தாங்கள் எதிர்ப்பதற்கான வாதங்களை முக்கியப்படுத்தி பேசினார்களே ஒழிய, எதிர்ப்பதை ஒரு பாயிண்டாக சொல்லிவிட்டு, தங்களுக்கு தமிழ் தேசிய‌த்துடன் இருக்கும் பிரச்சனைகளை பேசவில்லை.  தமிழ்தேசியவாதிகள் ஒரு தீவிர அரசியலை கோஷ்டிகானமாக ஒலிக்கும்போது பல பிரச்சனைகள் நமக்கு இருக்கத்தான் செய்யும். (ஷோபாசக்தி போல் 'சாத்தியமற்ற அரசியலை' பேசாமல்) நடைமுறை அரசியலை தொடர்ந்து வலியுறுத்தும் பத்ரிக்கு மரணதண்டனை எதிர்ப்புதான் முக்கியம் என்றால், பிரச்சனைகளை விடுத்து விளைவுகளில்தான் கவனம் இருக்க வேன்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் முறையாவது சொல்லியாகிவிட்டது; பேரறிவாளன் மீது  சாட்டப்பட்ட குற்றம் அவர் 'பேட்டரி வாங்கி கொடுத்தது'; அதற்கான ஆதராம் அவரே தடா சட்டத்தின் நடைமுறையில் கொடுத்த போலீஸ் வாக்குமூலம். இதற்கு மேல் அவர் மீது குற்ற நிரூபணத்திற்கு வேறு ஏதாவது ஆதாரம் இருப்பதாக தீர்ப்பிலோ, வேறு வகையிலே தெரிந்தால் பத்ரியும், ஜெயமோகனும் முன்வைக்க வேண்டும். அதை செய்யாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டதால் சரி என்பது என்னவகை அறிவு பூர்வமான அணுகுமுறை? அல்லது தடாசட்டத்தின் கொடூரமான நடைமுறையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை  ஆதாரம் என்கிறார்களா?  'சோ'வாக இருந்தால் தயங்காமல் அதை சொல்லுவார். ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் குறித்த பிரச்சனைகளில் நாம் கடுமையாக இருப்பதுதான் சரியான அணுகுமுறை என்று நினப்பவர் அவர்; மரணதண்டனையின்  இருப்பிற்கும்  தீவிர ஆதரவாளர் அவர். அதே போல ஜெமோவும், பத்ரியும் பேசிவிட்டால் எனக்கு பிரச்சனையில்லை. (பிரச்சனையில்லை என்றால் அவர்களை எதிர்கொள்ளும் பிரச்சனை இல்லை.) மாறாக மனிதாபிமானமும், மனித உரிமையும் சேர்த்து பேசுவதால்தான் பிரச்சனை. ஆகையால் ஜெமோவும், பத்ரியும்  நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மட்டும்  உண்மை என்றும்,  ரகோத்தமன் என்னிடம் தனிப்பட்ட சொன்னார் என்று போகிற போக்கில் சொல்லாமல், பேரறிவாளனை ஏன் குற்றவாளிகளாக கருதுகிறார்கள் என்று சொல்வதுதான் நேர்மையாக இருக்கும். சொல்லும்பட்சத்தில் என் கருத்தை பரிசீலிக்க தயராக இருக்கிறேன். எழுத்தில் நேர்மையாக இல்லாமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால் நாளை இடதுசாரிகள், தமிழ்தேசியவாதிகளின் அறிவுநேர்மை குறித்து பாடம் எடுக்க மட்டும் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது பேட்டரி வாங்கி கொடுத்தது உண்மையாகவே இருந்தாலும், சதி திட்டத்தை தெரிந்து பங்குவகித்ததான முடிவுக்கு வரமுடியாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்தாலும்  குற்றத்துடன் வகித்த பங்கின் தீவிரம் சார்ந்துதான் தீர்ப்பளிக்க முடியும். எந்தவகையில் பார்த்தாலும், மரண தண்டனையை ஒப்புக் கொள்ளும் சட்டகத்திலேயே கூட,  இதற்கு மரண தண்டனை அதீதமானது,   அநியாயமானது என்பதைத்தான் எந்த அறிவு நேர்மை கொண்டவரும்  முடிவிற்கு வரமுடியும். மாறாக பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகள் இப்படி நியாயம் பேசக்கூடாது என்று நினைத்தார்களானல் அதை தெளிவாக சொல்ல வேண்டும். அடைப்படையில் மனிதாபிமானம்தான் எழுத்தோட்டமாக உள்ளதாக காண்பித்துக் கொள்ளக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;உயர் மட்ட நீதிபதிகளின் தீர்ப்பு நியாயமானதாக இருக்கும் என்பதற்கு ஜெயமோகன் சொல்லும் காரணம் அங்கே ஊழலின்மை; ஆனால் ஊழல் என்பதல்ல முக்கிய பிரச்சனை. நீதியின் கடவுள்தன்மை கொண்டிராத மனிதர்களான நீதிப‌திகளின் மனச்சாய்வும், அவர்கள் கொண்டிருக்கும்  முன்னபிப்பிராயம், நம்பிக்கைகள், வழக்கின் அரசியல் பின்னணியும், மைய இந்திய அரசும் அங்கீகரிக்கும் கொள்கை எல்லாம் தீர்ப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. யாரும் நீதித்துறையின் ஊழல் காரணமாக இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளதாக இதுவ‌ரை சொல்லவில்லை. சாயப்பட்டரை வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வரை நியாயமான ஊழலற்ற  தீர்ப்பு வந்தால் கூட‌, ராஜிவ் போன்ற ஒரு அரசியல் கொலை வழக்கில் எல்லாம் நீதியுடன் இருக்கும் என்பது ஒரு வாதமே இல்லை. , 'மக்களின் வெகுஜன உண‌ர்வை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை  ஒரு காரணமாக சொல்வதையும் கவனிக்க வேண்டும். சட்டமே நியாயமற்று இருப்பது என்று ஒரு யதார்த்தம் இருக்கக்கூடும் என்பது போல, நேர்மை என்பதாக  பயன்படுத்தப்படும் நீதியே  கூட அநீதியாக இருக்க முடியும்.&lt;br /&gt;.&lt;br /&gt; "அப்சல் குரு போன்று  பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது" என்று மனசாட்சியே இல்லாமல்  எழுதுகிறார் ஜெமோ. பின்னணி எதுவும் புரியாத வாசகர் வாசித்தால், அப்சல் நேரடியாக பாராளுமன்ற தாக்குதலில் பங்கெடுத்தது  போல தோன்றும். ஆனால் அவர் சதித்திட்டத்தில் பங்கு உள்ள‌தாக கூட நேரடி ஆதாரம் கிடையாது.  ஒரு செல்போன் உரையாடல் என்கிற சந்தர்ப்பவாத சாட்சியம்  மட்டுமே அவரை சம்பந்தப்படுத்துவது; பேரறிவாளன் விஷயத்தில் அதுவுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனை போல நானும் தமிழ்தேசியம் பேசாத அறிஞர்கள், சான்றோர்கள், பிரமுககர்கள் இந்த மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்பவேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்.  'தமிழ் தேசியவாதிகள் முன்னெடுக்கிறார்கள்; அதனால் மற்ற‌வர்களால் பேசமுடியவில்லை' என்பது நியாயமான வாதம் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மீது மிச்சமிருக்கும் மரியாதையால் சொல்கிறேன். 'ஓர் எழுத்தாளனாக அவரது  எளிய சொற்கள் எந்த  பொதுக்கருத்தை உருவாக்குகிறது என்று மனசாட்சியுடன் சொல்லட்டும். ஜெயமோகனின் பதிவை படித்து மரண தண்டனை கொடூர‌மானது என்ற முடிவுக்கு வந்து பொதுக்கருத்து உருவாகி எதிர்க்குமா, அல்லது உண்மையில் சதியில்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்தான் தண்டிக்கபடுகிறார்கள் என்ற மனச்சமாதானம் கிடைக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வினை முடிந்து மீண்டும் பதிவிற்கு வருகிறேன். மரண தண்டனை நாகரீக சமுதாயத்தில் ஏற்கமுடியாது என்ற அடிப்படையில் இந்த மூவருக்கான தண்டனையை எதிர்த்தாலும், அநீதியான மரண தண்டனையை அனுமதிப்பது நம் சமூகத்தின் கூட்டுக் குற்றம் என்றவகையில்,  பேரறிவாளனின் தரப்பை தூக்கிபிடிப்பது முக்கியமாகிறது. பேரறிவாளனுக்கு தண்டனை குறைப்பு நடந்தால், அது மற்றவர்களின் தண்டனை குறைப்பிற்கு  சாதகமாகும்; பின் மற்ற மரணதண்டனை கைதிகளுக்கு சாதகமாகும். இப்போதைக்கு நம்பி காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய மற்ற பதிவுகள்:&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2011/08/blog-post_27.html"&gt;&lt;br /&gt;மரணதண்டனைக்கு எதிராக‌.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2011/08/blog-post_19.html"&gt;அரசியல் தூய்மையும், அரசியல் செயல்பாடும், உரையாடலும...&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2011/08/blog-post.html"&gt;மரணதண்டனை குறித்து சில துளிகள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-905634009257574080?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/905634009257574080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=905634009257574080' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/905634009257574080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/905634009257574080'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2011/08/blog-post.html' title='நம் கூட்டுக் கொலை.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-400454489052999596</id><published>2011-03-10T02:56:00.000+09:00</published><updated>2011-03-10T02:58:07.049+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக மீனவர்'/><title type='text'>மீனவர் ராஜா முகமது.</title><content type='html'>கடந்த மாதம், 'இலங்கை கடற்பரப்பில்' மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 'ஈழத்து மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட' செய்தியை நாம் அறிவோம். முதலில் 106 மீனவர்களும், தொடர்ந்து இன்னமும் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இந்த சிறைபிடிப்பிற்கு உந்துதலாகவும், பின்னியக்கும் சக்தியாகவும் இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருந்ததாக பரவலாக நம்பப் படுகிறது.  செய்தி வாசிக்கும் பொது மனத்தால் இதில் அதிகம் கவனம் செலுத்தப் படாத செய்தி, சிறை பிடிக்கும் போது தப்பிக்க முயன்ற மீனவர்களின் படகுகள் மீது, பெட்ரோல் வெடிகுண்டுகளை இலங்கை மீனவர்கள் வீசி தாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திகளின் பின்னால், நாம் கவனத்திற்கு வரவே வராத சம்பவம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து,  அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம்.  அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-OnfkzHBYjt4/TXe8NJt2kWI/AAAAAAAAABk/F-DYiqVieHI/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-OnfkzHBYjt4/TXe8NJt2kWI/AAAAAAAAABk/F-DYiqVieHI/s320/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582137197281579362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் குறைந்த பட்ச சரியான நியாயம் என்பது இலங்கை அரசு ராஜ முகமதிற்கு தேவையான மருத்துவ செலவுகளையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும். மேலும் அவரது ஒரு கை அசைக்க இயலாத நிலையில் இருப்பதால்,  அவர் மீண்டும் தொழிலுக்கு போக இயலுமா என்பதும் கேள்விக்குறியே. இதற்கான இழப்புத் தொகையையும் இலங்கை அரசு அளிப்பதே சரியான நீதியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு வாய்த்த மாநில, மத்திய அரசுகள் இருக்கும் லட்சணத்தில் இப்படி ஒரு நியாயமும் நீதியும் கிட்டுவதற்கு முயற்சிக்கும் லட்சியக் கனவு கூட நாம் காண இயலாது. மத்திய அரசும் இதுவரை (நேரில் விசாரித்த வகையிலும்) எந்த உதவியும், இழப்பீடும் அளித்ததாக கேள்விப்பட்டது இல்லை. இந்நிலையில் தமிழக அரசை நோக்கி ராஜமுகமதிற்கு உதவுவதற்கு கோரிக்கை வைப்பதும், நிர்பந்திப்பதுமே நாம் முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் உள்ள செயல். தமிழக அரசு எவ்வளவு கையாலகாமலும், துரோக தன்மையும் கொண்டதாயினும், தன் அரசியல் சுய நலம் கருதியாயினும் பாதிக்கப்பட்ட மீனவர்க்கு உதவும் சாத்தியம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்படும் மீனவர்களுக்கு எல்லாம் நாம் உதவ நினைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. மேலும் நம்முடைய அரசியல் செயல்பாடு இந்த அநியாயங்களுக்கு நீதி கிட்டுவதாகவும், அநியாயங்களை எதிர்காலத்தில் தடுப்பதாகவும் இருக்க வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட மீனவர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி செய்வதாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில பாதிக்கப்பட்ட ராஜா முகமதிற்கு இத்தகைய அரசியல் நிலைபாடுகளை விட வசதியுடையவர்கள் அளிக்கும் உதவி பயனுள்ளதாக இருக்கக் கூடும். ஆகையால் இந்த பதிவை வாசிக்கும் நல்ல மனம் கொண்டவர்கள் ராஜமுகமதிற்கு உதவ விரும்பினால் என்னையோ, மா,சிவக்குமாரையோ அணுகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட அளவு நண்பர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்தால், நேரடியாக மீண்டும் ஜெகதாபட்டினம் சென்று, ராஜா முகமதின் துணையாரிடம் நிதியை அளிக்க முடியும். உதவுபவர்களின் விபரங்கள், அளித்த தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;உதவ விரும்புபவர்கள் என்னை அல்லது மா.சிவக்குமாரை தொடர்பு கொள்ள:&lt;br /&gt;&lt;br /&gt;அலைபேசி எண்: 8489681589&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: rosavasanth at gmail dot  com , masivakumar at gmail dot com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-400454489052999596?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/400454489052999596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=400454489052999596' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/400454489052999596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/400454489052999596'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2011/03/blog-post_561.html' title='மீனவர் ராஜா முகமது.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OnfkzHBYjt4/TXe8NJt2kWI/AAAAAAAAABk/F-DYiqVieHI/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-7150804538582730133</id><published>2011-03-09T01:31:00.005+09:00</published><updated>2011-03-09T02:45:28.365+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக மீனவர்'/><title type='text'>மீனவர் பாதுகாப்பு வலைப்பதிவு.</title><content type='html'>கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களாக எதிர்தரப்பில் முன்வைக்கப்படும் நியாயங்களும் வாதங்களும் எதுவாக இருந்தாலும், இது அடிப்படையில் மானுட விரோதத் தன்மை கொண்ட, அடிப்படை மனிததன்மையற்ற, எந்த சமூகத்தின் பார்வையின் அறத்திலும் எதிர்க்கப் படவேண்டியதாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு நேரப்படும் துன்பங்களின் உச்சப் புள்ளியாக, அது கொலையில் முடிவுறும்போது மட்டுமே அது ஒரு செய்தியாக மாறுகிறது. அதுவும் இப்போதுதான் நிகழ்கிறது. 90களில் கூட மீனவர் சுடப்பட்டு இறப்பது, தினத்தந்தி போன்ற வெகுஜன பத்திரிகையில் மட்டுமே வரும் செய்தியாக இருந்தது. அப்போதய தமிழ் நாட்டு ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு இந்த செய்திகள் தீண்டத்தகாததாக இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு ஆறுதல் அளிக்கும் இன்றய சூழலிலும், கொலைச் சம்பவங்கள் தவிர, வலையை அறுத்தல், பச்சை மீனை/உப்பை திங்க வைப்பது, பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டு போதல், GPS போன்ற கருவிகளை பறித்தல், அடித்து உடல் ரீதியாக துன்புறுத்துதல், படகை சேதம் செய்தல், கட்டாய ஒருபாலின கலவியில் ஈடுபட வைத்தல் போன்றவை செய்திகளாக மாறுவதில்லை.  இத்தகைய எல்லா செய்திகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் &lt;a href="http://tnmeenavar.blogspot.com/"&gt;இந்த தளம்&lt;/a&gt; தொடங்கப்பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர் மீதான அத்துமீறல்களாக எந்த சம்பவம் நடந்தாலும், இந்த தளத்திற்கான அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சம்பவம் குறித்த காலம், இடம் போன்ற குறைந்த பட்ச தகவல்கள் இருப்பது அவசியம். செய்தி அளிப்பவரின் அடிப்படை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்பு செய்தி வலையேற்றப்படும். மற்றபடி செய்திகள் அளிப்பவரின் பார்வையில் அவரில் மொழிதலில் பதியப் பெறுபவை. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மீனவர் பிரச்சனையை நேரில் புரிந்து கொள்ளும் முயற்சியாக, நாகப்பட்டினம் தொடங்கி ராமேஸ்வரம் வரை பல மீனவ கிராமங்களில் பயணித்த போது, இந்த எண்ணை சில மீனவர்களிடமும், மீனவ தலைவர்கள், களப்பணியாளர்களிடமும் அளித்துள்ளோம். இவை தவிர தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் செய்திகளையும் இங்கே அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பு கொள்ள வேண்டிய எண் 8489681589.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் முகவரிகள்:  masivakumar at gmail dot com அல்லது rosavasanth at gmail dot com&lt;br /&gt;&lt;br /&gt;(at என்பது @ஐ குறிக்கும் என்பதும், dot என்பது .ஐ குறிக்கும் என்பதும் சொல்ல வேண்டியதில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;http://tnmeenavar.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-7150804538582730133?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/7150804538582730133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=7150804538582730133' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7150804538582730133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7150804538582730133'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2011/03/blog-post.html' title='மீனவர் பாதுகாப்பு வலைப்பதிவு.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-1861108442291115271</id><published>2011-02-07T04:13:00.002+09:00</published><updated>2011-02-07T04:30:23.203+09:00</updated><title type='text'>#tnfisherman அரசியல்.</title><content type='html'>'தமிழ்' என்ற சொல் குறிக்கும் கருத்துருவங்களால் வழி நடத்தப்பட்ட  பல அரசியல்கள், இதுவரை அளித்த ஏமாற்றம், துரோகம், அலுப்புகள் அநேகம். இவைகளை தாண்டி வெவ்வேறு அரசியல் மனம் கொண்டவர்கள் இணைந்து, இணையத்தில்- குறிப்பாக ட்விட்டரில்- காட்டிய #tnfisherman எழுச்சியும், எதிர்ப்பும் மிகவும் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது; அதாவது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரான அரசியல் கொண்டவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தருவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பல நூறு முறை செய்தியாக அறிந்த போது வராத கூட்டுக் கோபம், இந்த முறை வந்ததற்கான காரணங்களை ஆராய்வது அத்தனை முக்கியமில்லை.  இப்படி ஒரு சந்தர்ப்பத்தை சரியான வகையில் பயன்படுத்தி தமிழ் மீனவர்களின் நிரந்தர பாதுகாப்பை நோக்கி திடமாக ஏதாவது செய்ய முனைவதுதான் இப்போது முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எழுச்சியை திட்டமிட்டவர் நண்பர் TBCD என்று நினைக்கிறேன்; பிரகாஷ் வெங்கடேசனுக்கும் முக்கிய பங்குண்டு என்று அறிகிறேன். இதற்கான பேச்சுக்கள் கீச்சுகளாக வந்தபோது நான் இணையத்தில் இல்லை; அதனால் TBCD, பிரகாஷுடன், வேறு யாருக்கு துவக்கியதில் பங்கு இருந்தாலும் அவர்களுக்கும், இந்த பிரச்சனையில் ஆண்டுக்கணக்கான கொதிப்பு கொண்டவன் என்றமுறையில் என் வாழ்த்துக்களும் நன்றிகளும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சூழலில் இது போன்ற வேகங்கள் தோன்றுவது இது முதல் முறையல்ல. இந்த வேகமும், எழுச்சியும் நீர்த்து போகாமல், வேறு போக்கில் கடத்தப்படாமல் இருப்பதுதான் இந்த தருணத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய  விஷயம். 'ஆக்க பூர்வம்' என்று நாம் பொதுவாக குறிக்கும் ஒன்றை நோக்கி இந்த உணர்வை எப்படி மாற்றபோகிறோம் என்பது நம் முன்னிருக்கும் இப்போதய கேள்வி. எனக்கும் அதற்கான தெளிவான பதில்கள் கிடையாது. பதிலை நோக்கி பயணிக்க அக்கறை கொண்ட அனைவரும் உரையாடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் உருவான எழுச்சி செயல்பாட்டிற்கான ஒரு உற்சாகமான சந்தர்ப்பத்தை அமைத்து தருகிறது. இணைய செயல்பாடுகள் என்பது நடைமுறை அரசியல் என்று ஒன்றிற்கு இணையாக, துணையாக நடக்க வேண்டியதே தவிர, நடைமுறை செயல்பாட்டை பதிலீடு செய்யக்கூடியது அல்ல.  இதுவரை திருட்டு மௌனம் சாதித்து வந்தவர்களை ட்விட்டர் எழுச்சி சாடியுள்ளது; நிலவும் கள்ளச் சூழலில், இந்த பிரச்சனையை பற்றி எதுவும் அறியாதவர்கள், எதுவும் பேசாதவர்கள் மனசாட்சியை தட்டியிருக்கிறது; அந்த வரை நல்ல விஷயம். இதை மட்டுமே தொடர்ந்து செய்வதில் பயனும் அர்த்தமும் இல்லை.  அடுத்த கட்டத்திற்கு இணைய செயல்பாட்டை கொண்டு செல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில், வழக்கமான- ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த தீவிர பிரச்சனை குறித்த விவாதமாக- மெரீனா பதிவர் சந்திப்பு நடந்தது. அது குறித்த பதிவை &lt;a href="http://www.twitlonger.com/show/8g8uc1"&gt;பத்ரியும்&lt;/a&gt;, &lt;a href="http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html"&gt;கும்மியும்&lt;/a&gt;, &lt;a href="http://sharankay.wordpress.com/2011/01/31/neythal-kurippugal/"&gt;ஷரன்கேயும் &lt;/a&gt;எழுதியுள்ளனர். அதில் விவாதித்துள்ள நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே கும்மியும், பத்ரியும் குறிப்புகளாக எழுதியிருந்தாலும், மீண்டும் நமக்கு நாமே புதுப்பித்து கொள்ள, விவாதித்த கருத்துக்களுடன் என் இப்போதய கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன். தொடர்ந்து இன்னமும் பல பதிவுகளை எழுதும் உத்தேசமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முழுமையாக ஆதாரங்களை இணையத்தில் ஆவணப்படுத்துவது.  ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக இலங்கையில் இருந்து வரும் ஊடகங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பொய் பிரசாரத்தை மட்டுமே செய்து வரும் 'இந்து' போன்ற பத்திரிகைகள் அளிக்கும் செய்திகளை ஆதாரபூர்வமாக, ஒரு சுட்டியை அளித்து மறுக்கும் வசதியை உருவாக்குவது; இது தவிர, உதாரணமாக சூர்யநாராயணன் தனது கட்டுரையில் சுடப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையை நூற்றிச் சொச்சமாக சொல்கிறார். இது போன்ற தகவல் பிழைகளை நாம் உடனடியாக மறுத்து எதிர்வினையாற்றும் வசதியை இணையத்தில் உருவாக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் முதல் கட்ட வேலை கொல்லப்பட்ட 537 மீனவர்கள் பற்றிய முடிந்தவரை தகவல்களை இணையத்தில் ஏற்றுவது. 2006 வரை கொல்லப்பட்ட முன்னூறு(+) மீனவர்களின் தகவல்களை அருள் என்ற மீனவர் சங்க தலைவர் நாளை அளிப்பதாக சொல்லியுள்ளார். அதிகப்படியாக கடந்த 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். சீமான் தனது கட்சியினர் மூலம் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்பு ஏற்படுத்தி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இறப்பு என்பது மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் துன்பங்களில், ஒரு உச்ச நிகழ்ச்சி என்கிற அளவில், செய்தியாக மாறுகிற ஒரு துளி யதார்த்தம் மட்டுமே. குண்டடி பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், வேறு பல கொடூரங்களை அனுபவித்து நினைவில் கொண்டிருப்பவர்கள், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள், பாலியல் வக்கிரங்களை அனுபவித்தவர்கள், பணரீதியில் கோடிக்கணக்கான நஷ்டங்கள் என்று எண்ணற்ற கதைகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அவைகள் மீனவர்களின் வாய்மொழியில் பதிவு செய்யப்பட வேண்டும். முடிந்தவரை அதற்கான ஆதாரங்கள் (உதாரணமாக அங்கத்தை இழந்த, காயமடைந்த மீனவரின் புகைப்படம்) ஆங்கிலத்தில் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட வேண்டும். யூ ட்யூப் போன்றவற்றிலும், www.savefisherman.org போன்ற தளங்களில் ஒட்டு மொத்தமாகவும், தேடி கண்டுபிடிக்கும் வசதிகளுடன் இணையத்தில் ஏற்றப் படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்கள் சங்க தலைவர்களிடம் இந்த தகவல்களை விசாரிக்கும்போது  'ஈமெயில் குட்தீங்கன்னா வசதியா இருக்கும்' என்றார். நவீன மூன்னேற்றங்களுடன் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும் இன்றய கட்டத்தில், நேரடியாக அவர்களை இணைய செயல்பாட்டில் பங்கெடுக்க வைக்க முடிந்த வகையில் முயலவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;2. இந்த பிரச்சனை குறித்து இதுவரை வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள் குறித்த தகவல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும். இணையக்கட்டுரை என்றால் சுட்டியளிக்க வேண்டும். இணையத்தில் இல்லாத புத்தகங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்; முடிந்தால் அதன் முக்கிய பகுதிகளையாவது இணையத்தில் ஏற்ற வேண்டும். (என் கைவசம் மறவன் புலவு சச்சிதானந்தன் எழுதிய குறும் புத்தகம் மட்டுமே உள்ளது. ) பலவகை செய்திகளை வகைப்படுத்தி, முக்கிய ஆதரங்களை மட்டும் வரிசைப்படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர முக்கிய பிரச்சனைகளை, தகவல்களை, ஆதாரங்களை மையப்படுத்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் கொண்டு வரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;3. பல என்ஜிவோக்களின் ஈடுபாடுகள் குறித்த பயம், சந்தேகம் அந்த பகுதி மக்கள் மற்றும் இயக்கங்களிடம் இருப்பதால், பாதிக்கப் பட்ட மக்களை நாம் அணுகுவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரலாம். உரிய நபர்களின் தொடர்புகளை கொண்டு, அந்த மக்களின் பேட்டிகளை, வாக்குமூலங்களை பதிவு செய்து இணையத்தில் ஏற்ற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சீமானின் rhetoric மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும், அவர் எங்களிடம் வாக்களித்தபடி தொடர்புகளை தன் கட்சியினர் மூலம் ஏற்படுத்தி தந்தால், மிக முக்கியமான உதவியாக இருக்கும். இதற்காக அந்த பகுதிகளுக்கு (உடன் வரத் தயாராக இருக்கும்  நண்பர்களுடன்) சென்றுவர நான் தயாராக இருக்கிறேன். இந்த விஷயங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை சந்தித்து-பதிவர்களுடனும், மற்றவர்களுடனும் உரையாட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;4. ஊடகங்களில் தொடர்பு உள்ளவர்கள் தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்த செய்திகளும், விவாதங்களும் இடம்பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து வாசித்தவரை ஒரு தமிழ் எதிர்ப்பு பத்திரிகையாகவே நான் பார்த்து வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா, தமிழக அவதாரத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து முக்கிய செய்திகளை அளிக்க முன்வருவது ஆரோக்கியமான அறிகுறிதான். &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட முக்கியமானது நம்மில் பலர் தொடர்ந்து மீனவர் மீதான தாக்குதல்கள் குறித்த பொய் பிரச்சாரங்கள், திசை திருப்பல்கள் குறித்து தொடர்ந்து எதிர்வினை செய்வது. மீனவர் மீதான கரிசனம் கொண்டு எழுதப்படுவதாக சொல்லி கொள்ளும் கட்டுரைகளும் சில திரித்தல்களை கொண்டிருப்பதை நாம் அறியலாம். அவை அனைத்தையும் தர்க்க பூர்வமாக மறுத்து, பொதுவான தளத்தில், (அடுத்த முறை ஒரு சுட்டியளிப்பது மூலமாக மறுக்கும் வசதியாக) ஏற்றி வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் 'இந்து' பத்திரிகையின் பொய்பிரசாரத்திற்கு எதிரான எதிர்வினைகளை நாம் மிக தீவிரமாக எடுக்க வேண்டியுள்ளது. இந்துவை புறக்கணிக்க சொல்வதோ, திட்டுவதோ மட்டும் போதுமானவை அல்ல. 'இந்து' பத்திரிகை  இன்னமும் இடதுசாரி பிம்பம் கொண்டதாகவே பல ஆங்கில அறிவுஜீவிகளால் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் பல EPW அறிவுஜீகளிடம் இந்து முக்கிய பாதிப்பை செலுத்துவதை நாம் உணரவேண்டும். மிகவும் விசித்திரமாக இஸ்லாமியர் மீதான குஜராத் தாக்குதல் தொடங்கி, நர்மதா பிரச்சனை வரை, இந்து ஒரு முற்போக்கு பிம்பத்தை தனது செய்திகள் கட்டுரைகள் மூலம் தக்க வைத்திருக்கிறது; ஈழப்பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற தமிழ் சார்ந்த பிரச்சனைகள் தவிர, மற்ற பிரச்சனைகளில் அது ஒரு இடதுசாரி முற்போக்கு பிம்பத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பதை காணலாம்; சாம்ஸ்கி இந்தியா வரும்போதெல்லாம் இந்து பேட்டி வெளியிடுவது (அவர் இந்து ராம் வீட்டில்தான் தங்குவதாக கேள்வி) போன்றவற்றை ஒரு உதாரணமாக சொல்லலாம். இடதுசாரி அரசியலை கொண்ட பெரும் கூட்டத்தை, இந்து பத்திரிகை கருத்தை விதைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்திருப்பதையும், இந்துத்வாவதிகள் இந்துவை  திட்டுவதும்,  இந்த பிம்பத்துடன் முரணின்றி பொருந்தி வருவதையும் கவனிக்க வேண்டும். இலங்கை தொடர்புடைய பிரச்சனைகளில் மட்டும் இந்து ஏன் இத்தனை கேவலமான, அயோக்கியத்தனமாக பொய்பிரச்சரத்தில் இயங்கி வருகிறது என்பதற்கு இன்னமும் முழுமையான காரணம் புரியவில்லை. அதை முழுமையாக புரிவது அத்தனை முக்கியமில்லை என்றாலும், இந்துவின் அயோக்கியத்தனத்தை இந்திய மனித உரிமையாளர்கள் செய்தியாகவும், ஆதாரங்களாவும் நம்புவதை உடைக்கும் முக்கிய பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. ஈழப்பிரச்சனையில் இந்துவின் முகமுடியை கிழிப்பதைவிட, தமிழக மீனவர் பிரச்சனையில் கிழிப்பது எளிதானது; ஆதாரபூர்வமாக செய்யக் கூடியது; இங்கே உடைக்கப்படும் வாதங்களும், அழிக்கப்படும் பிம்பங்களும் ஈழப்பிரச்சனையிலும் இந்துவின் முகமுடியை கிழிக்கவும் உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. வழக்குகள் தொடுப்பதன் மூலம் சட்டரீதியாக இந்த பிரச்சனையை அணுகுவது குறித்த விரிவான சாத்தியங்களை விவாதிக்க வேண்டும். இதுவரை பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வழக்காடப்படாமல் இருப்பதாக கேள்விப்படுகிறோம். அது குறித்த தகவல்களை திரட்டுவதும், மேலெடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;என் கருத்துப்படி வழக்கின் எதிரியாக(குற்றம் சாட்டுவதாக) ஆளும் இந்திய அரசை முன்வைக்க வேண்டும்; அது சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன். இந்திய குடிமகன்கள் மீது  தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனம் கூட வலிமையான குரலில் எழுப்பாத அரசாங்கத்தையே எதிரியாக்க வேண்டும். அவ்வாறு வழக்கு தொடுப்பதற்கான சாத்தியங்களை சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக இந்த வாரம் (பத்ரியின் முனைப்பில்) ஏற்பாடு செய்வதாக இருந்த கூட்டம் நடைபெறவில்லை. அடுத்த சில வாரங்களின் இறுதியிலாவது ஏற்பாடு செய்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு இட்டு செல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் பேசப்பட்ட முயற்சிகளுக்கான முக்கிய பங்களிப்பை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். வேறு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று உலகமெங்கும் இருக்கும் இந்த பிரச்சனை குறித்து ஆர்வமுள்ளவர்கள், அவர்களே முடிவு செய்து செயலில் இறங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஷ்மா ஸ்வராஜ் இந்த பிரச்சனையை ஒரு அரசியலாக்குவாரா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் அவ்வாறு காங்கிரசுக்கு எதிரான ஒரு அரசியலாக இதை உருவாக்கினால் அதை ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்க வேண்டும். காங்கிரசும், இந்திய இடது சாரிகளும் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேசப்போவதில்லை. காங்கிரஸ் இதில் முக்கிய அடிப்படை எதிரி; இடதுசாரிகளுக்கு பல பிரச்சனைகள். இந்நிலையில் பாஜக இதை அரசியலாக்கினால் இந்த பிரச்சனை பேசப்படுவது மட்டுமின்றி, மீனவர் மீதான தாக்குதல்கள் தற்காலிகமானவேனும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 2009 முள்ளி வாய்க்கால் முடிவு, இந்திய தேர்தல்கள் முடிவுகள் வெளிவருவரை காத்திருக்கும் அளவிற்கான, இவர்களிடையேயான ஒத்துழைப்பை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தவகையில் பாஜக இந்த பிரச்சனையை கையெலெடுப்பதை நாம் வரவேற்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் பாஜக  தீவிரமாக கையிலெடுக்குமா எனபது இன்னமும் பல காரணங்களால் எனக்கு சந்தேகமாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு &lt;a href="http://www.savetnfishermen.org/?p=124"&gt;அளிக்கப் பட்ட மனுவை&lt;/a&gt; சுஷ்மா முழுவதும் படித்திருப்பாரா என்பதே நிச்சயமில்லை. ஆனால் அரசியல் செய்ய முடிவு செய்தால் நிச்சயம் வாசிப்பார்; காத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கும்மி ஏற்பாட்டில் சில மீனவ சங்க தலைவர்களை சந்தித்து, விண்டீவி புகழ் டி.எஸ்.மணி துணையுடன் உரையாடினோம். அது குறித்த பதிவை அடுத்து இடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-1861108442291115271?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/1861108442291115271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=1861108442291115271' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1861108442291115271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1861108442291115271'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2011/02/tnfisherman.html' title='#tnfisherman அரசியல்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-5109638899503831367</id><published>2010-12-29T17:25:00.005+09:00</published><updated>2010-12-29T18:21:42.695+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெகுசினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நந்தலாலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>நந்தலாலா- சில குறிப்புகள்.</title><content type='html'>இணையத்தின் பரபரப்பு முழுக்க ஓய்ந்து, ‘மன்மதன் அம்பு’ பற்றி எல்லோரும்  பேசத் தொடங்கிய பின்னர்,  ‘நந்தலாலா’ பார்த்தேன். சார்பாகவும், எதிராகவும் இருந்த முன் அபிப்பிராயங்கள் தேய்ந்து, எதிர்பார்ப்பின்றி பார்த்தவகையில், எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியை அளித்த படம்.  ‘சிறந்த தமிழ்ப் படங்கள்’ என்ற தனிப்பட்ட பட்டியலில் வைக்க வேண்டிய படமாக நந்தலாலாவைக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவுக்கு விமர்சனம் எழுதுவது ஒருவகையில் ஆபாசச் செயலாக மாறிவிட்டதாக நான் கருதும் நிலையில், படத்தை விமர்சிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. திரைப்படத்தை விட, சுவாரசியமான கலாசார ஆய்வுக்கு ஏற்றதாக நந்தலாலாவுக்கு வந்த விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றையும் இங்கே பிரித்து மேய்ந்து ஆராயப் போவதில்லை என்றாலும், அதை ஒட்டி சில விஷயங்களைச் சொல்வதுதான் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதா தொடங்கி வைத்த விமர்சனம் எவ்வளவு பொய்யானது என்று இப்போது விளக்க வேண்டிய தேவை இல்லை; அவரே திறம்படச் செய்து வருகிறார்.  கிகுஜுரோவின் தழுவல் அல்ல என்று வாதாடிய அவரே, ‘மிஷ்கின் உண்மை பேசுவாரா?’ என்று, ஒன்றரை மாதம் முன்பு தான் மறுத்து வந்த ஒரு செய்திக்குச் சுட்டி அளிப்பதை ஒரு மகா அபத்த உதாரணமாகச் சொல்லலாம். இந்த நிலையில் சாருவின் விமர்சனத்தால் உந்தப்பட்டு வந்த போலியான பெரிதுபடுத்தல்களை எல்லாம் சீரியஸாக எடுத்து விவாதிக்கவும் எதிர்வினை வைக்கவும் நியாயம் எதுவும் இல்லை.  தமிழ்ச் சூழல் பற்றி நாம் புலம்பக் கூடிய இன்னொரு தருணத்துக்கு அதை ஒத்தி வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் நந்தலாலாவைத் தமிழின் முதல் கலைப்படம் என்கிறார். கலைப்படம் என்பதை அவர் எவ்வாறு வகைப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள, துப்பு ஏதாவது கொடுத்தால்தான், ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று நாம் தெளிவடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கலைப்படம்’ என்பதாகக் கருதக் கூடிய வகையில் எடுக்கப்பட்ட படங்கள் மொத்தமாகத் தமிழில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தேறக்கூடும். அவை எல்லாவற்றையும் முக்கியமற்றதாக ஒருவர் நினைக்கலாம்; ஆனால் அந்தப் படங்கள் கலைப்படம் அல்ல என்று சொல்ல அது போதுமான காரணம் அல்ல. ஏனெனில் ‘கலைப்படம்’ என்று நாம் அழைப்பது ஒரு வகைப்படுத்தலே அன்றி, தரம், ரசனை சார்ந்து முன்வைப்பது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் மட்டுமின்றி, வேறு சிலரும் நந்தலாலாவைத் தமிழ் சினிமாவின் தொடர்சியாக அல்லாமல், தமிழில் ஒரு புதிய தொடக்கமாக, கலைப்படம் என்பதாகச் சொல்கிறார்கள். பலருக்கும் ‘நந்தலாலா’ கிகுஜுரோ என்ற ஜப்பானியப் படத்தின் தழுவல் என்பதுதான் பிரச்னையாக இருக்கிறதே தவிர, தமிழில் இதற்கு முன்னால் இல்லாமல் புதிய நிகழ்வாக நந்தலாலாவைச் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவைக் கலைப்படம் என்ற வகைப்படுத்தலில் எந்த வரையறையின்படியும் அடக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு கலைப்படம் என்ற சட்டகத்தில் அது எடுக்கப்படவும் இல்லை. மேலும் கலைப்படமாக அது இருப்பதில் எந்தத் தனிச்சிறப்பும் நந்தலாலாவுக்கு இல்லை; பத்தாயிரக்கணக்கான படங்களின் வரிசையில் ஆகக் கீழாக அது இருக்கக் கூடும். மாறாக தமிழ்ப் படங்களின் தொடர்ச்சியில் ‘நந்தலாலா’ நிகழ்ந்திருப்பதுதான் அதன் சிறப்பு; அதை நிகழ்த்தியிருப்பதுதான் மிஷ்கினின் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;புனைவானாலும் சினிமாவானாலும் வகைப்படுத்துவது என்பது யதார்த்தத்தை அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைச் சார்ந்து அமைகிறது. (பலமுறை பலர் சொல்லி அலுத்து விட்டாலும், இன்னமும் சிலர் நியூட்டன் காலத்துப் பழைமைவாதிகளாக இருப்பதால்) அதற்கு முன்  நாம் உணரவேண்டியது, புனைவின் மூலம், அதைவிடக் குறிப்பாக சினிமாவின் மூலம் யதார்த்தத்தைப் படம் பிடிப்பது என்பது முழுமையாக மட்டுமல்ல, எவ்வித அர்த்தத்திலும் நிறைவாகவும் சாத்தியமற்ற ஒரு விஷயம். ஒரு கலை, மெய் யதார்த்தத்தின் நிழல் சுவடுகளைப் பிரதிபலிக்க முடியுமே தவிர, நிலவும் யதார்த்தத்தை அல்ல. அதே நேரம் அது யதார்த்தத்தை வாசக மனத்தில் கட்டமைக்கிறது. யதார்த்தத்தை மிக அற்புதமாகப் படம் பிடித்ததாகச் சொல்லப்படுபவை எல்லாம் உண்மையில் மிகத் திறமையாக யதார்த்தத்தைக் கட்டமைத்தவையே. கட்டமைத்த யதார்த்தத்தை நிஜ யதார்த்தமாக, மிகத் திறமையாக, இயல்புக்குப் புறம்பாக கட்டமைப்பதால், அவற்றை விமர்சனமின்றி அணுகுவது ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைப்படம் என்பது துல்லியமாக யதார்த்தத்தைப் படம் பிடித்ததாகப் பாவனை செய்வது அல்ல; யதார்த்தத்தின் சுவடுகளை, கலாபூர்வம் என்று நாம் கருதக்கூடிய வகையில் பிரதிபலிப்பது மட்டுமே; யதார்த்தத்தின் முடிச்சுகளை, கலாபூர்வமாகக் குறிப்பதே  அதன் சிறப்பு எனலாம். ஆனால் இத்தகைய வரையறையின்படி கலைப்படம் என்று இந்தியச் சூழலில் நாம் அறிந்தவற்றில் பெரும்பான்மையானவற்றை நாம் வெளியே தூக்கி எறிய வேண்டி வரும். அதனால் கலைப்படம் என்பதை, வெகுஜன சினிமாவுக்கு எதிராக ‘மாற்றுத் திரைப்படம்’ என்பதாக வழக்கம்போல ஒரு வசதிக்காக இங்கே எடுத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனரஞ்சக சினிமா என்பது கலைப்படத்துக்கு நேர் எதிரான தளத்தில் நிகழ்வது என்றாலும், அதுவும் யதார்த்தத்துடன் தொடர்பில்லாமல்,  முற்றிலும் வெளியே, வேறு மலினமான அந்தரத்தில் நிகழ்வது அல்ல. ரஜினி, விஜய், விஜயகாந்த் படமானாலும் அதுதான் உண்மை. வெகுஜன சினிமா யதார்த்தத்தின் சுவடுகளை நேரடியாகப் பிரதிபலிப்பதில்லை; எவ்வாறு உருமாற்றி எந்த இடங்களில் பிரதிபலிக்கிறது என்பது சிக்கலான பதில் கொண்ட கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி, மலையாளத்தின் சூழல் போல், கலைப்படம் என்ற ஒன்றை எடுத்து, திரையரங்கில் வெளியிட்டு, சில நாள்களேனும் ஓட்ட வைக்கும் சாத்தியம் தமிழ்ச் சூழலில் இல்லை. கன்னடத்தில் ஒரு கலைப்படத்தை ஓடவைக்க இருக்கக்கூடிய சாதகமான சூழல் கூடத் தமிழில் இல்லை. இந்த நிலையில் கலைப்படம் என்பது பிரதிபலிக்க வேண்டிய யதார்த்தத்தையும், வெகுஜன சினிமாவே பிரதிபலிக்க வேண்டிய நிர்பந்தத்தில், தமிழ்த் திரைச்சூழல் இருக்கிறது. மாற்றிச் சொன்னால் கலைப்படமாக எடுக்கப்பட்டிருக்க வேண்டியவற்றையும் வெகுஜன சினிமாவின் சட்டகத்திலேயே தமிழ்ச் சூழலில் செய்ய வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக, கலைப்பட யதார்த்தத்தை முற்றிலும் வெகுஜன சினிமாவின் சட்டகத்தில் காட்டுவதாக (90களில் உந்துதல் பெற்று) 2000க்குப் பிறகு சில படங்கள் வந்துள்ளன.  ‘நாயகன்’, ‘தேவர்மகன்’  போன்ற படங்கள் இந்தப் போக்கை நோக்கி வெகுஜன சினிமாவை நகர்த்தியதாக நாம் கருதலாம்.   ‘அழகி’ மூலம் தங்கர் பச்சான் இதை தொடங்கி வைத்தார். காதல், பள்ளிக்கூடம், பிதாமகன், புதுப்பேட்டை, வெயில், நான் கடவுள் என்று சில உதாரணங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் எந்த விதத்திலும் வெகுஜன சினிமாவின் சட்டகத்திலிருந்து துளி கூட விலகாமல், ஒரு கலைப்படத்தின் நுட்பம் கொண்டு யதார்த்தத்தைப் பிரதிபலித்த, தமிழ் சினிமாவின் தலைசிறந்த சாதனையாக ‘சுப்பிரமணியபுரத்தை’ச் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;‘சுப்பிரமணியபுரம்’ முழுக்க முழுக்க தமிழ் வெகுஜன சினிமாவின் தொடர்ச்சியாக, அதன் சட்டகத்தில் நிகழ்ந்த சாதனை என்பதைப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட விமர்சனங்களை, காமெடியாக மட்டுமே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் இன்னொரு நிகழ்வாக நந்தலாலாவின் உருவாக்கம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ளது.&lt;br /&gt;‘நந்தலாலா’ எந்த விதத்திலும் ஒரு மாற்றுப்படமோ, கலைப்படமோ அல்ல. தமிழ் வெகுஜன சினிமாவின் தொடர்ச்சியாக, தமிழ் வெகுஜன சினிமாவின் எல்லாப் பண்புகளையும் கொண்டே ‘நந்தலாலா’ உருவாகியுள்ளது; ஆனால் தமிழ் சினிமா 2000 ஆவது ஆண்டு வரை செயல்படாத ஒரு தளத்தில் செயல்படுகிறது. தனி காமெடி ட்ராக்கும், சினிமா சண்டைகளும், டூயட் பாடல்களும், ஹீரோயிசமும் இல்லாததால் ‘நந்தலாலா’ வெகுஜன சினிமாவில் இருந்து விலகியதாக அர்த்தமாகாது. இந்த ‘இல்லாமல்’ எடுக்கப்பட்டதற்கான முதல் உதாரணமும் ‘நந்தலாலா’ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவில் காண்பிக்கப்படும் கதை யதார்த்தம் முழுக்க தமிழ் வெகுஜன சினிமா சார்ந்தது. படத்தின் தொடக்கத்தில் அகி, பாஸ்கர் மணி இருவரின் நிகழ்கால வாழ்நிலையை நமக்கு உணர்த்தும் வகையில், ஒரு கலைப்படம் எந்த வகை காட்சிகளின் மூலம், எவ்வளவு நீளத்துடன்  தொடங்கியிருக்கும் என்று யோசித்தாலே இது புலப்படும். நந்தலாலாவில் காட்சிகள் நகரும் வேகமும் இணைக்கப்படும் விதமும் ஒரு கலைப்படத்துக்கு உரியது அல்ல. படத்தின் வசனங்கள் முழுக்க தமிழ் வெகுஜன சினிமாவின் யதார்த்தத்தைச் சார்ந்தவை. தியேட்டரில் வெகுஜன சினிமா ரசிகர்கள் காட்டும் உற்சாகமும் கைதட்டலும் இதற்கான நிரூபணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ‘என்ன சாதி?’ என்று கேட்கப்படும் போது, ‘மெண்டல்’ என்று பதில் சொல்வது தமிழ் சினிமாவின் ஒரு பஞ்ச் டயாலாக்தானே தவிர, கலைப்பட யதார்த்தத்தில் விளையக்கூடியது அல்ல. படம் முழுக்க உள்ள வசனங்கள் எந்த விதத்திலும் வெகுஜன சினிமாவின் சட்டகத்தைத் தாண்டாதவை. படத்தில் அனைவரது நடிப்பும் தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு வகையைச் சார்ந்தவையே. குறிப்பாக மிஷ்கின் கத்துவதும் கண்களை உருட்டுவதும்,  கடைசிக் காட்சியில் அம்மாவின் நிலையைப்  பார்த்து உணர்ச்சிகளைக் காட்டுவதும் தமிழ் வெகுஜன சினிமாவின் மிகைநடிப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவகை திரைப்படத்திலும்,  நடிப்பு என்பது யதார்த்தத்தை நிகழ்த்திக் காட்டுவது அல்ல; அது சாத்தியமும் இல்லை. கலைப்படத்தில் அது உள்ளார்ந்ததாக, அடக்கி வாசிப்பதாக, யதார்த்தமாகக் காண்பித்துக்கொள்ளும் பிரயத்தனத்துடன் இருக்கும். வெகுஜன சினிமாவில் நடிப்பு என்பது மிகைப்படுத்துவதாக இருக்கும். ஆனால் யதார்த்தத்திலிருந்து அது விலகியது அல்ல. வெகுஜன சினிமாவின் மிகை நடிப்பும்  யதார்த்தத்தையே மிகைப்படுத்துவதால் அது யதார்த்தத்தையே குறிக்கிறது.  திரைப்படத்தைத் துய்ப்பதற்குத் தேவையான சமனைக் குலைக்காதவரை மிகை நடிப்பு என்பதில் பிரச்னையில்லை; யதார்த்தமாகப் பொய்யாகத் தன்னை காட்டிக்கொள்ளும் நடிப்பை விட மிகை நடிப்பு பிரச்னையில்லாததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவில் படம் முழுக்க வெளிப்பட்டிருப்பது தமிழ் சினிமாவின் மிகை நடிப்புதான். ஆனால் அது யதார்த்தத்துடன் நம்மைத் தொடர்புபடுத்தும் சமனைக் குலைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கலைப்படமும் வெகுஜன சினிமாவும் வித்தியாசப்படும் முக்கிய இடம் வாசக திருப்தி. வெகுஜன சினிமா வாசக மனத்தை இழுத்தடித்து எதிர்பார்ப்பைத் தூண்டினாலும், ஏதோ வகையில் திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தொடர்ந்து இயங்குகிறது. இதன் பொருள் சந்தோஷமாகத் திரைப்படம் முடிவுறுவது என்பது மட்டுமல்ல; சோகமாகவும் வேறு வகையில் முடிந்தும் வாசக மனநிறைவைக் கோர முடியும். சமூக யதார்த்தத்தில் ஏற்படாத திருப்தியை, கதையில் அளிப்பது வெகுஜன சினிமா. கலை சினிமா என்பது சமூக யதார்த்தம் திருப்தி அளிக்காமல் இருப்பதைக் குறிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவின் எல்லா காட்சி அமைப்புகளும் வாசக திருப்தியை உடனுக்குடன் அளிப்பதாகவே அமையப் பெற்றிருக்கிறது; படத்தின் முடிவும் அவ்வாறே. இது தாயின் கொடுமை பற்றிய படம் என்று சாரு ‘உயிர்மை’ கட்டுரையில் காமெடி பண்ணுகிறார். தாய்மை குறித்த வாசக பிம்பத்தை பாஸ்கர் மணியின் தாய் மூலம் திருப்தி செய்வதாகவும், அவ்வாறு இல்லாமல் தனக்கான வாழ்க்கையை சுயநலத்துடன் தேர்ந்து கொண்ட அம்மாவை அகி நிராகரித்து, பாலியல் தொழிலாளியைத் தாயாக ஏற்க,  தியேட்டரில் கரகோஷத்துடன் படம் முடிவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடக்கும் சண்டையில் ஹீரோயிசம் இல்லையென்றாலும், அது தமிழ் சினிமாவின் சண்டைதான். (ஹீரோத்தனம் இல்லாத சண்டை இடம்பெறுவதற்கும் ‘நந்தலாலா’ தமிழில் முதன்முறை அல்ல.) நியாயமாக  வாங்கிய அடிகளில் எலும்பு முறிவுகள் பல ஏற்பட்டு மருத்துவமனையில் பாஸ்கர் மணி இருப்பதுதான் நிஜ யதார்த்தமாக இருக்க வேண்டும். மாறாகத் தமிழ் சினிமாவில் நாம் பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட யதார்த்தத்துக்கு ஏற்ப, அவ்வளவு வலிமையான அடிகள் திரைக்கதையில் பின்வரும் காட்சிகளில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. கலைப்பட யதார்த்தம் என்பது பாஸ்கர் மணியை அடித்துப் போட்டு, பண்ணையார் கிழவன் பாலியல் தொழிலாளியை அந்தக் காட்சியில் இழுத்துச் செல்வதாகவே இருந்திருக்கும். ‘நந்தலாலா’ கதையில் மோட்டார் பைக் குண்டு பாத்திரங்கள்  வந்து சேர்ந்து அடுத்த காட்சிக்கு இட்டுச் செல்வதும், பின் நாசர் தூங்கியபடி லாரி ஓட்டி அவர்களை அடித்து விட்டுச் செல்வதும், வாசக மனநிறைவைத் தந்ததும், தமிழ் வெகுஜன சினிமா பாணியில் நகர்ந்த கதையின் யதார்த்தம். இன்னும்  பல காரணங்களும் உதாரணங்களும் படம் முழுவதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் ‘நந்தலாலா’ தமிழ் வெகுஜன சினிமாவின் தொடர்ச்சியில் உருவான ஒன்றே தவிர, அதற்கு எதிராகவோ மாற்றாகவோ ஆன ஒரு  போக்கின் உதாரணம் அல்ல; ‘நந்தலாலா’ செயல்படும் தளத்துக்கும் முன்னோடி திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் உண்டு; 70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் பின்னணி இன்றி இது நிகழ்ந்திருக்க சாத்தியமும் இல்லை. சில விமர்சனங்களைப் போல, மிஷ்கினும் ஒருவேளை வேறுமாதிரி நம்பினால், அவரிடம் இதை எடுத்துச் சொல்வதுதான் அவருக்கு நன்மை செய்வதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நந்தலாலா’ ஒரு தமிழ் வெகுஜன சினிமாப் படம்தான் என்பதை நேர்மறையான பொருளிலேயே நான் இங்கு முன்வைக்கிறேன். அதனால்தான் இந்தப் படம் முக்கியமானதாகிறது. தமிழ் வெகுஜன சினிமா ரசிகர்களுக்காக அல்லாமல் எடுக்கப்பட்டு, எங்கோ ஒரு திரைப்பட விழாவில், ஸப் டைட்டில்கள் மூலம் யாரோ ரசித்ததாகக் கற்பித்துக்கொண்டு, ஏதோ காரணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசும் கிடைத்தால், அது என்னைப் பொறுத்தவரை எந்த விதத்திலும் கலை, கலாசாரம் சார்ந்த முக்கிய நிகழ்வு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தமிழ் வெகுஜன சினிமாவைச் சேர்ந்த படத்துக்கு, அதன் சட்டகத்தில் மிக அற்புதமான இசையை இளையராஜா அளித்திருக்கிறார். மீண்டும்  தமிழ் சினிமா சட்டகத்தை மீறாமல், அதற்குள் ஒரு மேதைக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியதைத் தந்திருக்கிறார். ‘இளையராஜா இல்லாமல் நந்தலாலா  இல்லை’ என்று மிஷ்கின் சொல்வதில் எந்த மிகையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தற்கொலைப் படையை உருவாக்கும் அளவுக்கு இளையராஜா மீது அதீத பற்றுகொண்ட கூட்டம் இங்கே இருக்கிறது. அவர்கள் எதிர்பார்த்து தவம் கிடப்பதற்கு வரம் எளிதில் கிடைப்பதில்லை. அதனால் ‘நந்தலாலா’ போன்ற நிகழ்வுகளின்போது  சற்று மிகையாக அதைக் கொண்டாடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஏற்கெனவே அளித்த பல அற்புதங்களின் தொடர்ச்சியாக இந்தப் படத்திலும் இசையளித்திருக்கிறார். இது, இதற்கு முன்னால் நடக்காத அதிசயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு கலைப்பட வகை  சார்ந்த பின்னணி இசையை எதிர்பார்த்துப் பார்ப்பவர்களுக்கு, படத்தின்  ஒரு பாத்திரமாகப் பரவிய இசை சில இடங்களில் நெருடலாம். ஆனால் இது கலைப்படம் என்று சொல்வது ஒரு பொய் என்பதை உணர்ந்து, தமிழ்ப் படமாகப் பார்த்தால், மிகப் பொருத்தமான இசையை, தேவையான இசையை, இந்திய திரைப்பரப்பில் வேறு யாருக்கும் சாத்தியமாகாத இசையை இளையராஜா அளித்திருப்பதை அறியலாம். தமிழ்ப் பார்வையாளர்கள் அதை உணர்ந்து கொண்டதை படத்தின் போதும், படத்துக்கு வெளியிலேயான பேச்சிலும் உணர முடிகிறது. மிஷ்கினும் அதை உணர்ந்து இளயராஜாவுக்கு உரிய மரியாதை செய்திருப்பது மகிழ்வைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் தெரியும் என்பதற்குத் தடயம் எதையும் வைத்திராதவர்கள் சொல்வதை, ஒரு ஜனநாயக உரிமையாகச் சொல்வதற்கு அவர்களுக்கு அளித்து விட்டு, புறக்கணிப்பதைத் தவிர செய்ய வேண்டியது வேறு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிகுஜுரோ நான் இன்னமும் பார்க்கவில்லை. நந்தலாலா கிகுஜிரோ என்ற படத்தின் தழுவலா, எவ்வளவு தூரம் தழுவல், எத்தனை விழுக்காடு ஒரிஜினல் என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக என் பார்வையில் இல்லை. ஒரு தமிழ்ப் படமாக அது வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் முக்கியம். வணிகரீதியில் எந்த அளவு வெற்றி என்பது சரியாகத் தெரியவில்லை. (மிஷ்கின் ‘இல்லை’ என்கிறார்.) ஆனால் கவனத்தை ஈர்த்த அளவில் இன்னொரு வெற்றிப்படமாகத்தான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலாவுக்கு  வந்த விமர்சனங்கள் மீதான எதிர்வினையையும் கடுப்பையும் அந்த விமர்சனங்கள் மீதுதான் காட்டவேண்டுமே தவிர, படத்தின் மீது காட்டுவதில் நியாயம் இல்லை. சில விமர்சனங்களின் போலி பெரிதுபடுத்தல்கள் தந்த எரிச்சலை, பலர் படம் பற்றிய தங்கள் கருத்தில் எதிரொலித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல படத்தைத் தந்த மிஷ்கினை, விமாலாதித்த மாமல்லன் ‘ஆர்வக் கோளாறு உள்ள முட்டாள் கலைஞன்’ என்பதாக விளித்திருப்பது,  தமிழ்ச் சிறுபத்திரிகை பாரம்பரியம் வளர்த்து வந்துள்ள நிராகரிப்பு விமர்சனம் சார்ந்த பார்வையில் விளைந்தது மட்டுமே. இதனால்  தமிழ்ச் சூழலுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது என் கருத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-5109638899503831367?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/5109638899503831367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=5109638899503831367' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/5109638899503831367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/5109638899503831367'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/12/blog-post_29.html' title='நந்தலாலா- சில குறிப்புகள்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-8633078739033397037</id><published>2010-12-13T04:09:00.014+09:00</published><updated>2010-12-29T18:20:11.475+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நந்தலாலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Parody'/><title type='text'>'நந்தலாலா' -உலகின் முதல் இருமை நிலை கலைப்படம்.</title><content type='html'>எந்த ஒரு கலைப்படைப்பும் படைப்பாளி என்று கருதப்படும் ஆசிரியனால் உருவாக்கப்படுவது அல்ல.  படைப்பு  தன்னை தானேயும் உருவாக்கி கொள்வதும் இல்லை. இலக்கிய படைப்பு என்பதே வாசகர்களால் ஒட்டுமொத்த வாசிப்பின் முரணியக்கத்தின்  மூலம் உருவாக்கிக் கொள்ளப்படுவது மட்டுமே என்பதுதான்  இன்றய காலகட்டத்து புரிதல்.  ஒரு படைப்பு எவ்வாறு உருவாகிறது, எந்நிலையில் உருவாகியுள்ளது என்பதல்ல நமக்கு முக்கியம்; ஒரு படைப்பு சார்ந்த வாசிப்பு எவ்வாறெல்லாம் உருவாகின்றன என்பதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய படைப்பாக்க சவால்.  இந்தகைய புதிய கோட்பாட்டு புரிதலுடன் 'நந்தலாலா' திரைப்படத்தை அணுகுவதற்கு சுழி போடுவதே இந்த விமர்சனத்தின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலா திரைப்பட உருவாக்கம்  சார்ந்த வேலைகளை மிஷ்கின் எப்போதோ முடித்துவிட்டு படத்தை வெளியிடுவதிலான சில சிக்கல்களில் மாட்டியிருந்ததாக  சொல்லி வந்தார்கள். மிஷ்கினும் கூட அப்படி சொல்லி வந்தார். ஆனால் இது ஒரு சரியான கூற்று அல்ல. அவர் படப் பிரதியை திரையிட்ட பின்புதான் திரைப்பட உருவாக்க வேலைகளில் ஈடுபடத் துவங்கினார் என்று சொல்வதே கோட்பாட்டுச் சரியான கூற்று.   &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் முதலில்  வெளியாகியதும் திரை அரங்குகளில் அல்ல. முதன் முதலாக 'நந்தலாலா' என்கிற திரைப்படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்து விட்டு,  எழுத்தாளர் சாரு நிவேதிதா கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் முன்னால் கட்டுரை ஒன்றை எழுதியதில்தான் திரைப்படத்தின் முதல் பிரதி உருவாகிறது. அதற்கு பிறகு  தொடர்ந்து அரசல் புரசலாக விவாதிக்கப்பட்டு வந்து, ஷாஜி, மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, பிரபஞ்சன்  கலந்து கொண்ட கலைஞர் தொலைக்காட்சி கலந்துரையாடல் மூலம் மெருகூட்டப்பட்ட புதிய பிரதி உருவாகுகிறது. இந்த பிரதியின் துணையுடன் பலரால் வாசிக்கப்பட்டு,  'நந்தலாலா' என்கிற கலைப்படைப்பு ஒரு நிலையில் உருவாகி எழுவதை நாம் காணலாம். இதற்கு நேர் எதிரான நிலையிலும் 'நந்தலாலா' என்கிற கலைப்படைப்பு உருவாகிறது என்பதுதான் இந்த படைப்பின் விசித்திரமும், மாயமும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக நந்தலாலா (எதிர்)இருமை நிலைகளில் உருவாகும் உலகின் முதல் கலைத் திரைப்படம் ஆகிறது.  இதை குவாண்ட நிலை திரைப்படம் என்று சொல்வது க்ளிஷேயாகவும், awkward ஆகவும் இருப்பது மட்டுமின்றி, பிழையான மெடாஃபிசிகல் பொருளையும் தர வல்லது என்பதால், பொருத்தமான புதிய சொல் கிடைக்கும் வரை இருமை நிலை கலைப்படம் என்றே அழைக்கிறேன். உலகின் இருமை நிலை கலைப்படத்திற்கு ஒரே ஒரு உதாரணமாக நந்தலாலா மட்டுமே நம்மிடையே இருப்பதால், உதாரணங்களுக்கும் மேற்கோள்களுக்கும் இந்த திரைப்படத்தை சார்ந்தே இயங்கிவேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் ஆளாகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் மெடாவாசிப்பு என்கிற கருத்தக்கத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பிரதியை நேரடியாக வாசிக்காமல் வாசிப்பது மெடாவாசிப்பு. உதாரணமாக   நான் இன்னமும் 'நந்தலாலா' பார்க்கவில்லை;  ஆனால் பார்த்துவிட்டேன். இதென்னடா 'வரும்.. ஆனா வராது'  என்கிற சினிமா வசனம் போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கக் கூடாது. தமிழ் சினிமா வசனங்கள் நம் அன்றாட யதார்த்தத்தை கட்டமைப்பதுடன் கொச்சையும் படுத்துவதினாலும் ஏற்படும் உளவியல் சிக்கல்தான் இது. 'நந்தலாலா' என்கிற திரைப்பட பிரதியை நான் நேரடியாக  வாசிக்கவில்லை; ஆனால் விமர்சனங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட பல நந்தலாலா பிரதிகளை வாசித்து, எனக்கான ஒரு நந்தலாலா கலைப்பிரதியை நான் உருவாக்கியிருப்பதுதான் மெடாவாசிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 'நந்தலாலா'  'கிகிஜுரோ' என்கிற ஜப்பானிய திரைப்படத்தின் காப்பி என்கிறார்கள். இதை போன்ற ஒரு அபத்தமான ஒரு குற்றச்சாட்டை என் விமர்சன வாழ்வில் நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை. கிகிஜுரோ 1999இல் வெளியிடப்பட்டு ஜப்பானிய பார்வையாளர்களால் ஜப்பானிய மொழியிலும், சப்டைட்டில்கள் மூலமாக ஜப்பானிய மொழி அறியாத உலக பார்வையாளர்களினாலும் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படைப்பு. மாறாக கிகிஜுரோ என்ற படத்தை பார்க்காமல் -சொல்லப்போனால் அதை பற்றி கேள்விப்படக் கூட செய்யாமல்- சாருநிவேதிதா என்கிற தமிழ் எழுத்தாளர் உருவாக்கிய முதல் பிரதியில் எதிரொளித்து வெளிவந்த வாசிப்புகள் மீதான எதிர்வினைகளின் முரணியக்கத்தில் விவாதித்து பக்குவப்பட்டு வளர்ந்து சிறந்து கவனமாக  உருவான அச்சு அசலான தமிழ் கலைப்படைப்பும், அதற்கு நேர் எதிரான பிரதியாகவும் அதே நேரத்தில் இயங்கும் ஒரு கலைப்படைப்புதான் 'நந்தலாலா'. இந்த மொத்த உருவாக்கமும் தமிழ் பண்பாட்டுதளத்தில் நடைபெற்றது.  இதில் எங்கிருந்தய்யா காப்பி வந்தது?  காப்பி அடிப்பது சாத்தியமாகாத யதார்த்தத்தில் காப்பி எப்படி அடிக்க முடியும்? இந்த கூக்குரல் நம் தமிழ் சூழல் எவ்வளவு தூரம் கோட்பாட்டு வறட்சியில் உள்ளது என்பதை நம் முகத்தில் அறைந்து சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கூட தமிழின்  முக்கிய எழுத்தாள நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, காட்சிக்கு காட்சி எவ்வாறு பல இடங்களில் சுடப்பட்டிருக்கிறது என்று எனக்கு விளக்கினார். கிகிஜுரோ பார்த்து விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் 'நந்தலாலா'வை பார்த்ததாக அவர் சொன்னார். அதுதான் பிரச்சனை என்பதே அவருக்கு புரியாததன் பிரச்சனைதான்  நம் சூழலின் பிரச்சனை.  கிகிஜிரோவை பார்த்து விட்டு, இன்னும் முழுமையாக உருவாகாத கலைப்பிரதியை உள்வைத்துக் கொண்டு, 'நந்தலாலா'  பார்க்கும்போது, 'நந்தலாலா' உதவியுடன்  அவருடைய  கிகிஜிரோ படைப்புருவாக்கம் முழுமையடைகிறது. இதையே அவர் காப்பி என்று கற்பிதம் செய்து கொள்கிறார். மாறாக சாருநிவேதிதா அளித்த முதல் பிரதியின் உதவியுடன்,  முன்பிரதி கற்பிதம் செய்துகொண்டு, நந்தலாலா பார்த்து பரவசம் கொண்டு, பின் கிகிஜிரோ பார்த்தால், one liner மட்டுமே பொதுவாக இருப்பது கள்ளிடை போதையாக புலப்படும். நாம் தமிழ் சூழலில் உருவாக்கிய பிரதி எங்கேயோ தாண்டி சென்று விட்டதால், மிஷ்கினும் கிகிஜிரோவை தாண்டி எங்கோ சென்று விட்டதும் புலப்படும். ('நந்தலாலா'வை கிகிஜிரோவின் தழுவல் என்று கேள்விப்பட்டதால், 'நந்தலாலா'வின் மெடாபிரதியை எனக்குள் உருவாக்கிய பின், கிகிஜிரோவையும் இணையம் மூலம் மெடா வாசிப்பு செய்து படைப்பு உருவாக்கம் செய்து கொண்டேன். இனிதான் அதையும்  என் லேப்டாப் திரையில் பார்க்க வேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது,  'காப்பியடிக்கப்பட்ட நந்தலாலா' மற்றும் 'உந்துதல் மட்டும் கொண்டு ஒரிஜினலை தாண்டிய நந்தலாலா' என்று இரு(எதிர்)நிலை நந்தலாலா பிரதிகள் வாசக பிரதி உருவாக்கத்தில் இருக்கிறது என்பதையே. கலைப்படைப்பை இந்த இரண்டு நிலைகளிலும் நாம் அங்கீகரிப்பதே பின் அமைப்பியல் புரிதல் சார்ந்த ஜனநாயகமாக இருக்க முடியும். அதே போல எல்லாவகையிலும் நந்தலாலா திரைப்படம் இரு எதிர் நிலைகளில் உருவாவதை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக நந்தலாலாவை தாய்மை பற்றிய படமாக பலர் பார்கிறார்கள். அதை மறுத்து பல வாதங்களை முன்வைத்து 'இதில் எங்கிருந்து வந்தது தாய்மை?' என்று கேட்டு எதிர் நிலையில் படைப்புருவாக்கம் செய்கிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா. துரதிர்ஷ்டவசமாக இந்த விமர்சனம் தாமதமாக பலருக்கு வாசிக்க கிடைத்ததால், பலரால் இதை ஒட்டி இந்த நிலையில் படைப்புருவாக்கம் பொதுவெளியில்(Public sphere)  நிகழ்த்த இயலாமல் போய்விட்டது; அவர்கள் பொதுப்புத்தி சார்ந்து தாய்மை பற்றிய படமாக உருவாக்கம் செய்துவிட்டார்கள். ஆனாலும் தங்கள் தனி வெளியில் (private space) அவர்கள் இந்த சாருநிவேதிதாவின் பிரதியின் மீது, மீள் பிரதிபலித்து,  தங்களுக்கான மீள் படைப்பாக்கம் செய்வார்கள் என்பது நிச்சயம். அந்த வகையில் 'தாய்மை' பற்றிய படமாகவும்,  அவ்வாறு அல்லாத படமாகவும் இரு நிலைகளின் அதற்கான சம நியாயங்களுடன், சம சாத்தியங்களுடன் நந்தலாலா உருவாகி நிலைகொள்வதை காணலாம். இதே போன்று திரைக்கதை சார்ந்து இன்னும் அடுக்கலாம் என்றாலும் அதைவிட முக்கியம் மிஷ்கினை விட பெரிய எழுத்துக்களை சொந்தமாக்கிக் கொண்ட இளையராஜாவின் இசை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் காணாத அதிசயம் இந்த திரைப்படத்தின் இசை என்று பலர் சொல்லிவிட்டார்கள். அதற்கு எதிராக இளையராஜாவிற்கு இசை அமைக்கவே தெரியவில்லை என்கிற முதல் விமர்சனத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவெளியில் முன்வைத்தார். சாருநிவேதிதாவின் கருத்தை உள்வாங்கி எதிரொலித்து மேலும் சில வாசிப்புகள் வந்தன. (இங்கே பிரபல இசை விமரசகர் ஷாஜி சாரு நிவேதிதா மூலம் ஒரு விமர்சன பிரதியையும், ஜெயமோகன் மூலம் அதற்கு நேரெதிரான பிரதியையும் உருவாக்குவது இன்னொரு  மாய மொழிவிளையாட்டு (Magical Language Game).) &lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாவதற்கு முன்னால் மிஷ்கினுடன் அளித்த பேட்டியில் இளையராராஜா 'ரீ ரெகார்டிங்கில் இசையமைப்பதை விட மௌனமாக இருக்க தெரிவதே முக்கியம்' என்கிறார். மிஷ்கின் தான் பல பக்கங்கள் எழுதி,  முயற்சி செய்து,  பின் வீண் என வசனத்தை  கைவிட்டு, இளையராஜாவின் இசையை மட்டும் ஓரிடத்தில் இருக்க செய்ததாக சொல்கிறார்.  அதற்கு பதில் சொல்லும்போதும்  இளையராஜா ஸைலண்டாக சில இடங்களில் இருப்பதை முக்கியமாக சொல்கிறார். ஆனால் படைப்பாளி படைப்பை உருவாக்குவதில்லை என்பதுடன், படைப்பை பற்றி விளக்கமளிக்கும் உரிமையும் இழந்தவனாகிறான்; படைப்புருவாக்கத்தில் நாம் வாசக பங்களிப்பையே மீண்டும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அமைதியாக இருக்க வேண்டிய கட்டத்தில் எல்லாம் நாராசமாக இளையராஜா இசைத்ததாக உருவான வாசிப்பையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. மீண்டும் பின் அமைப்பியல் ஜனநாயக பூர்வமாக பார்த்தோமானால், இளையராஜா இசை உலகத்தரம்  என்கிற நிலையிலும், காட்சி ஒழுங்கை குலைக்கும் நாராசம் என்கிற எதிர் நிலையிலும் சம நியாயங்களுடன், சம நிகழ்தகவு கொண்ட சாத்தியங்களுடன் இயங்குவதை உணரலாம். (இங்கே 'உலகத் தரம்' என்பது தமிழ் பண்பாட்டு சூழல் சார்ந்த ஒரு சொல் என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஒரு புதிய பிரதியை உருவாக்கியிருக்கிறார். தாமதமாக வந்ததால் இந்த விமர்சனத்தை ஒட்டி படைப்புருவாக்கம் பொதுவெளியில் நடைபெறாவிட்டாலும், வாசக தனி வெளியில் (private space) படைப்புருவாக்கம் உருவாகி எழுவது  உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;'நந்தலாலா' உலகின் முதல் இருமை நிலை கலைப்படம் என்கிற கூற்றை நிகழ்த்திக் காட்ட (demonstrate) இன்னும் பல  கோட்பாட்டாக்கங்கள் என் கைவசம் உள்ளன.  குறிப்பாக குறியீட்டு தளத்தில் நிகழ்த்துவது எனக்கு வசதியானது என்றாலும்,  அதை நிகழ்த்தி காட்ட முயல்வது ஒரு புத்தகம் அளவிற்கு நீண்டுவிடும் என்பதால் விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.  ஆனால் நான் நிகழ்த்துவது அல்ல கூற்று. வாசககர்கள் வாசித்து உருவக்குவதுதான் படைப்பு, அதன் அடிப்படையில் முன்வைப்பதுதான் கூற்று என்பதால், ஒரு வாசகனாக நந்தலாலாவை பார்த்து விட்டு மீள்நிகழ்த்துதல் நிகழ்த்தும் முடிவில் உள்ளேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-8633078739033397037?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/8633078739033397037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=8633078739033397037' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/8633078739033397037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/8633078739033397037'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/12/blog-post.html' title='&apos;நந்தலாலா&apos; -உலகின் முதல் இருமை நிலை கலைப்படம்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-1663053784515285071</id><published>2010-11-07T05:38:00.002+09:00</published><updated>2010-11-07T05:47:05.569+09:00</updated><title type='text'>துளிப்பதிவுகள் -7</title><content type='html'>&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/11/koma.html"&gt;1. KOMA&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/11/blog-post.html"&gt;2. என் பேட்டி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/10/drauben-am-see.html"&gt;3. DRAUBEN AM SEE&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/10/sweaty-beards.html"&gt;4. Sweaty Beards.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/10/blog-post.html"&gt;5. அநாகரிகத்தை கண்டித்தல்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/08/blog-post.html"&gt;6. கோப்பையிலே குடியிருப்பு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/07/blog-post.html"&gt;7. பிச்சைக்காரர்களின் சென்னை.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-1663053784515285071?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/1663053784515285071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=1663053784515285071' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1663053784515285071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1663053784515285071'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/11/7.html' title='துளிப்பதிவுகள் -7'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-221888159873601026</id><published>2010-10-28T13:16:00.004+09:00</published><updated>2010-10-29T13:32:05.143+09:00</updated><title type='text'>தீர்ப்பு அரசியல்.</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;முன் குறிப்பு: &lt;/span&gt; தமிழ் பேப்பரில் ஐந்து பாகங்களாக வந்ததை, எதிர்கால வசதி மற்றும் விவாதம் கருதி ஒரே பதிவாக இங்கே இடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையிலுள்ள என் கருத்துக்கள் அனைத்தும் விவாதத்திற்கும், பரீசீலனைக்கும், பின் மாற்றத்திற்கும் உரியவை. அரசியல் பேசி நிலைபாடுகளை அடைவதற்கும், அரசியல் செய்வதற்குமான முரண்களை நான் என்னளவில் சில காலமாக யோசித்து வருகிறேன். அரசியல் நேரின் வன்முறை குறித்தும் பின்னூட்டங்களிலும், ட்விட்டரிலும் பேசியிருக்கிறேன். போராடுதலுக்கும் வன்முறைக்குமான தொடர்புகளையும் பிரச்சனைகளையும்,  நான்கு ஆண்டுகள் முன்னால் '&lt;a href="http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html"&gt;நர்மதா தரும் செய்தி&lt;/a&gt;' என்று ஒரு பதிவில் மேலோட்டமாக தொட்டிருக்கிறேன்.   பதிவாக்காமல் பல கருத்துக்களை என்னிடமே வைத்திருந்திருக்கிறேன்; நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். அதன் தொடர்சிதான் இந்த கட்டுரை.  &lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு நான் இவ்வாறு எழுதுவது பிரச்சனையாக இருப்பதாக தெரிகிறது. மேலோட்டமான கூட்டல் கழித்தல் சார்ந்த எளிய கேள்விகளை தவிர, தீவிர பிரச்சனைகளை யாரும்  இன்னமும் எழுப்பியதாக எனக்கு படவில்லை. சற்று காலம் எடுத்தேனும் கிளப்பினால்,  அதை கருத்துக்களாக விவாத வடிவில் அளித்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இந்த கட்டுரை குறித்து ஏற்கனவே எனக்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ( தமிழ் பேப்பரில் எழுதுவதில் உள்ளதாக சொல்லப்பட்ட பிரச்சனைகள் உட்பட), மற்றும் இந்த பதிவுக்கும் தீவிர நிலைபாட்டுடன் வரும் பின்னூட்டங்களையும், (ஒருவேளை வந்தால்,) தனிப்பதிவில் எதிர்கொண்டு என் பதில்களை தருகிறேன். இனி கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பேப்பரில் பின்னூட்டங்களுடன் வாசிக்க.&lt;br /&gt;&lt;a href="http://www.tamilpaper.net/?p=796"&gt;பகுதி 1.&lt;/a&gt;  &lt;a href="http://www.tamilpaper.net/?p=832"&gt;பகுதி 2.&lt;/a&gt;  &lt;a href="http://www.tamilpaper.net/?p=841"&gt;பகுதி 3.&lt;/a&gt;  &lt;a href="http://www.tamilpaper.net/?p=900"&gt;பகுதி 4.&lt;/a&gt;  &lt;a href="http://www.tamilpaper.net/?p=912"&gt;பகுதி 5.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தீர்ப்பு அரசியல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--- &lt;span style="font-style:italic;"&gt;ரோஸாவசந்த்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரங்களில், (தமிழ்ச் சூழலுடன் தொடர்பில்லாத) எனக்குத் தெரிந்த சில இடதுசாரிச் சிந்தனைச் சாய்வுள்ள நண்பர்களுடன் உரையாட நேரும்போதெல்லாம், ‘அயோத்தி தீர்ப்பு’ குறித்து அவர்கள் கொதிப்புடன் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கொதிப்புக்கான நியாயங்களை அடுக்குவதும், அந்த நியாயங்களைப் புரிந்துகொள்வதும் கடினமல்ல; என்றாலும் என்னால் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இந்தக் கொதிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 18 ஆண்டுகளாக, பணி நிமித்தம் தமிழ்ச் சூழலுக்கு வெளியே வசிக்கும் இடதுசாரி நண்பர்களுடன் அரசியல் பேசுவதும், அவர்களுடன் கருத்து மற்றும் உணர்வுரீதியாகப் பகிர்ந்துகொள்வதையும் ஒரு பழக்க தோஷமாகக் கொண்டிருப்பதால், நான் இவ்வாறு சொல்வதற்கு ஓர் உள்ளர்த்தம் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்கள் முன்பு, மாதக்கணக்கில் தினமும் செய்திகளுடன் தொடர்ந்த இலங்கைப் போரின் இன அழிப்பின்போது, இவர்கள் எல்லோரும் ரொம்ப சாதாரணமாக, அப்படி ஒன்று நடந்துகொண்டிருப்பது குறித்த பிரக்ஞைகூட இல்லாமல் இருந்ததை, மிகுந்த ஆத்திரத்துடன் அன்றாடம் கவனித்து வந்திருக்கிறேன். நடந்துகொண்டிருந்தவை குறித்து அவர்கள் முற்றிலும் அறியாமல் இல்லை; நேர்ப்பேச்சிலும், மின்னஞ்சல்களிலும் நானே (சில குதர்க்கக் கேள்விகள் உட்பட) சில இடையீடுகள் செய்து, பின் பயனில்லை என்று நிறுத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரம் அப்பாவி மக்கள் அன்றாடப் பயங்கரத்தின் இடையே கொல்லப்பட்ட கொடூரம் இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நடந்தபோது இல்லாத கொதிப்பை, ஒரு நிலரீதியான ஆக்கிரமிப்பை, மூன்றில் இரண்டு பங்கு அநியாயத்துடன் அங்கீகரிப்பதாகக் கருதக்கூடிய ஒரு தீர்ப்புக்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைவிட அதிகமாகக் கொதிநிலைக்குச் செல்வதைப் பார்த்து, சிரிக்கலாமா கூடாதா என்கிற அரசியல் குழப்பம் என்னுள் நிலவுகிறது. (தீர்ப்பு குறித்து தமிழ்ச் சூழலுக்குள் ஆத்திரமடைபவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவர்கள் நடிப்பதாகவோ, மிகைவினை செய்வதாகவோ நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இந்தக் கொதிப்பெல்லாம் ஒருவகை அரசியல் obsessionஆக மட்டும்தான் தெரிகிறது. முஸ்லீம் சமுதாயத்தின் நலன், உரிமை என்கிற அக்கறைகளினால் உந்தப்படுவதாக இல்லாமல், இவர்கள் தர்க்கப்படுத்தி, பின் நம்பிக்கைகள் ஆக்கிக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளினால் உந்தப்படுவதாகவே இதைக் கருத முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் அயோத்தி தீர்ப்பு வருவது குறித்துப் பெரிய அக்கறைகள் எதுவும் இல்லாத நிலையில்தான் நான் இருந்தேன். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய படுகொலைகளும் இன அழிப்பும் ஈழத்தில் நடந்தேறியபோது, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதான ஒரு நினைவை, தமிழரல்லாத அனைத்திந்திய மனம் உருவாக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராக, தமிழ் நாட்டைப் பெரிதாக பாதிக்கப் போகாத ஒரு பிரச்னை குறித்து விவாதிப்பதைத் தவிர்ப்பதும் ஓர் அரசியல் என்று கருதி வருகிறேன். குறைந்தபட்சம் எல்லா விவாதங்களிலும், ஈழத்து இன அழிப்பால் தீவிரமான மனப்பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இவ்வாறு சிலமுறையாவது சொல்லவாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அயோத்தி போன்ற ஒரு பிரச்னை வெடித்து, வட இந்தியாவில் எல்லோரும் ‘அடித்துக் கொள்ளட்டும்’ என்று யாரேனும் கருத்து சொன்னால்கூட, அதை வக்கிரம் என்று நான் சொல்ல மாட்டேன். ஈழத்தில் நடந்தவை குறித்து மௌனம் சாதிப்பதும், அதை மறுப்பதும், பொய்யான ஏமாற்று விஷயங்களைப் பேசுவதும் பேசியதும்தான் வக்கிரமே தவிர, ஒரு கோபத்தைக் குறிப்பதற்கு இவ்வாறு சொல்ல மட்டும் செய்வதில் எந்த வக்கிரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2000-த்தின் தொடக்கத்தில், அலகாபாதில் ஒன்றரை வருடம் வாழ்ந்தபோது, இந்துத்துவத்தின் தீவிர முகத்தைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து வேறுபட்ட பார்ப்பனியத்தின்/சாதியத்தின் தீவிர முகத்தை எதிர்கொண்டிருக்கிறேன். சற்றும் எதிர்பாராத ஒரு நாளில் ஷியா-சுன்னி கலவரம் மூண்டு, அதன் வெறித்தனத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பிரச்னைகள் சார்ந்த நம் அரசியல் பார்வையினால், நிரடலான உணர்வை அனுபவிக்காமல் அங்கே இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தனையும்மீறி நாம் நேசிக்கக் கூடிய ஒரு வெகுமனம் அங்குள்ள மக்களிடம் இருப்பதை உணரமுடியும். இத்தகைய முரண்பாட்டை இந்தியச் சமுதாயத்தில் பல சந்தர்ப்பங்களில் காணலாம். தேவர் சாதியைச் சேர்ந்த மூதாட்டியின் ஒரு வெறித்தனமான பேச்சுக்கு எந்த நியாயத்தையும் வழங்கமுடியாது; அதே நேரம் அவரிடம் இருக்கும் ஒரு புனிதமான வெகுமனத்தை வெறுக்க முடியாது என்கிற பக்குவத்தை நான் அடைந்துவிட்டேன். (இதை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மூதாட்டியை வைத்தும்கூட உதாரணிக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், அயோத்தி பிரச்னையின் காரணமாக ‘அவர்கள் அடித்துக்கொண்டு சாகவேண்டும்’ என்று எனக்கு ஒரு நினைப்போ, நடக்காததில் நிராசையோ உண்மையில்  இருக்கமுடியாது; இருந்ததில்லை. தவிர, தொடர்ந்து ஒரு அரசியல் நிலைப்பாடாக மட்டும், குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிப் பேசாமலும் சிந்திக்காமலும் ஒரு வீம்பைத் தொடர்வதும் சாத்தியமில்லை. குறிப்பிட்ட பிரச்னை குறித்து சிந்திப்பதும், கருத்து சொல்வதும், அந்தப் பிரச்னையின் தீவிரம் மற்றும் அக்கறை என்பதற்கு நாம் கற்பிக்கும் காரணங்களைவிட, புற உலகம் தொடர்ந்து நம்மைச் சிந்திக்கவும், கருத்துகளை (நேராகவோ, உருமாற்றியோ) பிரதிபலிக்க வைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையிலும் அயோத்தி குறித்து எனக்கான கருத்துகளை வந்தடையாமல் இருக்கவியலாது. அவ்வாறு வந்தடைந்த கருத்துகளை மேல்பரிசீலனை கருதி இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துகள் பரிசீலனைக்குரியவை, மாறக்கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி தீர்ப்பு இந்துத்துவத்துக்குச் சாதகமான தீர்ப்பா என்று ஒரு கேள்வியாகக் கேட்கக்கூட எந்த நியாயமும் இல்லை. எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்துத்துவத்துக்கு ஆதரவான, இதுவரை இந்துத்துவவாதிகள் முன்வைத்து வந்த வாதங்களை அங்கீகரிக்கும் தீர்ப்புதான். இதன் நடைமுறை ஆதாரமாக இந்துத்துவவாதிகள் தெளிவாக, தீர்ப்பு சார்ந்த தங்களின் சந்தோஷத்தையும் நிறைவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமையாகக் கோரியதில் முழு வெற்றியில்லை எனினும், எதிர்பார்த்திருந்ததற்கு அதிகமாகப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள், தீர்ப்பு சார்ந்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பெரிய கோபமோ ஆத்திரமோ அவர்களிடம் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. தீர்ப்பு வெளிவந்து சில மணி நேரங்களுக்கு, ஏதோ ஒரு முஸ்லீம் பிரதிநிதியின் கருத்தைக்கூடத் தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்து நான் அறியேன். தொலைக்காட்சிகள் தொடர்புகொள்ள முயன்றும், யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லையா, அல்லது யாரேனும் ஒரு முஸ்லிமின் கருத்தையாவது உடனடியாகப் பதிவு செய்வது அவசியம் என்று ஊடகங்கள் நினைக்கவில்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் பொதுவாக இந்தத் தீர்ப்பை ஊடகங்கள் கொண்டாடியதிலும், ஒரு சமரசத் தீர்ப்பாகக் கருத்து பிம்பத்தை உருவாக்கச் செய்த பிரயத்தனத்திலிருந்தும், இதை ஒரு நினைவுடன் கூடிய பாரபட்சமாகத்தான் கருத முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் இந்தத் தீர்ப்பை உடனடியாக எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவியதாகக் கருதமுடியும் . தங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்து, அதன் மூலமாக எதிர்கொள்ளவேண்டிய மேற்படி பிரச்னைகள் குறித்த பயத்தில் இருந்ததாலோ, அல்லது முற்றிலும் எதிர்மறையாக வரும் என்று எதிர்பார்த்ததாலோ, இப்படி ஒரு எதிர்பாராத (மூன்றில்) ரெண்டும் கெட்டான் தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு உடனடித் தெளிவின்மை இருந்ததாக ஊகிக்க முடிகிறது. ஓரிரு நாட்கள் கழித்தே அதிருப்தியை ஊடகங்களில் தெரிவிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும்கூட வட இந்திய மைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில், முஸ்லிம்களின் அதிருப்தியை நான் காணவில்லை; எல்லோருக்கும் நிறைவான தீர்ப்பு என்கிற பிரசாரம் மட்டுமே கேட்கிறது. (அவுட்லுக்கில் வந்தது மற்றும் இணையத்தில் வாசித்த சில கட்டுரைகள் தவிர.) தமிழ் சேனல்களிலும் விளிம்பு நிலையில் இருப்பது போன்றிருக்கும், ‘மக்கள்’, ‘இமயம்’, ‘வின்’ டீவிக்களில்தான் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப்  பதிவு செய்ததைக் காணமுடிந்தது. அதே நேரம் பல முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பை அப்படியே ஏற்று, வேறு பிரச்னைகளை கவனிக்க விரும்பியதாகச் சொன்னதையும் – குறிப்பாக அயோத்திவாழ் முஸ்லிம்கள் சிலரும் ஷியா அமைப்புகளும் சொன்னதையும், சிலர் இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வாய்ப்பாக வர்ணித்ததையும் நான் மறந்துவிட்டுப் பேச முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முஸ்லிம்கள் தீர்ப்பில் அதிருப்தி கொள்வதும், மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதும் இயல்பான எதிர்வினையாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, வன்முறை கலந்த பிரச்னைகள் எதுவும் வெடிக்காததில் பெருமூச்சு விட்டு, இதை இப்படியே ஏற்கவேண்டும் என்று சில முஸ்லீம்கள் சொல்வதும் இயல்பாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக, வழக்கம்போல இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களுக்குகூட இல்லாத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் எதிர்வினை செய்கின்றனர். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த உளவியலும் புரிந்துகொள்ளக்கூடியதே. அதைப் புரிந்துகொள்வது அல்லது விமரிசிப்பதைவிட, பிரச்னையின் தீர்வு என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தோமானால் அதற்கு என்ன வகையில் இந்த எதிர்வினைகள் உதவ முடியும் என்று பார்க்கவேண்டியதே முக்கியம் என்று நினைக்கிறேன். அது குறித்துப் பின்பாதியில் வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீர்ப்பு நியாயமா என்று, நமக்கான நியாயங்களை வைத்து, ஆய்ந்து உறுதியான முடிவுக்கு வர, தீர்ப்பின் 1,000 பக்கங்களையும் படிக்க வேண்டும். அந்த அளவுக்குக் கறார்த்தனம் கொண்ட மிக நிச்சயமான முடிவு தேவை என்று எனக்கு தோன்றாததால், சாராம்சமாக அறிந்ததையே எடுத்துக்கொள்கிறேன். அப்படி நோக்குகையில் இந்துத்துவச் சார்பு அரசியல் உடையவர்களைத்தவிர, மற்ற எல்லோருக்குமே இந்தத் தீர்ப்பு ஏதோ ஒருவகையில் நியாயமற்ற தீர்ப்பாகவே தோன்றமுடியும் என்றே நினைக்கிறேன். இந்த நியாயமற்ற தன்மை ‘அயோக்கியத்தனம்’ என்று ஆத்திரப்படுவதிலிருந்து, நிதானமாக விமர்சனம் செய்வதுவரை அவரவர் அரசியல்/அற/அறிவு நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். இந்தத் தீர்ப்பு குறித்த விமரிசனங்களைப் பலர் முன்வைத்துவிட்ட நிலையில், என் பார்வையில் தோன்றுவதைச் சுருக்கமாக இங்கே தொகுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்ற விசாரணை கோரி இருந்த விஷயம் சொத்தின் சட்டபூர்வமான உரிமை குறித்தது. அதில சுன்னி வக்ஃப் போர்டு தவிர்த்து, இப்போது மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்பது தெளிவான யதார்த்தம். நீதிமன்றம் வக்ஃப் வாரியத்துக்கும் சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட புனிதத் தலத்தின் சட்டப்பூர்வமான உரிமை என்பது என்ன என்பதும், அதை நிர்ணயிக்கும் வழிமுறை பற்றியும் எனக்குச் சற்று குழப்பம் நேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டுகளாக இருக்கும், தொழுகைத் தலத்துக்கான சட்டபூர்வ உரிமை, நாம் மனை நிலம் வாங்கியதன் பத்திரம் போன்ற வலுவான வடிவத்தில் ஆதாரமாக இருக்க முடியாது என்கிறபோது, சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு உரிமை இல்லை என்று கறாரான சட்டப்பூர்வக் காகித ஆதாரங்களை கொண்டு முடிவுக்கு வரமுடியுமா என்பது முதல் சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை அவர்களுக்கு உரிமை இல்லை என்றால், முஸ்லீம்களுக்கு வேறு ஏதாவது உருவில் உரிமை இருப்பதான முடிவுக்குதான் சட்டப்பூர்வமாக வரமுடியும் என்பதே இயல்பாக தோன்றுவது. அது மசூதி அல்ல ஏதோ கும்மட்டம் என்கிறார்கள் இந்துத்துவர்கள். 1949-ல் அந்த விக்கிரகங்கள் உள்ளே யாரும் அறியாமல் (அதாவது திருட்டுத்தனமாக) வைக்கப்படுவதற்கு முன்னால், அதன் மூலம் ‘வில்லங்கம் ஏற்பட்டு’ அரசாங்கத் தடை வருவதற்கு முன்னால், தொழுகை நடைபெற்ற இடத்தை மசூதி என்றுதான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. 1949-ல் நடந்த ஆக்கிரமிப்பையும், 1992-ல் நடந்த கும்பல் இடிப்பு அராஜகத்தையும் அங்கீகரிப்பதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் நம்பிக்கையை மதித்து ஏற்று, அதன் அடிப்படையில் நீதிமன்றம் இயங்க முடியுமா? அதுவும் முரணான நம்பிக்கைகள் எதிர்ப்பக்கம் வாதாடும்போது, ஒரு பக்க நம்பிக்கையை முன்வைத்து செயல்படமுடியுமா? இந்தக் கேள்வி ஒரு பக்கம். ஆனால் ராமர் அயோத்தியில் பிறந்தாரா என்கிற நம்பிக்கையை அல்ல, அந்த ‘கும்மட்டங்களுக்கு’ கீழேதான் பிறந்தார் என்கிற நம்பிக்கையை ஏற்பதாகத் தீர்ப்பு சொல்கிறது. ராமரைக் கடவுளாக ஏற்கும், அவர் அயோத்தியில் (அதாவது இந்த அயோத்தியில்தான்) பிறந்ததாக நம்பும் மக்கள் கூட்டம் மொத்தத்துக்கும் இப்படி ஒரு நம்பிக்கை தொன்றுதொட்டு இருப்பதாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில்கூட எத்தனை ராம பக்தர்கள் இப்படி ஒரு நம்பிக்கையை  – இந்துத்துவ அரசியல் தோன்றும்முன் – கொண்டிருந்தார்கள் என்று எதேனும் புள்ளிவிவரமும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நம்பிக்கையை (ராமர் அயோத்தியில் பிறந்ததை அல்ல, அந்த dome-களுக்கு இடையே பிறந்ததான நம்பிக்கையை) அங்கீகரிப்பது இந்த நீதிமன்றத்தின் தெளிவான இந்துத்துவச் சார்புக்கு உதாரணம். (வெறும் இந்துமதச் சார்பு அல்ல.) ஒரு பக்கம் மிகக் கறாரான சட்டபூர்வ உரிமை குறித்துப் பேசி, சுன்னி வக்ஃப் போர்டுக்கு உரிமை இல்லை என்பதும், மறு பக்கத்துக்கு நம்பிக்கைகளையும், பலரால் தீவிரமாக விமரிசிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வின் சான்றுகளையும் ஆதாரமாகக் கொள்ளுதல் (வக்ஃப் வாரியத்துக்கு நம்பிக்கை மட்டுமில்லாமல், யதார்த்தமான அனுபவ பாத்யதை சார்ந்த பலனைக்கூடத் தராமல்) என்று மிகுந்த பாரபட்சத்துடன்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘தொல்லியல் ஆய்வுகள்’ குறித்து பலத்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. தீர்ப்புக்குப் பல ஆண்டுகள் முன்னால் இருந்தே இருக்கின்றன. (உதாரணமாக  ஒன்று, இன்னொன்று ); இல்லை, எல்லாம் நல்லபடியாக நடந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த விமர்சனங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து உறுதியான முடிவு எதுவும் எனக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் 2003 அறிக்கையின் முடிவுகளை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தீர்ப்பின் முக்கிய ஆதாரமாகவும், நீதிமன்ற நியாயத்தைத் தர்க்கப்படுத்தவும் இந்த அறிக்கை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் 2003-ன் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஆதாரமாக, விமரிசனம் இன்றி ஏற்றுக்கொண்டால்கூட, இரண்டு முக்கியக் கேள்விகள் எழுகின்றன. முதலில் தொல்லியல் ஆய்வுகள் தரும் ஆதாரங்கள்மூலம் முன்வைக்கப்படும் முடிவுகள், எவ்வளவு நேர்மையும் கறார்த்தனமும் கொண்டிருந்தாலும், அதைச் சோதித்து தெளியும் அறிவும் திறனும் நீதிபதிகளிடம் இருந்தாலும், அது ஒரு வரலாற்று முடிவு மட்டுமே. வரலாறு என்பது சாட்சியங்களாக ஏற்கும் தேர்வு பெற்ற உண்மை அல்ல. உண்மையின் ஒரு பக்கமாக வேண்டுமானால் அதைப் பார்க்கலாம். அது, நடந்த நிகழ்வுகள் பற்றி, குறிப்பிட்ட சாராரால் எழுதப்படும் ஒரு கதையாடல். அதே ஆதாரங்களைக் கொண்டு சமானமான நேர்மையுடன், கறார்த்தனம் கொண்டு, (நேர்மாறாக இல்லாவிடினும்) இணையான ஒரு வரலாற்றை எழுத முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சாத்தியங்கள் உள்ள நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஆணையிட்டு, மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட வரலாற்று முடிவுகள் எழுதப்பட்டு, அதை ஒரு நீதிமன்றம் ஏற்பதும், அதை முன்வைத்து நீதி நல்குவதும் முறையா என்பது முதல் கேள்வி. அடுத்தது, இந்த வரலாற்று முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால்கூட, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து, இன்றைய காலகட்டத்துக்கான நியாயத்தை உருவாக்குவதை ஏற்கமுடியுமா? மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோவிலின் அமைப்பு இருந்ததாக அறிக்கை சொல்வதை ஒருவேளை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், வரலாற்றின் போக்கில் நியாயம் வழங்குவதோ, 500 ஆண்டுகளுக்கு முந்தைய உரிமையாக ஒன்றைக் கற்பித்து, அதை இன்று உரிமை கோரும் வேறு ஒரு அமைப்புக்கு வழங்குவதும் மிக விநோதமான பாரபட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனை பிரச்னைகளில் ‘நீதி’ செயல்படத் தயராக உள்ளது? அதற்கு அமைப்புரீதியாகத் தேவைப்படும் சட்டரீதியான வேலைகளும், சட்ட விரோதமான வேலைகளும், அரசியல் அலைகளும் என்னவென்று விவாதிப்பதற்கு இந்தத் தீர்ப்பு மோசமான முன்னுதாரணம். இன்னமும் இந்தத் தீர்ப்பின் நியாயமற்ற தன்மை குறித்துப் பேச நிறைய உள்ளது. பலர் பேசியுள்ளார்கள். அவற்றைப் பொதுவாக நான் ஏற்கிறேன். இங்கே அதை விரிவாகப் பேசுவதல்ல என் நோக்கம் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனதா கட்சி இத்தனை காலமாகச் செய்துவந்த அரசியலுக்கும், அதனால் அடைந்த அரசியல் லாபங்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு வெகுஜன அங்கீகாரத்தைத் தருவதுதான் இந்தத் தீர்ப்பின் மோசமான பின்விளைவு. கணிசமான உயிர்பலி கொண்ட அத்வானியின் ரதயாத்திரை, நீதிக்கான ஒரு யாத்திரைதான் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்துத்துவ சக்திகள் தங்களுக்கான நியாயங்களைத் தர்க்கப்படுத்திக்கொள்ள இந்தத் தீர்ப்பு புதிதாக உதவப் போவதில்லை. அவர்கள் ஏற்கெனவே அதைத் மிகத் திறமையாகச் செய்பவர்கள். ஆனால் அதைப் பொதுவான மதச்சார்பற்ற இந்திய மனம் முழுவதும் ஏற்றுக்கொண்டதில்லை; இந்துவாகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டாலும், தமிழகம் போன்ற பகுதிகளின் பொது வெகுமனம், இந்துத்துவா முன்வைக்கும் வாதங்களை தங்களுக்குள் கரைத்துக்கொண்டதில்லை. இனி இந்துத்துவாக்கள் பக்கம் நியாயம் இருப்பதாக இந்த வெகுமனம் கருதக்கூடும் என்ற அளவில் இந்தத் தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு மிக முக்கியமான வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு எல்லாவகையிலும் எதிர்மறையாகவே தோன்றும் இந்தத் தீர்ப்பின் ஒரே பொதிவான தன்மையாக, அதன் ஒரே ஒரு முக்கியப் பரிமாணம் மட்டும்தான் தெரிகிறது. ஒரு மிகப் பெரிய வன்முறை கலந்த பிரச்னையை நாடு மொத்தமும் எதிர்பார்த்துவந்த திகிலை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது இந்தத் தீர்ப்பு. வேறு எந்த வகையில் இந்தத் தீர்ப்பு வந்திருந்தாலும் எதிர்ப்புகளையும், மோதல்களையும், இயன்றால் ரத்த ஆற்றையும் உருவாக்கியிருக்கும். இந்தத் தீர்ப்பின் சூட்சுமமே அப்படி எதுவுமே நிகழாமல் செய்ததுதான். இதைப் புரிந்துகொள்ள, தீர்ப்புக்குமுன் எல்லோரும் மொத்தமாக எதிர்பார்த்திருந்த தயார் நிலையை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை, தீர்ப்பு எழுதியவர்கள் பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தினார்களா என்று உறுதியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையும் சமூக மோதலும் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவது அத்தனை முக்கியமல்ல; தாங்கள் அரசியல்ரீதியாகச் சரி என்று நினைப்பது அதைவிட முக்கியமானது என்று ‘மதச்சார்பற்ற’ பலரும் கருதுகின்றனர். இவ்வாறு வன்முறையின்றிக் கடந்துபோனது குறித்து பெருமூச்சு விடுவதையும், ஒரு விஷயமாகப் பொருட்படுத்திப் பேசுவதையும் பொதுப்புத்தி அல்லது பூர்ஷ்வா மனநிலை என்பதாகவெல்லாம் சிலர் சொல்கிறார்கள். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அடிப்படையில் ஒரு புண்ணாக்கும் இல்லாத ஒரு பிரச்னைக்காக, யாரும் அடித்துக்கொண்டு சாகக்கூடாது என்று நினைப்பதுதானே எல்லாவற்றையும்விட முக்கிய அக்கறையாக இருக்க முடியும்? அதை எப்படி இவ்வாறு முத்திரை குத்தமுடியும் என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தம் அரசியல் நோக்கங்களின் வெற்றிக்காக அதற்கு எதிரான அரசியலிடம் பணிவது அல்லது இடையில் ஒரு புள்ளியில் சமரசம் செய்வது ஆகியவை குறித்தெல்லாம் விழிப்புணர்வுடன் இருப்பது அரசியல் செயல்பாட்டுக்கு இன்றியமையாதது. ஆனால், அவற்றையெல்லாம்விட அக்கறை கொள்ளவேண்டியது, பயனற்ற வன்முறைகளை தவிர்ப்பது என்று நான் இன்று நினைக்கிறேன். அதற்காக எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்வதா என்ற கேள்வி எழுவது நியாயமானது. அந்தக் கேள்விக்கு அடுத்து வருவோம். அதற்குமுன், வன்முறையைத் தவிர்ப்பதை உள்ளார்ந்த முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறதா என்பது சிறு சிடுக்கல் கொண்ட கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறைகளைத் தவிர்ப்பதைத் தனது அடைப்படை நோக்கமாக இந்தத் தீர்ப்பு கொண்டதாக அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியாது; குறைந்தபட்சம் தனது தர்க்கமாக அதனை இந்தத் தீர்ப்பு எந்த இடத்திலும் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயம் அதை ஒரு இறுதி அக்கறையாகக் கொண்டிருக்கிறது. தீர்ப்பின் உள்தர்க்கமாக அல்லது தீர்ப்பின் பின்விளைவுகளாக, வன்முறையை தவிர்ப்பது பற்றி இந்தத் தீர்ப்பு நேரடியாகப் பேசவில்லை. (மேலோட்டமாக அறிந்தவரையில்) தீர்ப்பின் ஒரு சமாதான நோக்கமாக, வன்முறையை தவிர்ப்பதற்காக இப்படி மூன்றில் ஆளுக்கு ஒரு பங்கு என்ற தீர்ப்பை வந்து அடைந்ததாக எந்த இடத்திலும் தர்க்கிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புறத்தில், 1992-ல் நடந்த வன்முறை குறித்து, தீர்ப்பு பிரபஞ்ச மறதியில் நிலைத்து, எந்தக் குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கு சொத்து சார்ந்த சிவில் வழக்கு என்கிற பட்சத்தில், 1992 சம்பவம் குறித்த கிரிமினல் வழக்குடன் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால் சொத்துப் பிரச்னையைத் தாண்டி வேறு பல விஷயங்களைப் பேசும் இந்தத் தீர்ப்பு, இந்த 1992 நிகழ்வு குறித்து கண்டனமாக ஒரு கடமைக்குக்கூடச் சொல்லவில்லை என்பது வெறும் உறுத்தல் மட்டுமல்ல. மேலும் 1992 சம்பவம், பாஜகவும் மற்றவர்களும் நீதிமன்றத்தில்  ‘அந்தக் கட்டடத்துக்குத் தீர்ப்பு வரும்வரை எந்தப் பாதிப்பும் நிகழாது’ என்று அளித்த வாக்குறுதிக்குச் செய்த துரோகம். அந்த வகையில் (இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கு சாராமல்) இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு நீதிமன்ற அவமதிப்பு. ஆனால் அதைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாதது ஒரு பக்க அநியாயச் சாய்வன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் தனது உள்தர்க்கத்துக்கு முரணாகத்தான் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வக்ஃப் வாரியத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்று முடிவெடுத்தபின், மூன்றில் ஒரு பங்கு நிலத்தை வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கவேண்டிய காரணமும், தர்க்கமும், கட்டாயமும் என்ன? அல்லது மற்றவர்களுக்கும் சட்டரீதியான உரிமை இல்லாதபோது அவர்களுக்குத்தான் அந்த இடத்தை அளிப்பதற்கான தர்க்கம் என்ன? பிரச்னையில் எங்கோ திருப்தி கொள்ளவேண்டிய புள்ளியை அமைத்து, சமாதானமாகச் செல்லும் வாய்ப்பை அளிப்பதுதான் அது. இந்தச் சமரசம், சம்பந்தப்பட்ட தரப்புகள்  நீதிமன்றத்துக்கு வெளியே முயன்றிருந்தால் எட்டியிருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் உரையாடலுக்கே வாய்பில்லாத முரண்பட்ட அரசியல் சக்திகள், இத்தகைய முயற்சிக்கு வந்து சேருவதே சாத்தியமில்லாத நிலைதான் இருந்தது. அந்நிலையில் இப்படி ஒரு சமரசத்தை, சட்டத்தின் கான்க்ரீட் சுவர்களுக்கு இடையேயும், தீர்ப்பின் உள்தர்க்கத்தின் உள்ளும் கறாராகக் கையாளாமால், இந்தத் தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்துத்தனமாக முன்வைக்கிறது. சில நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து சமரசம், sophisticated நியாயத்தைவிட, சமூக அமைதியைப் பேணுவதாக இருக்கக்கூடும்; அத்தகைய சமரசத்துக்கு முரண்பட்ட சக்திகளை நீதிமன்றம் தன் நீதி அதிகாரத்தின்மூலம் கட்டாயப்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கியமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீர்ப்பு மேல் முறையீட்டுக்குச் செல்லும் என்றுதான் இப்போதைக்கு இருக்கும் நிலைமை. சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பளித்தாலும் அதற்குப் பிறகும் மறு பரிசீலனைக்கான முறையீட்டுக்கு வாய்ப்புள்ளது என்று அறிகிறேன். இந்த வகையில் சட்டரீதியான தீர்ப்புகளும் தீர்வுகளும் எப்படிப் பயணித்தாலும், தங்கள் அறுதி நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி, ஏதோ ஒரு சமரசத்தை சம்பந்தப்பட்ட சக்திகள் ஏற்பதற்கு மனத்தைத் தயார்ப்படுத்தும் முதல் படியாக இந்தத் தீர்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சமரசத்தை ஏற்காமல் அறுதி நியாயம் என்பதாக ஒன்றை முன்வைப்பதுதான் அரசியல் நிலைப்பாடு என்பது. அரசியல் நிலைப்பாடு என்பது, இணையத்தில் சும்மா எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள்கூட, பிரச்னையின்றி மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ‘லட்சிய’ நிலைப்பாடு; மாறாக அரசியல் செயல்பாடு என்பது போராடி, பேரம் பேசி, வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி, நிர்பந்தத்தை ஏற்று ஒரு சமரசப் புள்ளியில் தாற்காலிகமாகவேனும் நிறைவுகொள்வது. நேரடியாகக் களத்தில் செய்யும் அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே இத்தகையதாகவே உள்ளன. இதற்கு பெரியாரும், அம்பேத்கரும், காந்தியும், இந்துத்துவவாதிகளும்கூட விதிவிலக்கல்ல. (மாறாக அரசியல் லட்சியத்தின் முழுமையான வெற்றி என்பது யதார்த்தத்தில் ஒருவகையில் வன்முறையாகவே உருவெடுக்கக்கூடும் என்பதும் இன்னொரு விஷயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;பலதரப்பிலிருந்தும் தங்கள் அரசியலால் பூதாகாரப்படுத்தப்பட்டுள்ள அளவுக்கு, உண்மையிலேயே எந்த மக்கள் கூட்டத்துக்கும் ஒரு வாழ்வா சாவா பிரச்னையாக அயோத்திப் பிரச்னை இல்லை. மாறாக ஓர் இனக்குழுவின் இருப்பையும் அழிவையும் நிர்ணயிக்கும் அளவுக்கு மிகத் தீவிரமான ஈழப் பிரச்னையிலும், பாலஸ்தீனப் பிரச்னையிலும்கூட, பேரங்களால் ஆன சமரசப் புள்ளியில் நிறைவுகொள்வதையே இன்று அனைவரும் தீர்வாக முன்வைக்கின்றனர். பாலஸ்தீனத்துக்குத் தொடர்ந்து தார்மீக ஆதரவு தருபவர்களால், கடந்த பத்தாண்டுகளில் முன்வைக்கப்பட்ட எந்தத் தீர்வை ஒப்புக்கொண்டாலும், அது, இஸ்ரேலின் ஆக்ரமிப்பை, அத்துமீறல்களை, அடக்குமுறைகளை, மேலும் பல வரலாற்று அநியாயங்களை குறிப்பிட்ட அளவுக்கு லெஜிடிமைஸ் செய்வதாகவே இருக்கும். (ஆனால் நடைமுறையில் அத்தகைய, ஏதோ கிடைத்த நியாயம் போதும் என்கிற அளவிலான ஒரு சமரசப் புள்ளியில்கூட, ஒரு தீர்வு உருவாக முடியாமல் இருக்கிறது என்பது வேறு விஷயம்.) ஒருவகையில் இஸ்ரேல் இந்த யதார்த்தத்தை நீண்ட காலமாக மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. எந்த அத்துமீறலையும், எதிர்ப்புகள் குறித்த அலட்சியத்துடன் முதலில் செய்துவிடுவது; பிறகு அதிலிருந்து பின்வாங்க நேரிடினும், தான் செய்த அத்துமீறலின் பெரும் பகுதி அங்கீகரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகிவிடும் என்று இஸ்ரேல் புரிந்துகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தை பொருத்தவரை ‘தனி ஈழம்’ என்பதற்கு எல்லாவகை நியாயங்களும் இருக்கின்றன. ஈழப்பிரச்னை குறித்து அக்கறை கொண்ட யாராலும் அந்த நியாயங்களில் எதையும் மறுக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பலர் தனி ஈழத்தை மறுப்பதற்கான முக்கியக் காரணம், அது சாத்தியமில்லை என்பதும், அதை முன்வைத்து இன்னும் உயிர்பலிகளையும் பேரழிவுகளையும் எதிர்கொள்ள முடியாது என்பதும்தான். காஷ்மீர், அயோத்தி போன்ற பிரச்னைகளில் முழு நியாயம் என்பதான தீவிர அரசியல் நிலைப்பாட்டை வைக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள்கூட, ஈழப் பிரச்னையில் யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு தனி ஈழம் கோரிக்கை கைவிடப்படவேண்டியது என்கிறார்கள். ஆகையால் பாலஸ்தீனமானாலும் ஈழமானாலும் முழு நியாயம் என்று நம் அரசியலால் முடிவெடுக்கக்கூடிய ஒன்றிலிருந்து கீழிறங்கி, ஒரு சமரசத்தை ஒப்புக்கொள்வதுதான் யதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளும் விவேகமாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனம், ஈழத்திலாவது முழு நியாயம் என்று ஒன்றைப் பேசுவதில் கொஞ்சமாவது விவேகம் இருக்கக்கூடும். தென்னமெரிக்க, வட அமெரிக்கக் கண்டங்களில், முற்றாக இனம் அழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளில் எஞ்சியிருப்பவர்களுக்கு எந்த நியாயத்தை நாம் இன்று பேசமுடியும்? அவர்களுக்கு ஆதரவாக நாம் பேசும் எந்த விஷயத்திலும் தீர்வு, நியாயம் செய்தல் என்கிற சொல்லே மிக அபத்தமாக இருக்கும். வட அமெரிக்கா மட்டுமின்றி, இடது சாரி அரசியலைக் கொண்டிருந்த பல தென்னமெரிக்க தேசங்களிலும் பூர்வீக இந்தியர்களுக்கான நியாயங்களைப் பேசும் அரசியல் இல்லை. சிலேயில் எஸ்பானியர்களுடன் மிகத் தீவிரமாக நூற்றாண்டுக் கணக்கில் போரிட்டு, ஒரு கட்டத்தில் முழுமையாகத் தோற்ற மபூச் இனத்தவர்கள் இன்று சிதறலாக, சிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் உருவான சில குழுக்கள், சில இடங்களில், கலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலே அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது; பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் கொண்டு அவர்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பிரச்னையில் மபூச் இனத்தவர்களின் நியாயங்களைப் பேசுவது என்பது தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மபூச் இன மக்களின் இருப்புக்கு ஆதரவாகவும் பேசுவது. அவ்வாறு பேசும்போதுகூட மபூச் மக்களின் பல கலக நடவடிக்கைகளை (மக்களைக் கடத்துவது, வெடிகுண்டு வைப்பது) வெளிப்படையாக அங்கீகரிக்க முடியாது. எஸ்பானியர்கள் செய்த அனைத்து அயோக்கியத்தனங்களாலும் விளைந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதாகக்கூட நமது நியாயமான நிலைப்பாடு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் மிக மிக அபத்தமான ஒரு முரணைச் சந்திக்கிறோம். அடக்குமுறையின், அநியாயத்தின் தீவிரம் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கான நேரெதிர் தீவிரத்துடன், நாம் ஒரு கொள்கை அடிப்படையில், யதார்த்தத்தில், நியாயமான தீர்வைப் பேச முடிகிறது. அடக்குமுறை மிகக் கச்சிதமாக நடைபெறும் நிகழ்வில், நாம் நியாயம் என்று எதையும் குறைந்தபட்சமாகப் பேசக்கூட யதார்த்தம் வாய்ப்பு அளிப்பதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் நாம் மிகத் தீவிரமாக நியாயமும் தீர்வும் பேச இடம் இருக்கிறது என்றால், அதில் அத்தனை தீவிரமாக அடக்குமுறை நிகழவில்லை என்பதுதான் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;மதச்சார்பற்ற அரசியல் கொண்டவர்களுக்கு, அயோத்தி உண்மையில் எந்தப் புண்ணாக்கும் இல்லாத ஒரு பிரச்னை. சென்ற நூற்றாண்டில், 1949 ஆக்ரமிப்பையும் 1992 கும்பல் அராஜகத்தையும் தொடர்ந்த ஒரு வெறுப்பு கலந்த பிரசாரத்தை இந்துத்துவ சக்திகள் செய்தன; மற்றபடி அடிப்படையில் இது முரணான மத நம்பிக்கைகள் மோதிக்கொள்ளும் ஒரு பிரச்னை மட்டுமே. எந்த இடத்திலும் அறிவியல் அடித்தளம் கொண்டிராத இந்த மோதலில், வெற்றி/தோல்விக்கான பாதையில் வீணான அழிவை தவிர வேறு எதுவும் கிட்ட வாய்ப்பில்லை. அதைவிட முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, இந்தப் பிரச்னையில் முஸ்லீம்களும், இந்துத்துவ வாசிப்புகளை ஏற்கும் இந்துக்களும் தவிர மற்றவர்களுக்கு ஈடுபாடு காட்ட, தங்கள் நம்பிக்கைகள், அரசியல் சார்ந்த லாப நஷ்டங்கள் என்று எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக இடதுசாரி அரசியல் என்பதாக அடையாளம் கண்டுகொள்ளும் அனைவருக்கும், அரசியல் ஆர்வம் கொள்ளக்கூடிய லாபநஷ்டங்கள் என்று அயோத்திப் பிரச்னையில் எதுவும் இல்லை; ஆனாலும் அவர்கள் தங்களின் ஆதார அக்கறை சார்ந்த பிரச்னையாகக் கருதி, மிகுந்த கோபதாபத்துடன் இந்தப் பிரச்னையை அணுகுகிறார்கள். முஸ்லீம்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று நினைக்கும் இடதுசாரிகள், முஸ்லீம்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தருவது என்பது இயல்பானது. ஆனால் தார்மீக ஆதரவு என்பதை மீறிய தீவிரத்துடன் பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் இதை அணுகுவதற்கான அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு. இவ்வாறாக ஒன்றின் மீதான எதிர்ப்பின் காரணமாக தீவிர நிலைப்பாடு எடுப்பதில் இயல்புக்கு மாறாக எதுவும் இல்லை எனினும், இந்த அரசியலின் எல்லைகள், தமது ஈடுபாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவை குறித்த தெளிவுகள் இருக்கவேண்டும். யதார்த்தத்தில் இந்த வகையாக, நேரடி அரசியல் லாப நோக்கின்றி, இந்துத்துவ எதிர்ப்பு என்கிற ஒரு அரசியல் காரணமாக முஸ்லீம்களின் அரசியலை – சிலசமயம் அவர்களை விட – தீவிரமாகக் கைக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. (இந்தச் சிக்கல் இந்தப் பிரச்னையில் மட்டுமின்றி, உதாரணமாக ஈழப்போராட்டத்தின் அரசியலை வாழ்வா, சாவா தீவிரத்தோடு தமிழ்நாட்டில் இருந்து கைக்கொள்வதிலும் உள்ளதுதான்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் இடதுசாரி/பெரியாரிய அரசியலின் இந்துத்துவ எதிர்ப்புக்கும், முஸ்லீம்களின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கவனிக்கவேண்டியது முக்கியமானது. இந்துத்துவ அரசியல், முஸ்லீம்களின் இருப்புக்கு நெருக்கடி அளிக்கிறது என்கிற வகையில், முஸ்லீம் நலன் சார்ந்த எந்த அரசியலும் இந்துத்துவ அரசியலுக்கு எதிரானதாகிறது. ஆனால் அது மோதலும், பேரமும், சமரசமும், சில நேரம் உரையாடலும் கொண்ட ஒரு நேரடி அரசியல்; மாறாக இடதுசாரிகளின்/பெரியாரிஸ்டுகளின் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் என்பது இந்துத்துவவாதிகளுடன் எந்த வகை உறவும் உரையாடலும் அற்ற, அவ்வாறான உறவையே பாவம் என்று நினைக்கும் இறுக்கமான அரசியல். உதாரணமாக தமிழகத்தில் இடதுசாரியாகவும் பெரியாரிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொள்பவர் அ.மார்க்ஸ். (அவரை பின்நவீனத்துவர் என்று சொல்ல ஏனோ மனம் வரமாட்டேன் என்கிறது.) ஈழத்துப் படுகொலைகளின்போது அதற்கு எதிரான ஒரு கூட்டத்தில் திருமாவளவனும் இல.கணேசனும் ஒரு அனைத்துக் கட்சி மேடையைப் பகிர்ந்துகொண்டதை, அ.மார்க்ஸும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஒரு மாபெரும் பாவமாகத் திரும்பத் திரும்பச் சொல்வதைக் கவனிக்கவேண்டும். (ஷோபாசக்தியும் இதைச் சில முறை சொல்லியிருக்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக முஸ்லீம்கள் பா.ஜ.க.வுடன் மோதுவது மட்டுமின்றி, உரையாடுவதையும், கட்சியில் சேருவதையும், கூட்டமாக சில இடங்களில் ஓட்டு போடுவதையும்கூட தம் அரசியலின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு இந்துத்துவத் தலைவரும் ஒரு முஸ்லீம் தலைவரும் சேர்ந்து தோன்றுவது என்பது பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிக்கான குறியீடு. தவிர இஸ்லாமிய அடிப்படைவாதம் பல நேரங்களில் இந்துத்துவ அரசியலுடன் கைகோர்க்கத் தயங்கியதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். சானியா மிர்ஸாவுக்கு எதிர்ப்பு, ‘ஃபயர்’ படத்துக்கான எதிர்ப்பு ஆகியவை இவற்றுக்கான சில உதாரணங்கள்.  ‘வாட்டர்’ திரைப்பட எதிர்ப்புக்கான கூட்டமைப்பில் (வேறும் அறிக்கை சார்ந்த ஆதரவு அல்லாமல்), ஒரு இஸ்லாமிய அமைப்பும் அலாகபாத்தில் நேரடியாகப் பங்குகொண்டதைக் கண்டிருக்கிறேன். (தமிழ்ச் சூழலில் இஸ்லாமிய இதழ்களில் அ.மார்க்சுக்கு முன்பே ஜெயமோகன் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.) இவை தீவிர உதாரணங்களாக ஒருபுறம் இருக்க, இந்துத்துவ அரசியலுக்கு எதிரான முஸ்லீம்களுக்கான அரசியல் செயல்பாடு என்பது இந்துத்துவத்துடன் உரையாடும் கட்டாயத்தில் இருப்பதும், இடதுசாரிகள் அப்படிப்பட்ட கட்டாயத்தில் இல்லாது இருப்பதுமட்டுமின்றி, அதை ஒரு பாவமாகத் தவிர்ப்பதும், இந்த இரண்டு அரசியலுக்குமான முக்கிய வித்தியாசங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வித்தியாசத் தன்மையைப் புரிந்துகொள்ளும் இன்னொரு உருவக உதாரணமாக அப்துல் கலாமைச் சொல்லலாம். இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும் அப்துல் கலாமை ஒரு இந்துத்துவ விளைபொருளாகக் கருதித் தீவிரமாகத் தாக்குகின்றனர். மாறாக, பல முஸ்லீம்கள் கலாமைத் தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக, தங்களின் ஒரு பிரதிநிதியாகத்தான் கருதுகின்றனர். (பெரியாரிஸ்டுகளுடன் உறவைப் பேணும்) தமிழக முஸ்லீம்கள்கூட, கலாமைத் தங்களவராகக் காணுகிறார்களே தவிர, அவரை மற்றவராக, தங்கள் எதிரியாக, ஒரு வில்லனாகக் காணவில்லை. இந்த வித்தியாசங்களை உணர்த்த மட்டுமே இந்த உதாரணங்கள்; இன்னும் பல வித்தியாசங்களையும் அடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வித்தியாசங்களின் பின்னணியில் இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும், முஸ்லீம்கள் வெளிப்படுத்தியிராத அளவைவிட அதிகமான கோபத்துடன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவதன் பிரச்னையை அணுகவேண்டும் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் மூலம் அறிந்தவரையில், அதிருப்தியும் கோபமும் இருந்தாலும், செப்டம்பர் 30 தீர்ப்பு வந்ததும், முஸ்லீம்களின் தொடக்க எதிர்வினை, வன்முறை எதுவும் இல்லாதது குறித்த பெருமூச்சாகவே இருந்தது; மாறாக முலாயம் சிங் உட்பட்ட அரசியல்வாதிகள் ஆனாலும் சரி, இடதுசாரி அறிவுஜீவிகள் ஆனாலும் சரி, அவர்களுக்கு வன்முறை இன்றிக் கடந்து சென்றமை ஒரு பொருட்படுத்தக்கூடிய விஷயமாகவே இல்லை. இதில் முலாயம் சிங் போன்றவர்கள் செய்வது அப்பட்டமான அரசியல் மட்டுமே; ஆனால் மற்ற இடதுசாரி, பெரியாரிஸ்டுகளின் எதிர்வினைகளை நேர்மையின்மையாக, ஹிபோக்ரசியாக நான் காணவில்லை. அது முழுக்க முழுக்க அவர்களின் இந்துத்துவ எதிர்ப்பு சார்ந்த அரசியல் நிலைப்பாட்டினாலும், மேலே குறிப்பாகச் சுட்டிக்காட்டிய வித்தியாசங்களினாலும் விளைவது. ஆனால் இங்கே பிரச்னை, ‘தீர்வு’ என்று ஒன்றைத் தேர்வு செய்து, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினால், இந்த இடதுசாரி/பெரியாரிஸ்ட் அணுகுமுறை அதில் முஸ்லீம்களுக்கான நியாயங்களுக்கு ஒரு கருத்தியல்ரீதியான தார்மிக ஆதரவாக இருக்குமே ஒழிய, நடைமுறையில் இடையூறாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் பாபர் மசூதிப் பிரச்னை இந்துத்துவாக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயானது. அதில் இத்தனை வருட இந்துத்துவ அரசியல், மற்றும் அவர்களின் ஆக்ரமிப்பு அத்துமீறலுக்குப்பிறகு, இந்துத்துவாவும் முஸ்லீம் அமைப்புகளும் உரையாடாமல், எந்தத் தீர்வை நோக்கியும் பயணிக்க வாய்ப்பில்லை. அராஜகத்துடன் உரையாட முடியாது என்று சும்மா சொல்வதில் பயனில்லை. அதாவது அத்துமீறல், ஆக்ரமிப்பின் காரணமாகவே உரையாடல் தேவைப்படுகிறது; இவ்வாறு சொல்வது ‘அயோக்கியத்தனம்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் யதார்த்த நடைமுறை நோக்கு அதுதான் என்பதற்குதான் பல உதாரணங்களை முன்னே குறிப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புறநகரில் ஒரு மனை வாங்கினால் நாம்தான் வேலி போட்டு, பட்டா வாங்கி, தொடர்ந்து கண்காணித்து, நம் நிலத்தைப் பாதுகாக்கவேண்டும். எதிராளி யாரேனும் அத்துமீறி ஆக்ரமித்துவிட்டால், அந்தக் காரணத்துக்காகவே நாம் அந்த எதிராளியிடம் உரையாடலில் இறங்குவதுதான் நடைமுறை யதார்த்தம். அல்லது எதிரியை விரட்டும் பலம் இருக்கவேண்டும். மாறாக கோர்ட்டில் நீதியைத் தேடுவது என்பது, காலதாமதத்தின் காரணமாகவே அநியாயமாக முடியக்கூடும். அல்லது நில ஆவணங்களை manipulate செய்வதன்மூலம் அல்லது மற்ற தில்லுமுல்லுகள் மூலம், இழுபறி காரணமாகவும் சட்டரீதியாகக்கூட நியாயம் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் ஆக்ரமிப்பின் தீவிரம் மற்றும் நமது சக்தியின் எல்லைகளைத் தெரிந்துகொண்டு, எதிராளியிடம் உரையாடுவதுதான் நடைமுறை விவேகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி பிரச்னையும் அவ்வாறுதான் என்று இந்த தீர்ப்புக்குப் பிறகாவது தெளிவதுதான் விவேகமானது. இத்தனை ஆண்டுகாலமாக இந்துத்துவா செய்துவரும் அரசியலுக்கும், முனைப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் ஒரு விலை கொடுக்காமல் தீர்வு என்பதை நோக்கி நகர முடியாது. இவ்வாறு பேசுவதை இந்தப் பிரச்னையில் தீவிர நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்துப் பழக்கப்பட்டுவிட்டவர்களால் யோசித்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் பிரச்னையின் மிக எளிதாகப் புரியக்கூடிய பரிமாணம் ஒன்றை யோசித்துப்பார்க்குமாறு அவர்களை வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ராம ஜென்ம பூமி’ என்பதாக இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் அரசியலின் முக்கிய விளைச்சல் பலன் அவர்கள் அயோத்தியில் அடையப்போகும் சதுர அடிகளிலும், அங்கு கட்டப்போகும் கோவிலிலும் அல்ல. இத்தனை காலமாக அவர்கள் அடைந்துவரும் அரசியல்ரீதியான லாபங்கள்தான் முக்கியமான விளைச்சல் பலன்கள். விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு குறித்து 1970-களின் இறுதியில், 1980-களின் தொடக்கத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? 1990-களின் தொடக்கத்தில் அவர்கள் மைய அரசியலில் பெற்றிருந்த பாத்திரமும் அரசியல் வெளியும் என்ன? பாஜக பெரிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றதற்கும், பல திருப்புமுனைகளுக்கும், இந்த ராமர் பிரச்னை முக்கியக் காரணம். ராமர் கோவில் பிரச்னை மட்டுமே ஒரு தொடர்ந்த அரசியல் வெற்றிக்கு உதவாது என்று அறிந்துகொண்ட பாஜக, இன்று வேறு அரசியல் மேடைகளையும் பாத்திரங்களையும் வகிக்கிறது. ஆனால் எதுவும் உதாவாத ஒரு விரக்தி கணத்தில், இந்த அயோத்திப் பிரச்னையும் தீர்வுக்கு வாய்ப்பில்லாமல் முரண்பட்ட இழுப்புக்குச் செல்லும் நிலையில், அதை ஒரு வாய்ப்பாகவே பாஜக கையில் எடுக்கக்கூடும். அந்த வகையில் ஏதொ செட்டில்மெண்டில் இந்தப் பிரச்னையை முடிக்காமல் இருப்பது பாஜகவுக்குத்தான் பலனளிக்கும். தொடர்ந்து சொதப்பலான நிலைப்பாடுகளால், இந்துத்துவத்துக்கான வெளியைப் புதிது புதிதாக உருவாக்கித் தருவதை இனியும் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், இதைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். (மேலும் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்னை தொடர்வது, வருவாய் தரும் விஷயமாக இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் முஸ்லீம்கள் தங்கள் அதிருப்தியுடனேயே இந்தத் தீர்ப்பிலேயே சமாதானமாகப் போக விரும்பினால் அது மிக நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன்; மாறாக இதை மேல் முறையீட்டுக்கு எடுத்துச்செல்வதும் பிரச்னை இல்லை. ஆனால் எதோ ஒரு கட்டத்தில் சமரசமின்றி இதற்கான தீர்வை அடையமுடியாது. அதற்கான சாத்தியங்களை அவர்கள் கருத்தியல் நிர்பந்தங்கள் இன்றித் தேர்வு செய்வதற்கு, மற்ற ‘மதச்சார்பற்ற’ சக்திகள் அனுமதிக்கவேண்டும். அல்லது மற்ற மதச்சார்பற்ற சக்திகள் பேசிக்கொண்டு மட்டும் இருக்க, அவர்களின் பேச்சைக் கண்டுகொள்ளாமல், தேவையானால் இந்துத்துவ சக்திகளுடன் உரையாடி ஒரு சமரசத்துக்கு முஸ்லீம்கள் வருவதுதான் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீர்ப்பின் வெற்றியை ‘அடக்கி வாசிக்கவேண்டும்’ என்பதாக இந்துத்துவ சக்திகள் அறிவித்துக்கொண்டாலும், கொண்டாடுவது வெளிப்படையானது; அதற்கான காரணம் தீர்ப்பின் விளைவாக அவர்கள் பெற்றதைவிட, தீர்ப்பின் மூலம் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளும், இத்தனை காலச் செயல்பாடுகளும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றிருப்பதுதான். கொண்டாடுவது இயல்பானது என்றாலும், இந்த வெற்றி எந்தப் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு தரவில்லை. இந்த இடத்தில் 1992 அத்துமீறலுக்கு பொதுவாகவும், குறைந்தபட்சம் அதனால் புண்பட்ட முஸ்லீம்களிடம் ஒரு வார்த்தைக்காகவாவது இந்துத்துவவாதிகள் மன்னிப்பைக் கேட்பது, இந்தப் பிரச்னையில் முஸ்லீம்கள் சமரசத்தை ஏற்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும். ஆனால் திமிராக, 1992 செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அவர்கள் இதை எடுத்துக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் விவாதத்தை கிளப்ப வந்த, ‘இந்துத்துவ அறிவுஜீவி’யாகப் பலரால் முன்வைக்கப்படும் அரவிந்தன் நீலகண்டன், ‘இடித்ததில் தவறில்லை’ என்கிறார். அதற்கு, பல சால்ஜாப்பு வாதங்கள். இந்தக் கட்டுரையில் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசுபவர்களை முன்வைத்து, அவர்களின் அரசியல் சார்ந்த விமரிசனமாகவும் பரிந்துரைகளாகவும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளேன். இந்துத்துவாவுக்கு, பொறுப்பாக நடப்பது பற்றியும், சமரசத்தை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் பரிந்துரைகளாக ஏதும் நான் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. காலத்தின் போக்கில், இரு தரப்பினரும் சமரசத்தை நாடி உரையாடித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால், இந்தப் பொறுப்பை அவர்கள்தான் உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தனிப்பட்ட பார்வையில், தீர்ப்பின் போக்கில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களை விடுத்து, ஒருவேளை மூன்றில் இரண்டு பங்கு, அல்லது பாதியேனும் முஸ்லீம்களுக்கு அளித்திருந்தால் நான் தெளிவாக இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பேன். ஏனெனில் நாம் இந்துத்துவாவின் இத்தனை வருடச் செயல்பாட்டுக்கும், முனைப்புக்கும், அவர்கள் கொடுத்த விலைக்கும் பதிலாக ஒரு விலை கொடுக்காமல், இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த நிர்பந்தத் தளைகளை மனத்தில் கொண்டு, இந்தத் தீர்ப்பை அல்லது இதே போன்ற ஒரு சமரசத் தீர்ப்பை பின்னாளில் மற்ற இந்திய நீதியதிகாரங்களும் வழிமொழியக்கூடும் எனில், அதில் ஏதாவது ஒன்றில் சமரசம் கொள்வதுதான் விவேகம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, இந்தத் தீர்ப்பை முன்வைத்து முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டதாகவும், முஸ்லீம்களுக்கு நியாயம் என்பது கிடைக்க இங்கே வாய்ப்பே இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் பல நியாயமற்ற தன்மைகள் என்பதாகக் கருதும் விஷயங்களுக்கு ஒரு கோப எதிர்வினையாக, கொஞ்ச நாட்களுக்கு அவ்வாறு சொல்வதால் பரவாயில்லை என்றாலும், அதைத் தீவிரமாக நம்பத் தொடங்குவது யாருக்கும் நன்மை செய்யும் என்று தோன்றவில்லை. இந்தத் தீர்ப்பு ஒரு முஸ்லீம் நீதிபதியின் பார்வைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறக்க முடியாது; அது ஒருபுறம் இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கில், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அநியாயமாக கருதும் காரணத்துக்காக இந்தியாவில் நியாயம் கிடைக்கவே வாய்ப்பில்லை என்கிற பரப்புரையில் நியாயமில்லை என்பது மட்டுமல்ல; அது, இருக்கும் ஜனநாயக வாய்ப்புகளையும்கூடப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும்.&lt;br /&gt;ஒருவேளை இந்தியாவை ‘இந்து நாடு’ என்று சொன்னால் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்கிற தெளிவு வேண்டும். நிச்சயமாக சட்டத்தில் கிடைக்கும் சுதந்தரம் மற்றும் அனுபவிக்கும் உரிமைகளின் அடிப்படையில், இந்தியாவை பாகிஸ்தான், பங்காளாதேசம், அரபு நாடுகள் போல ஒரு மதத்தின் நாடாகச் சொல்லமுடியாது என்பதை மறைத்துவிட்டுப் பேசுவது நேர்மையில்லை; அவ்வாறு சொல்வதனால் அடையக்கூடிய பயனும் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா விடுதலை அடைந்த பிறகான பல புள்ளிவிவரங்களை வைத்து, முஸ்லீம்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாகப் பலர் காட்டுகிறார்கள். (அண்மையில் அ.மார்க்ஸ் வழக்கம்போல ஒரு பேட்டியில் அதைச் சொல்லியிருக்கிறார். அதில் சில இடங்களில் அறிவுரீதியான கறார் நேர்மை இல்லை என்பதை வேறு சமயத்தில் அணுக விரும்புகிறேன்.) முஸ்லீம் மக்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாக நிறுவும் நிஜமான புள்ளி விவரங்களை என்னாலும் திரட்ட முடியும் என்றுதான் நினைக்கிறேன். பிரச்னை என்னவெனில் முஸ்லீம்கள் மட்டுமின்றி, இந்தியாவின் எந்த ஒரு சமூக/இனக்குழு/சாதியினரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, சுதந்தர இந்தியாவில் இதுவரை அவர்களுக்கு அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு வருவதான புள்ளிவிவரங்களை அளிக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஏதோ ஒருவிதத்தில் கருதாத ஒரு சமூகக் கூட்டமும் (பார்ப்பனர்கள் உட்பட) இருக்க முடியும் என்று தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பிரச்னை என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள் பொய்யாக இருக்கவேண்டிய தேவையில்லை என்பதுதான். முஸ்லீம்களுக்கு அநீதி நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் விவரங்களை நான் மறுக்க வரவில்லை. அதை மீறி இந்தியாவில் அரசியல் செய்யக்கூடிய சாத்தியமும் அதற்கான வெளியும் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல விளைகிறேன். (இத்தகைய சாத்தியமும் வெளியும் தற்போதும், இதற்கு முன்னாலும் இல்லாத நாட்டுக்கான உதாரணமாக இலங்கையையும், தமிழர்களின் இருப்பு சார்ந்த பிரச்னையையும் குறிப்பிட முடியும். இந்திய ஜனநாயகம் அத்தகையது அல்ல என்பதையே இங்கே குறிப்பிடுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் இந்தியப் பொதுமக்களின் வெகுமனம், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த வெகுமனம் (சாதியரீதியாக ஒரு நோய்க்கூறு மனநிலை கொண்டதெனினும்), மதரீதியில் சகிப்புத்தன்மையுடனான ஒரு பரந்த மனப்பான்மை கொண்டது. முஸ்லீம்கள் குறித்து சில முன்முடிவுகள் உண்டு; எனினும் அது இந்துத்துவக் கருத்தியலில் கரைத்துகொள்ளாத, முஸ்லீம்களின் இருப்பை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மை கொண்டது. இதற்குப் பல நடைமுறை உதாரணங்களை அடுக்க முடியும். அவை தவிர, 2004 நாடாளுமன்றத் தேர்தலில், தொடர்ந்த பல பிரசாரங்களைத் தாண்டி, சோனியா காந்தியைப் பிரதமராக்கும்  ‘மகேசன் தீர்ப்பை’ வழங்கியதை மறக்க முடியாது. பெருமளவு தாராள மனப்பான்மை கொண்ட ஐரோப்பிய நாடுகள் எதிலும்கூட, பக்கத்து நாட்டிலிருந்து குடியேறிய ஒருவரை, அது குறித்த பிரசாரத்துக்கு இடையே, நாட்டின் முதல் பதவிக்கு மக்கள் அனுப்புவது நடக்கும் என்று தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறிவு நேர்மை கருதியே இதைச் சொல்கிறேனே அன்றி, எனக்கு இந்தியா என்கிற கட்டமைப்பின்மீது புனிதமான ஈர்ப்பும் பிடிப்பும் எதுவும் இல்லை; ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்த ஆத்திரம் மட்டுமே உண்டு; அதற்கு ஏதேனும் வகையில் இந்தியா விலை கொடுப்பதை மனதார விரும்பவும் செய்கிறேன். அதே நேரம் இந்தியக் கட்டமைப்புக்குள் கிடைக்கும் ஜனநாயக அரசியல் வெளியை, அதில் இயங்கும் சாத்தியம் இருக்கும்வரை பயன்படுத்திக்கொள்வதே இழப்புகளை ஆகக் குறைவாக்கும் உத்தியாக தோன்றுகிறது. (ஆதிவாசிகள்/மாவோயிஸ்ட் போராட்டம் போன்றவற்றில் அப்படி ஒரு சாத்தியம் இல்லாமல் இருக்கலாம் என்பது வேறு விஷயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்களால் மறக்க முடியாத உச்சபட்ச வடுவாகவும் அநீதியாகவும், குஜராத் தாக்குதலும், அதில் யாருமே தண்டிக்கப்படாததும் இருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் குஜராத் முஸ்லீம்கள்மீதான தாக்குதலை கிட்டத்தட்ட முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளன; ஏராளமான அறிவுஜீவிகள் அது குறித்து எழுதியுள்ளனர்; புத்தகங்கள் வந்துள்ளன. இதற்கு நேர்மாறான ஓர் உதாரணம் உண்டு. குஜராத் அளவுக்குத் தீவிரம் அல்லாவிடினும், கர்நாடகாவில் 1992-ல் நடந்த தமிழர்மீதான தாக்குதல் ஓரளவு தீவிரமானது. குறிப்பாக அதன் பிறகான இந்த 18 ஆண்டுகளில், மெல்ல மெல்ல கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளமே அழிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எந்த நியாயமான ஆவணமும் பதிவும் கிடையாது. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்த, தமிழகத்தில் இருந்து சென்றுவந்த அ.மார்க்ஸோ, மக்கள் சிவில் உரிமைக் கழகமோ, 1992-க்குப்பிறகு கர்நாடகாவில் தமிழர் இருப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து எதையும் ஆவணப்படுத்தும் எண்ணத்தில்கூட இறங்க மாட்டார்கள். இவர்களே செய்ய நினைக்காத ஒன்றை, மற்ற இந்திய அறிவுலகம் செய்யப் போவதும் இல்லை. இதுதவிர, தொடர்ந்து நடக்கும் அயோக்கிய அவல நாடகமான தமிழ் மீனவர்கள்மீதான இலங்கைப் படையின் தாக்குதல், அதற்கு இந்தியா உடந்தையாக இருக்கும் பாத்திரத்தை வகிப்பது, மற்றும் ஈழப்பிரச்னை என்று பேசப் பல உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் தமிழ் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் விரக்தி அடைந்து விபரீத முடிவுகள் எடுப்பதைவிட, இந்தியக் கூட்டமைப்பினுள் தங்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவதே விவேகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் முயற்சிகள் மிகப் பெரிய அரச வன்முறையையும் அடக்குமுறையையும் மக்கள்மீது ஏவுவதற்குக் காரணமாகும் என்பது ஒரு காரணம்; இன்னமும் இந்தியக் கூட்டமைப்புச் சட்டகத்தில் – ஆயிரம் கோளாறுகளுக்கு நடுவில் – பிரச்னைகளை எழுப்பவும், தீர்வு நோக்கி நகரவும், நகர்த்தவும் ஒரு ஜனநாயக அரசியல் வெளி இருக்கிறது என்பதும் ஒரு காரணம். தமிழர்களைவிட முஸ்லீம்களுக்கு இன்னும் சாதகமான வெளி இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;போராளித்தனமாக என்ன பேசினாலும், இந்த வெளியை நடைமுறையில் சாதுர்யமாகப் பயன்படுத்துவதுதான்  விவேகமான அரசியல் செயல்பாடாக இருக்கும் என்று தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-221888159873601026?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/221888159873601026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=221888159873601026' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/221888159873601026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/221888159873601026'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/10/blog-post_28.html' title='தீர்ப்பு அரசியல்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-7548542106135186232</id><published>2010-07-23T05:38:00.003+09:00</published><updated>2010-07-23T06:00:16.983+09:00</updated><title type='text'>அக்கினி குஞ்சு.</title><content type='html'>முன்னொரு காலத்தில் டைடானிக் அளவு பெரிய கப்பல் ஒன்று கடல் விபத்தில் சிக்க நேர்ந்தது. இந்த உலகம் எப்படி பற்பல வண்ணக்கண்கள் கொண்ட இனக் குழுவினர்களினால் ஆனாதோ, அது போல அந்த கப்பலிலும் பல வண்ணக்கண்கள் கொண்ட இனக்குழு மக்கள் கலந்து இருந்தனர்.  விபத்தில் கப்பல் உடைந்து, ஒரு துண்டுக் கப்பல் நூறு நீலக்கண்கள் கொண்ட மனிதர்களையும், நூறு பழுப்புக் கண்கள் கொண்ட மனிதர்களையும், வசந்த் என்ற கருப்பு கண்ணனையும், பச்சைகண் கொண்ட நண்பர் திண்ணை தூங்கியையும் தீவு ஒன்றில் கரை சேர்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தீவை அடைந்தவுடனேயே வசந்தையும், திண்ணை தூங்கியையும் தவிர மற்றவர்கள் சகமனிதருடன் உரையாடிகொள்ளும் சக்தியை இழந்தனர். உரையாடுவது என்பதன் வரையரைப்படி, உரையாடல் என்பது இருதரப்பின் பங்களிப்பையும் கொண்டது அல்லவா.  நீலகண்ணர்களும், பழுப்பு கண்ணர்களூம் தங்களுக்குள் மட்டுமின்றி, வசந்த், திண்ணை தூங்கியிடமும் பேச முடியவில்லை. ஆனால் வசந்தும் திண்ணை தூங்கியும் பேசுவதை அவர்களால் கேட்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் நள்ளிரவில் ஒரு சிறு கப்பல் அந்த தீவில் சிறிது நேரம் நின்று விட்டு கிளம்பியது. annihilation of race என்கிற இன ஒழிப்பு இலக்கை, தங்கள் அதிகாரபூர்வ கொள்கையாக கொண்டிராத அந்த கப்பல் அதிகாரிகள், 'இனங்கள் இருக்கலாம், அதை குறிப்பிடலாம், அது குறித்து பேசலாம். ஆனால் அதற்குள் ஏற்றத்தாழ்வுகள் மட்டும் இருக்க கூடாது' என்கிற மாற்று சமத்துவ கொள்கையை கொண்டிருந்தனர். தீவில் இருந்த பல வண்ணக் கண்ணர்கள் தங்கள் இன அடையாளமான கண்ணின் நிறத்தை சரியாக குறிப்பிட்டுவிட்டால், கப்பல் அவர்களை ஏற்றிக் கொண்டு கிளம்பும். அல்லாவிடில் அந்த தீவிலேயே வாழ்க்கையை தொடர வேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நீலக்கண்ணர்களும், பழுப்புகண்ணர்களும் அதிகச்சித தர்க்கவாதிகள். அதிகச்சித தர்க்கவாதிகள் என்றால் அவர்களால் மிகச்சரியாக தர்க்கபூர்வமாக (மட்டும்)பயணித்து எந்த முடிவையும் எடுக்க முடியும். அது மட்டுமல்ல, தர்க்கபூர்வமாக தங்களால் அடைய முடியாத எந்த முடிவையும் அவர்கள் முன்வைக்க மாட்டார்கள். (உங்களுக்கு கணிதவியலாளன் கறுப்பு ஆட்டை பார்த்த கதை தெரியுமா? தெரியவேண்டுமானால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.) அது மட்டுமில்லாமல் நீல/பழுப்பு கண்ணர்களுக்கு மற்றவர்களும் அதிகச்சித தர்க்கவாதிகள் என்று தெரியும். ஞானகுரு திண்ணை தூங்கி உண்மை மட்டுமே பேசுவார் என்றும் அவர்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாராலும் தன் சக மனிதர்களின் கண்ணின் நிறத்தை காண முடிகிறது. அவைகளை மொத்தமாக எண்ண முடிகிறது. ஆனால் தன் கண்ணின் நிறத்தை மட்டும் அறியமுடிவதில்லை. அதை மற்றவர்களிடம் கேட்டும் அறியமுடியவில்லை. பேச்சு மட்டுமில்லாமல் வேறு குறியீடுகளிலான மொழி கொண்டும் உரையாடி அறிய முடியவில்லை. மற்றவர்களின் கண்கள் உட்பட, எந்த பொருளின் மீது பிரதிபலித்தும் தன் கண்ணின் நிறத்தை அறியமுடியவில்லை. இதெல்லாம் ஏன் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். கதையின் சட்டக கட்டமைப்பு அப்படி என்பதை தவிர வேறு பதில் இல்லை. இதை ஒப்புகொண்டால் கதையை மேலே நீங்கள் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் கப்பல் வருகிறது, காலியாக போகிறது. இப்படியாகவே ஆண்டுகள் பல கழிந்த பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நம் ஞானகுரு திண்ணை தூங்கி அவர்களுக்கு உதவுகிறார்.  வசந்துக்கு அவர்கள் யாருக்கும் உதவும் நல்ல நோக்கம் கிடையாது. அதனால் யாரிடமும் அவர்கள் கண்ணின் நிறம் பற்றிய விவரத்தை சொல்லமாட்டான். திண்ணை தூங்கி ஞானியாதலால் அவர் நேரடியாக உதவமாட்டார். ஞானத்தை ஒரிரு வாக்கியங்களில் அடைத்து அதன் மூலம் வழிகாட்ட மட்டும்செய்வார். அதனால் அவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் கண் முன்னால் ஒரு நீலக்கண்ணன் தெரிகிறான்." என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;வசந்த் கடுப்பாகி ", யோவ்..மறை கிறை கழண்டு போச்சா.. கண்ணெதிர்ல நூறு பேர் தெரியறான். இப்ப இன்னாத்துக்கு ஒத்தை நீலகண்ணன் தெரியறான்னு கூவறே?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உமக்கு இந்த தகவலை சொல்லவில்லை. அவர்களுக்கு உதவுவதற்காக சொன்னேன்" என்கிறார் திண்ணை தூங்கி.&lt;br /&gt;&lt;br /&gt;"லூசாய்யா நீ? அவன்களும்தான் 99பேரை நீலம் நீலமா பாத்துனுக்கிறாங்கள்ளே? அப்புறம் நீ ஒரு நீலக்கண்ணனை பாத்தா அவனுங்களுக்கு என்ன, பாக்கலைன்னா என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை தூங்கி மாம்பழச் சாமியார் போல சிரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப இன்னாத்துக்கு சிரிக்கற?"&lt;br /&gt;&lt;br /&gt;"தர்க்கத்தை நினைச்சேன். சிரிச்சேன்." என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவனுங்க ஒன்னை விட கிறுக்கனுங்கபா.. நேர போயி 'என் கண்ணூ நீலம்.. ப்ரவுனு.. மஞ்சள்.. அப்படீன்னு எதுனா ஒன்ணை நெதம் சொன்னா... ஒரு பத்து நாள்ள எதுனா  ஒண்ணு கரீக்டா மாட்டி டிக்கிட் கெடிக்காது?  உலகத்துல அப்படி எத்தினி கலர்பா இருகுது!"&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணைதூங்கி எல்லோருக்கும் தெரிந்த அந்த உண்மையை உரைத்த நூறாவது நாளின் நள்ளிரவில் அந்த நீலக்கண்ணர்கள் முழுவதும் தாங்கள் கண்ணின் நிறம் நீலம் என்ற உண்மையை அடைந்து, அறிவித்து, கப்பலில் ஏறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வசந்த் திடுக்கிட்டு "சாமி இத பார்..இந்த மாங்கா மடையனுங்களுக்கு திடீர்னு எங்கிருந்து ஞானம் வந்ததுனு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"'எனக்கு ஒரு நீலக்கண்ணன் தெரிகிறான்' என்று நான் சொன்னதில் இருந்துதான் இந்த ஞானத்தை பெற்றார்கள்" &lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு முன்னாடி அவன்களுக்கு 99 பேர் தெரிஞ்சுட்டுதானே இருந்தது. அதுலேயிருந்து வராத ஞானம் எப்படியா நீ சொன்ன ஒரு நம்பர்லே இருந்து வரும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த 99 பேர் அவர்களுக்கு தெரிகிறார்கள். ஆனால் இந்த ஒருவர் நான் சொல்லி ஒரு தகவலாக அவர்களுக்கு தெரிகிறான். அதுதான் வித்தியாசம்"&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமணி மாதிரி குரலை வைத்து, "டேய் சாமி..விளையாடாதே... விளக்கமா சொல்லு" &lt;br /&gt;&lt;br /&gt;"நண்பா.. இப்போது இங்கே ஒரே ஒரு நீலக்கண்ணன் இருக்கிறான் என்று வைத்து கொள்வோம். அவன் கண்களுக்கு வேறு எந்த நீலக்கண்ணனும் தென்பட மாட்டான். அதனால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தான் தான் திண்ணைதூங்கி குறிப்பிட்ட நீலக்கண்ணன் என்ற முடிவுக்கு வருவான்" &lt;br /&gt;&lt;br /&gt;"இருந்துட்டு போகட்டும்.ஆனா இங்க .ஒருத்தன் இல்லையே... இங்கதான் 100 பேர் இருக்கிறானே!"&lt;br /&gt;&lt;br /&gt;"பொறு. இப்போது இரண்டு பேர் இருப்பதாக வைத்து வைத்துக்கொள்வோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் அதான் 100 பேர் இருக்கான்கறேனே.  அப்புறம் எப்படி ஒரே ஆள் இருக்கான்னு வைக்க முடியும், ரெண்டு ஆள் இருக்கான்னு வைக்க முடியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒரு அனுமானம். அதிலிருந்து n=1,2...என்று 99வரை  நாம் தேற்றங்களை உருவாக்க்கி.."&lt;br /&gt;&lt;br /&gt;"இத பார் மாங்காச்சாமி..இதல்லாம் ஏற்கனவே &lt;a href="http://xkcd.com/solution.html"&gt;இங்க&lt;/a&gt; படிச்சுட்டேன். &lt;a href="http://tinypaste.com/7b973"&gt;தமிழ்லயும் &lt;/a&gt;படிச்சிட்டேன். அதுல ஏதோ பிழை இருக்கறதா ரோசா சொல்றான்"&lt;br /&gt;&lt;br /&gt;"முதலில் பிழை இருப்பதாக சொன்னார். பிறகு பிழையில்லை, சரியாக எழுதப்படவில்லை என்று மட்டும் சொன்னார். அதை படித்தே கூட நீங்கள் தெளிவு பெறலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம்.. இத பாரு மாங்கா.. ஒழுங்கா விளக்கமா சொல்லு..இந்த இண்டக்ஷன் தில்லாலங்கடி வேலையெல்லாம் வேண்டாம். நேர சொல்லு. 100 நீலகண்ணன் இருக்கான். அதுலேருந்து ஆரம்பி. ஓவ்வொருத்தனுக்கும் 99 நீலகண்ணன் இருக்கான்ற வெவரம் தெரியுது. எப்படி தான் ஒரு நீலக்கண்ணன்னு கண்டு பிடிச்சான்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு குறிப்பிட்ட நீலக்கண்ணனை எடுத்துக் கொள்வோம். X என்று அவனை கூப்பிடுவோம். Xஐ பொறுத்தவரை இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒன்று தான்  நீலக்கண்ணனாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் எல்லாருக்கும் தெரியுமே"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போது X தான் ஒருவேளை நீலக்கண்ணனாக இல்லாவிட்டால், மற்ற நீலக்கண்ணர்கள் 98 நீலக்கண்ணர்களை மட்டுமே பார்ப்பர்கள். அவ்வாறு 98பேரை பார்த்தால் அவர்கள் 99வது நாளன்று தாங்கள் நீலக்கண் கொண்டவர்கள் என்றறிந்து கப்பல் ஏறியிருப்பார்கள். அவர்கள் ஏறவில்லை. அதனால் அவர்களும் 99பேரை பார்க்கிறார்கள். அதனால் X தானும் இரு நீலக்கண்ணன் என்று அறிந்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"இரு ..இரு.. இன்னும் முடியல.."&lt;br /&gt; &lt;br /&gt;"பொறு நண்பா. இப்பொது உனக்கு Xஐ தவிர்த்த அந்த 99 மற்ற நீலக்கண்ணர்கள்,  98பேரை நீலக்கண்ணன்களாக பார்த்தால்,  ஏன் அவர்கள் 99வது நாளில் தாங்கள் நீலக்கண்ணன் என்று அறிவார்கள் என்பது தெரிய வேண்டும்.  அவ்வளவுதானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நமது வசதிக்காக இப்போது Xஐ தவிர்த்த அந்த 99 பேர்களில் Y என்று ஒருவனை கூப்பிடுவோம். இப்போது இந்த Y 98 நீலக்கண்ணர்களை பார்கிறான். "&lt;br /&gt;&lt;br /&gt;"இரு இரு.. அவன் எப்படி 98 பேரை பாக்க முடியும். யதார்த்தமா அங்க 99பேர் இருக்கும் போது அவன் எப்படி 98பேரை பார்க்க முடியும்?" &lt;br /&gt;&lt;br /&gt;"நீ தர்க்கத்தையும் யதார்த்தத்தையும் குழப்புகிறாய். அந்த தீவில் 100 நீலக்கண்ணர்கள் இருக்கிறார்கள். அதில் நம் எக்ஸும் ஒருவன். அதனால் அவன் 99பேரை பார்கிறான். மற்றவர்களும் 99 பேரை பார்கின்றனர். ஆனால் Xற்கு அது தெரியாது. ஒருவேளை அவர்கள் அவர்கள் 98பேரை பார்த்தால் என்ன என்பது Xஇன் தர்க்கம். புரிகிறதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"மேலே போ!"&lt;br /&gt;&lt;br /&gt;"Xஐ தவிர்த்த அந்த 99 நீலக்கண்ணர்களில் ஒருவனான Y 98 நீலக்கண்ணர்களை பார்கிறான் என்று வைத்துக் கொள்வோம். Yக்கும் இரண்டு சாத்தியங்கள் உள்ளது. தான் ஒரு நீலக்கண்ணன் அல்லது தான் நீலக்கண்ணன் அல்லன். நீலக்கண்ணன் அல்லவெனில் தான் பார்க்கும் 98 நீலக்கண்ணர்கள் 97 நீலக்கண்ணர்களைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு 97பேரை மட்டும் பார்த்த்திருந்தால் அவர்கள் 98வது நாளன்று தாங்கள் நீலக்கண் கொண்டவர்கள் என்றறிந்து கப்பல் ஏறியிருப்பார்கள். அவர்கள் ஏறவில்லை. அதனால் அவர்களும் 98பேரை பார்க்கிறார்கள். அதனால் Y தானும் ஒரு நீலக்கண்ணன் என்று அறிந்தான். Yஐ போலவே X தவிர்த்த எல்லா 99 நீலக்கண்ணர்களும் தங்களை நீலக்கண்ணனாக  98வது நாளன்று அறிவார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;வசந்த் கடுப்புடன் திட்ட வார்த்தைகளை தேட திண்ணை தூங்கி நிதானமாக, " இரு.. இரு.. இப்போது Xஐயும், Yஐயும் தவிர்த்த அந்த 98 மற்ற நீலக்கண்ணர்கள், 97பேரை நீலக்கண்ணன்களாக பார்த்தால் ஏன் 98 நாளில் தாங்கள் நீலக்கண்ணன் என்று அறிவார்கள் என்பது தெரிய வேண்டும்.  அவ்வளவுதானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.. ஆனா எதோ குழம்புதே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு குழப்பமும் இல்லை. அங்கே யதார்த்தத்தில் எத்தனை நீலக்கண்ணர்கள் இருக்கிறார்கள் என்பது நம் பிரச்சனை அல்ல. தர்க்க அனுமானப்படி நாம் Xஐயும், Yஐயும் தவிர்த்த அந்த 98 மற்ற நீலக்கண்ணர்கள், 97பேரை நீலக்கண்ணன்களாக பார்ப்பதாக வைத்து கொள்வோம். இப்போது அந்த 98 பேரில் இருந்து ஒரு Z என்ற நீலக்கண்ணனை உருவவும்.  Zக்கும் இரண்டு சாத்தியங்கள் உள்ளது. தான் ஒரு நீலக்கண்ணன் அல்லது தான் நீலக்கண்ணன் அல்லன். நீலக்கண்ணன் அல்லவெனில் தான் பார்க்கும் 97 நீலக்கண்ணர்கள் 96 நீலக்கண்ணர்களைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு 96பேரை மட்டும் பார்த்த்திருந்தால் அவர்கள் 97வது நாளன்று தாங்கள் நீலக்கண் கொண்டவர்கள் என்றறிந்து கப்பல் ஏறியிருப்பார்கள். அவர்கள் ஏறவில்லை. அதனால் அவர்களும் 97பேரை பார்க்கிறார்கள். அதனால் Z தானும் ஒரு நீலக்கண்ணன் என்று அறிந்தான். Zஐ போலவே X, Y தவிர்த்த எல்லா 98 நீலக்கண்ணர்களும் தங்களை நீலக்கண்ணனாக  98வது நாளன்று அறிவார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப இன்னா கேப்பேன்னு உனக்கே தெரியும்'&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.  இப்போ X, Y, Z தவிர்த்த அந்த 97 மற்ற நீலக்கண்ணர்கள், 96பேரை நீலக்கண்ணன்களாக பார்த்தால் ஏன் 97ஆம் நாளில் தாங்கள் நீலக்கண்ணன் என்று அறிவார்கள் என்பது தெரிய வேண்டும்.  அவ்வளவுதானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"புர்யுதுமா அப்படியே கண்டினியூ பண்ணு"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப X, Y, Z தவிர்த்த 97 பேர்ல ஒரு நீல கய்தயா எடுத்துக்கோ. அதே மாறி ஆர்க்யூ பண்ணூ. அப்ப அடுத்த கேள்வி என்னன்னு தெரியும்... அந்த கேள்வியை கேட்டுட்டு இன்னொரு கய்தய எடு.. அப்படியே கண்டினியூ பண்ணு.. அப்படியே 99 நீலகய்தைங்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கேள்விதான் இருக்கும். அது என்ன கேள்வி"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு தெரியும். இருந்தாலும் இலக்கண சுத்தமா நீயே சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரே ஒரு நீலக்கண்ணன் இருக்கிறான். அவன் கண்களுக்கு யாருமே நீலக்கண்ணனாக தெரியவில்லையெனில், அவன் முதல் நாளிலேயே தான் ஒரு நீலக்கண்ணன் என்றறிந்து கப்பல் ஏறியிருப்பான். ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் நீதான் சொல்டியே. எங்கண்ணுக்கு ஒரு நீலக்காரன் தெரியறான்னு. அவன் கண்ணுக்கு வேற யாரும் தெரியாத சொல்ல, அது நம்மதான்னு கண்டுக்கறான்" &lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவுதான் நண்பா. நான் துங்க போகலாமா?'&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பிரவுன் காரனுங்களுக்கும் ஏதாவது உதவி பண்ணுப்பா" &lt;br /&gt;&lt;br /&gt;"நீ செய்யலாமே"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்ன நம்பமாட்டங்கப்பா. தர்க்கம் வொர்க்கவுட் ஆகாது."&lt;br /&gt;&lt;br /&gt;பழுப்பு கண்ணர்கள் என்ன ஆவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முன் கதை சுருக்கம்: நேற்றய தேதியில் எந்த வருடத்திலும் இதுவரை பிறந்திராத எனக்கு, நண்பர் ஶ்ரீகாந்த்&lt;a href="http://xkcd.com/blue_eyes.html"&gt; புதிர் &lt;/a&gt;ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்தார். வாசித்த போது புதிர் பிடிபடவில்லை. வேலைகளில் அதை மறந்து விட்டு மாலை பார்த்த்த போது, ட்விட்டரில் அதன் &lt;a href="http://xkcd.com/solution.html"&gt;தீர்வுக்கான&lt;/a&gt; சுட்டியையும் ஶ்ரீகாந்த் அளித்திருந்தார். சுட்டிய தீர்வில் பிரச்சனை இருப்பதாக சொல்லிவிட்டு என் தீர்வை சுருக்கமாக எழுதினேன். பின் ஒருபக்கம்-ஶ்ரீதருடன் நடந்த விவாதத்தில் நான் எழுதியதில் பிரச்சனை இருப்பதையும், அதை தொடர்ந்து ஶ்ரீதர் எழுதியதிலும் பிரச்சனை இருப்பதாகவும் சுட்டி, ட்விட்டரில் நீண்டு விவாதித்து, பின்பு தொலைபேசியிலும் ஶ்ரீதருடன் நீண்டு விவாதித்த பின்பு என்னளவில் எனக்கு தீர்வு தெளிவான தர்க்கத்துடன் பிடிபட்டது.  ஶ்ரீகாந்த் சுட்டிய தீர்வில் பிரச்சனை இருப்பதாக நான் டைனி பேஸ்டியதும் சரியல்ல என்று உணர்ந்தேன். இந்த மொத்த குழப்பத்தில் நான் நேற்று தூங்குவதற்கு முன் அடைந்துவிட்ட தெளிவை இங்கே பதிவு செய்வதே இந்த பதிவு எழுதுவதன் நோக்கம். புதிதாக வாசிப்பவர்களை அலைக்கழிக்காமல் உதவுதற்கும், சுவாரசியத்திற்கும் முதலில் இருந்து முழு கதையையும் மேலே தந்திருக்கிறேன்.  புதிரை அறிமுகம் செய்த ஶ்ரீகாந்திற்கும், விவாதித்த ஒருபக்கம்-ஶ்ரீதருக்கும் நன்றி. குறிப்பாக நான் பிடிவாதமாக 'பிழை' ஒன்றை சுட்டிக்கொண்டிருந்ததில், தொலைபேசியில் விவாதித்ததன் மூலம் தெளிவு வர செய்ததற்கு ஶ்ரீதருக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-7548542106135186232?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/7548542106135186232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=7548542106135186232' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7548542106135186232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7548542106135186232'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/07/blog-post.html' title='அக்கினி குஞ்சு.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-3587356822221586262</id><published>2010-06-13T03:20:00.004+09:00</published><updated>2010-06-15T05:33:52.765+09:00</updated><title type='text'>பதிவுகள் -14</title><content type='html'>&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/4.html"&gt;1. துளியுரைகள்-4.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/5.html"&gt;2. துளியுரைகள்-5.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/6.html"&gt;3. துளியுரைகள்-6 (டாடாவின் ஈடு இணையற்ற கொள்ளை).&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/blog-post.htm"&gt;. தெளிவு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/blog-post_14.html"&gt;5. இடியட்டும் கோபி கிருஷ்ணனும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/7.html"&gt;6. துளியுரைகள்-7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/blog-post_18.html"&gt;7. கடித்து எலி சாதல்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/blog-post_19.html"&gt;8. இறுதியாக சில.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/8.html"&gt;9. துளியுரைகள்-&lt;/a&gt;8 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/04/9.html"&gt;10. துளியுரைகள்-9. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/05/blog-post.html"&gt;11. சுய முரணும், அறிவு நேர்மையும். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/05/blog-post_25.html"&gt;12. நாடு கடந்த தமிழீழ அரசு.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/06/blog-post.html"&gt;13. வைதீகபாப்பானும், லௌகீக பாப்பானும்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/06/blog-post_14.html"&gt;14. எதிர் பொதுப்புத்தி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-3587356822221586262?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/3587356822221586262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=3587356822221586262' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3587356822221586262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3587356822221586262'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/06/14.html' title='பதிவுகள் -14'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-4640802047111663158</id><published>2010-04-16T02:50:00.006+09:00</published><updated>2010-04-17T07:00:16.650+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகடி.'/><title type='text'>இந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.</title><content type='html'>சில நேரங்களில் நாம் காமெடியாக புரிந்து கொண்ட சில விஷயங்களுக்கு பின்னே ஆழ்ந்த தீவிரமான பொருள் இருக்கக்கூடும். அதே போல நாம் &lt;a href="http://rozavasanth.blogspot.com/2010/04/blog-post.html"&gt;தமாசை எதிர்பார்த்து &lt;/a&gt; வாசிக்கும் பிரதி மிக தீவிரமான திருப்பங்களுடன், பற்பல பரிமாணங்களில் சமூகப் பாடம் நடத்தும்  அளவிற்கு சிக்கலான இலக்கிய பிரதியாகிவிட கூடிய சாத்தியங்கள் உண்டு. பிரதியை வாசிக்காமல், பிரதி வெளியாகும் முன்பே அது குறித்து தீர்ப்பு கூறும் விமர்சகர்  'மண் ஒட்டவில்லை' என்று  தனக்கு தானே சொல்லிக் கொள்வதற்காகவாவது பல அசட்டு சமாதானங்களை பின்னர் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு இதனால் ஆளாகிறார். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நான், விமர்சகனின் கணிப்புகளை  பொய்யாக்குவதுதான் ஒரு இலக்கிய பிரதியின் வேலை என்ற ஒரு வசதியான இலக்கணத்தை கொண்டு பிரதியை எதிர்கொள்ள துணிந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று லீனா மணிமேகலையின் கவிதை  எழுதும் உரிமை மேலான தாக்குதல்களை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டம்,  &lt;a href="http://rozavasanth.blogspot.com/2010/04/blog-post.html"&gt;தமாசாக இருக்கும் என்று நினைத்தற்கு&lt;/a&gt; மாறாக தீவிர வடிவத்தை அடைய,  இந்து மக்கள் கட்சியினர் கூட்டத்தில் செய்த கலகம் காரணமானது. கூட்டம்  தொடங்கிய போதே காவி உடையணிந்த  இந்து மக்கள் கட்சியினர் ஸீட் பிடித்து அமர்ந்திருந்தனர்.  அ.மார்க்ஸ் அறிமுகப் பேச்சை முடித்த உடனேயே,  இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தன் கேள்விக்கு பதில் அளித்த பிறகுதான் கூட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பலர் பதில் சொல்ல,  கூச்சலும் குழப்பமும் உருவாகியது. குழப்பம் பேரலைபோல  எப்போது உச்சத்தை அடைந்தது, அமைதி வருவது போன்ற தோற்றத்தை  எப்போது அடைந்தது என்று சரியாக சொல்ல முடியாத அளவில் குழப்பம். பிறகு ஒரு வழியாக அமைதியாகி,  ராஜன் குறை பேசி முடிக்க,  'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று மீண்டும் இந்து மக்கள் கட்சி தொண்டர் குரல் எழுப்பினார். மீண்டும் பலர் கத்த, கூச்சலாக குழப்பம். சுமார் அரைமணி நேரம் சண்டைக்கு பிறகு, வேறு வழிதெரியாமல்  பேசி விட்டு போகட்டும் என்று,  வந்திருந்த இந்து மக்கள் கட்சியினரின் பிரதிநிதியாக பொறுப்பேற்ற ஒருவரிடம் கேள்வி கேட்க மைக் அளிக்கப்பட்டது. ஒரு கேள்வி கேட்கப் போவதாக துவங்கியவர் உரை ஒன்றை நீட்டி முழக்கி பேசத் துவங்கினார்.  கிட்டத்தட்ட மேடையை  கைப்பற்றி (அவரே இடையிடையே கூட்டத்தையும் அமைதிப்படுத்தி),   அறிமுகம், தோழமை அமைப்புக்கு நன்றி எல்லாம் சொல்லிய பின்னர் வரிசையாக பாயிண்டுகளை அடுக்கினார். அதில் ஒரு பாயிண்ட் லீனா மீதான ஆபாசமான ஒரு கேள்வியாக மாற,  லீனா பதிலுக்கு அடிப்பதற்காக மேடையை நோக்கி செல்ல மீண்டும் ரசாபாசமாகியது. அடுத்த அரைமணி நேரம் பல விதமான குழப்பம். நீண்ட ரசாபாசத்திற்கு பிறகு அவர்களை வெளியேறச் சொல்லி மைக்கில் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட பின்பு, வரிசையாக பல கோஷங்களை எழுப்பி, அப்போது கோஷம் காற்றில் சீராக பரவ விடாமல் மற்றவர்கள் கூச்சலிட்டதால் மீண்டும் மீண்டும் எழுப்பி, வாசலிலும் ஒருமுறை எழுப்பிய பின்பு சென்றனர். அதன் பிறகு கலகம் செய்த இந்து மக்கள் கட்சியினரை அனைவரும் தங்கள் உரையில்  கண்டித்தனர். அதன் பிண்ணணிகளை ஆரய்ந்தனர். இது குஜராத், மும்பை, கர்நாடகாவில் நடந்த பாசிச நிகழ்வின்  தொடர்சி என்றும் பலர் குறிப்பிட்டனர்.  இவ்வாறாக 'எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகளா'க உண்மையிலேயே மாறியது; நான் தமாசாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகளும் தீவிர பரிமாணத்தை அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட அழைப்பிதழில்   'இணயத்திலும் பரவியுள்ள தாக்குதல்',  மற்றும் 'விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்படிருந்தது.  இணையத்தை வாசிக்கவே வாசிக்காத ஒருவருக்கு,  இணையத்தில் நடந்த தாக்குதல்களையும் இந்து மக்கள் கட்சிதான் செய்ததாக ஒரு வாசிப்பு வரக்கூடும். இணையத்தில் வாசிக்கும் பழக்கமுள்ள இணையர்களின் வாசிப்பில் , அந்த இணையரல்லாதவர்களின் பிரதி சார்ந்த உண்மை எப்படி உண்மையில்லையோ, அது போல கூட்டத்திற்கு செல்லாதவர்களுக்கு நான் மேலே இதுவரை  'இந்து மக்கள் கட்சி'  என்று பலமுறை எழுதியது இந்து மக்கள் கட்சியை இந்த பதிவில் குறிப்பதாக வரக்கூடும் வாசிப்பு சார்ந்த உண்மை,  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிப்புண்மையாக பிரசன்னமாக வாய்ப்பில்லை. அந்த வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்,  இந்த பதிவின் மூலம் நடந்ததை அறிய விழைபவர்களுக்கு 'இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள்' என்பது இந்து மக்கள் கட்சியை குறிக்கவில்லை என்று சொல்வது அவர்களின் பன்முக வாசிப்பை தடை செய்யுமாயினும்,  வேறு வழியில்லாமல் யதார்த்தவாதிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து பின்னறிவிப்பாக அவ்வாறாகவே இங்கே எழுத வேண்டியுள்ளது. அது எப்படியிருப்பினும் இந்து மக்கள் கட்சியின் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வினவு தளத்தில் லீனா பற்றி எழுதப்பட்ட பதிவுகளை நான் ஏற்கனவே கண்டித்துவிட்டேன். எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு பதிவாக கண்டனத்தை நான் தான் முன்வைத்தேன் என்று நினைக்கிறேன். ஒருமுறை பிரச்சனை குறித்து எழுதிய பின்பு மீண்டும் மீண்டும் பதிவுகள் எழுதவும், பிரச்சனைகளை கிளப்பவும் தோழர்களுக்கு தீவிர பிரச்சனை ஏதேனும்  இருக்கலாம். எனக்கு ஒரு முறை கண்டித்ததே என் நிலைபாட்டை அறிவிக்க போதும் என்பதாலும், இந்த பதிவில் இந்து மக்கள் கட்சிக்கு என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-4640802047111663158?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/4640802047111663158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=4640802047111663158' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/4640802047111663158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/4640802047111663158'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/04/blog-post_16.html' title='இந்து மக்கள் கட்சியை கண்டிக்கிறேன்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-7809345133441340748</id><published>2010-04-11T03:25:00.007+09:00</published><updated>2010-04-11T14:06:29.738+09:00</updated><title type='text'>தமாசு!</title><content type='html'>தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிறதாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக &lt;a href="http://www.oodaru.com/?p=943#more-943"&gt;கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு&lt;/a&gt; ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்?  தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;' பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ' என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையாக, முதன் முதல் படியாக,  ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங்கா  வண்ணம் நடந்திருப்பதுபோல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம்  உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல. &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிறார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள். இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு லீலாமணிமேகலையின் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை - அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும்  உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.)  இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது.  தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தாக்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக முடியும். ஒருவேளை மார்க்சியர்களும், ஃப்ராய்டியர்களும் கூட தங்கள் மனம் புண்பட்டதாக வழக்கு தொடரலாம். 'குட்டி ரேவதி' என்று ஒரு சினிமா கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவே எஸ்ராவிற்கு உரிமை இல்லை என்று  ஒரு கண்டன கேலிகூத்து நடத்தியவர்கள், இப்படி எதிர்ப்பை தெரிவிக்க உரிமையில்லை என்று நினைப்பது இன்னொரு  'கருத்து சுதந்திர மனித விடுதலை'  கேலிகூத்து மட்டுமே.  (வினவின் பதிவுகளில் வெளிப்பட்ட ஆணாதிக்க மொழியை, வசவுகளை, சமூக மதிப்பிடுகளை தன் வாதத்திற்கு சாதகமாக்கும்தன்மையையும்   நான் கண்டிக்கிறேன். கண்டித்தேன். ஆனால் எதிர்ப்பு என்பதே வெளிப்படக்கூடாது என்பது என் கருத்தல்ல.) &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்வதானால் என்னால் கச்சாவான பாலியல்ரீதியான மொழி(வெளிப்படுவதால் மட்டும் ஒரு பிரதியை இலக்கியமாக கருத முடியாதே தவிர) அதனுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் சமூகத்தில் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். மிக குறைவாக மட்டுமே எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.  இது ஆணாதிக்கம்  என்றும் குறுக்க முடியாது. ஆணிடம் இதே போன்ற மொழி வெளிபடும்பொதும் இதை ஒத்த எதிர்ப்பு வெளிபடலாம். கற்பித நெறிகளால் பெண்ணின் தூய்மையை உன்னதப்படுத்தும் ஆணாதிக்க சமூகமாக நம் சமூகம் இருப்பதால் பெண்ணுக்கான எதிர்ப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.  எனினும் பொதுக்களத்தில் இயங்கும் ஒரு கச்சாவான பாலியல் மொழிக்கான எதிர்ப்பு என்பதாக  ஒன்று இருப்பதே பாசிசம் என்று நினைப்பதும்,  பாசிச கூறு கொண்ட குருட்டு பாசிச எதிர்ப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆகையால் எந்த வித பொறுப்பும் இல்லாமல் வெளிபடும் பாலியல்ரீதியான மொழிக்கு,  எதிர்ப்பு என்பதே இருக்க கூடாது என்று நினைப்பவர்களுடன் பேச எனக்கு எதுவும் இல்லை. (தஸ்லிமா நஸ்ரின், தீபா மெஹ்தா, ஹுசைனுக்கு நிகழ்ந்த எதிர்ப்புகளை இங்கே ஒப்பிடவே முடியாது. அதன் தீவிரமும், அதிகாரமும் வேறு. தஸ்லிமா, தீபா, ஹுசைனிடம் வெளிபட்டதும் எந்தவித பொறுப்புணர்வும் இல்லாத ஒரு கச்சாவான பாலியல் மொழி சார்ந்த வெளிபாடு அல்ல.) மாறாக இவ்வாறான எதிர்ப்பும் இருக்கலாம் என்று ஜனநாயக பூர்வமாக நினைப்பவர்கள்  எந்த வகையில் இந்த எதிர்ப்பு வெளிபட வேண்டும் என்பதை விளக்கி சொல்ல வேண்டும். குறிப்பாக சட்டரீதியான நடவடிக்கை என்றல்லாமல் வேறு எந்த ஜனநாயக வழியில் இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்டுகளின்  அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை செய்ய வேண்டும்  என்று இவர்கள் எதிர்பார்கிறார்கள் என்பதை சொல்லட்டும். மேலே பேசலாம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்தவரை இதை பெரிது படுத்துவது வெட்டிவேலை. தமிழகத்திற்கு வெளியே தேசிய மற்றும் பிராந்திய இந்துத்வ கட்சிகள் அடைந்த நிலையை,  இத்தனை ஆண்டுகால முனைப்புக்கு பிறகும் அடையாத நிலையில்,  குஷ்புவின் முன்மண பாலுறவு குறித்த கருத்தை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில், இதெல்லாம் இல்லாத எதிரியை கற்பித்து போராட கம்பு சுத்தும் வேலையாகத்தான் தெரிகிறது. விளம்பரத்திற்காக இதை செய்வதாகவெல்லாம் குற்றம் சாட்ட நான் சில அறிவு சார்ந்த அற காரணங்களால் விரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால்,  இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை  இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது.  (பார்க்க: சத்தியகடிதாசியில் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்)  என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங்கீகரிக்கும் அரசியல்களை விட,  எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-7809345133441340748?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/7809345133441340748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=7809345133441340748' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7809345133441340748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/7809345133441340748'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/04/blog-post.html' title='தமாசு!'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-1476279225866673024</id><published>2010-03-16T03:21:00.003+09:00</published><updated>2010-03-16T17:23:44.370+09:00</updated><title type='text'>பதிவுகள் -10</title><content type='html'>1.&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post.html"&gt; வெள்ளை இனவெறியும், தமிழர்களும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/disgrace.html"&gt; 'Disgrace'&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/1.html"&gt; ட்விட்டுரைகள்-1.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/2.html"&gt; ட்விட்டுரைகள்-2.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post_13.html"&gt;. ஊழலும் தமிழகமும்.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post_14.html"&gt; 'கேணி'யில் நாஞ்சில் நாடன்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/80.html"&gt;80களின் மந்தம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8&lt;a href=" http://roza-thuli.blogspot.com/2010/03/3.html"&gt;. ட்விட்டுரைகள்-3.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;a href="http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post_15.html"&gt; நாஞ்சில்-ஜெயமோகன்-மாடுகள்-ஜீன்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. &lt;a href=" http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post_16.html"&gt;காலி செய்த இளையராஜா.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதில்லை என்பதால் இங்கே சுட்டியளிக்கிறேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-1476279225866673024?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/1476279225866673024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=1476279225866673024' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1476279225866673024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1476279225866673024'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/03/10.html' title='பதிவுகள் -10'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-1403530121452165820</id><published>2010-03-15T04:19:00.003+09:00</published><updated>2010-03-15T15:33:01.443+09:00</updated><title type='text'>திற - சாதக் ஹசன் மண்ட்டோ.</title><content type='html'>ராமானுஜம் மொழிபெயர்த்து வெளிவந்துள்ள சாதக் ஹசன் மண்ட்டோவின் முழுமையான தொகுப்பை இன்று  எனக்கு அளித்து,  அதில்  'திற' என்ற கதையை உடனே படிக்குமாறு நண்பர் பைத்தியக்காரன் கேட்டுகொண்டார். ஏற்கனவே அதை வாசித்திருந்ததை அறியாமல், மீண்டும் படிக்க தொடங்கினேன். வாசித்திருந்ததை அறிந்த பிறகும் மீண்டும் படித்தேன். கதைக்கு விமர்சனம் என்று எழுத எதுவுமில்லை - கதையை மீண்டும் எழுதி வாசிப்பதை தவிர. கீழே இருப்பது சுருக்கப்பட்ட என் விவரிப்பில் உள்ள கதை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினைக்கு பிறகான கலவரங்களுக்கு இடையில், சிராஜூதீன் என்ற அந்த கிழவர், அம்ரித்சரில் இருந்து செல்லும் அந்த ரயிலில், கொலைகள் தாக்குதலுக்கு நடுவில் மயக்கமாக பயணிக்கிறார். முகல்புராவில் அகதிகள் கடல் போல் திரண்டிருந்த மைதானத்தில் விழிக்கிறார். அவரது சிந்தனைகள் மரத்து, மொத்த இருப்பும் சூன்யத்தில் இருந்தது. சூரிய கதிர்களின் ஊடுருவலில் திடீரென புலன்கள் விழித்து  ..  சூறையாடல்.. தீ... குடல்  வெளியெடுக்கப்பட்டு கொல்லப்பட்ட மனைவி... மகள் ஷகினாவுடன் ஓடியது... விழுந்த அவளது துப்பாட்டாவை எடுக்க குனிந்தது... அதற்கு மேல் நினைவில்லை. அவருடைய கோட்டில் ஷகினாவின் துப்பட்டா இருந்தது. ஆனால் ஷகினா எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;சிராஜூதீனின் மண்டைக்குள் கேள்விகள் மட்டுமே இருந்தது. அவருக்கு அனுதாபம் தேவைப்பட்டது. ஆனல் அந்த கூட்டத்தில் எல்லோருக்கும் அனுதாபம்தான் தேவைப்பட்டது. அவர் கண்கள் வற்றி அழுவதற்கு கூட அவருக்கு உதவ மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உதவ தயாராக இருந்த அந்த எட்டு இளைஞர்களிடம் ஷகினாவின் அடையாளங்களை சொல்கிறார். அவர்கள் உணர்ச்சி பெருக்கான வார்த்தைகளை சொல்லிவிட்டு, தேடுதலை தொடங்குகின்றனர். பத்து நாட்கள் கடந்தும் ஷகீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் லாரியில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர்கள் மிரண்டு ஓடும் ஷகினாவை காண்கிறார்கள். பயந்த அவளை தேற்றி உணவு, பால் கொடுத்து லாரியில் ஏற்றி அழைத்து செல்கிறார்கள். துப்பட்டா இல்லாத ஷகினா தன் மார்பை மீண்டும் மீண்டும் மறைக்கிறாள். இளைஞன் ஒருவன் தன் கோட்டை அவளுக்கு அளிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் கடந்தன. சிராஜூதீனுக்கு ஷகினா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அலைகிறார்; அந்த இளைஞர்கள் தேடுதலில் வெற்றி பெற பிரார்த்திக்கிறார். ஒருநாள் அவர்கள் லாரியில் உட்கார்ந்திருப்பதை கண்டு விசாரிக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"வருவாள்..வருவாள்" லாரி நகர்கிறது.  சிராஜூதீன் மீண்டும் பிரார்தனை செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்ணை சிலர் தூக்கி சென்று மருத்துவமனை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு செல்வதை அறிகிறார். சற்று நேர யோசனைக்கு பிறகு மருத்துமனைக்குள் சென்று, ஸ்டிரெச்சரில் கிடந்த உயிரற்ற உடலை காண்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"ஷகினா!"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வேண்டும்?" என்கிறார் டாக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, நான் அவளை பெற்றவன்"&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் நாடித்துடிப்பை பரிசோதித்து சிராஜூதீனிடம் ஜன்னலை திறக்க சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"திற"&lt;br /&gt;&lt;br /&gt;உடல் சில அசைவுகளை காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;செயலற்று கிடந்த அதன் கைகள் இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சல்வாரை கீழே இறக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;" உயிரோடு இருக்கிறாள்.. என் மகள் உயிரோடு இருக்கிறாள்"&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டருக்கு வியர்த்து கொட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;(கலவரத்தையும், சமூக சேவையையும், இஸ்லாமிய இளைஞர்களை இவ்வாறு சித்தரித்ததற்காக, பின்னர் பாகிஸ்தானில் மண்ட்டோ வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-1403530121452165820?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/1403530121452165820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=1403530121452165820' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1403530121452165820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/1403530121452165820'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/03/blog-post_15.html' title='திற - சாதக் ஹசன் மண்ட்டோ.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-8846033967443093643</id><published>2010-03-14T03:26:00.006+09:00</published><updated>2010-03-15T02:23:56.821+09:00</updated><title type='text'>டீஎம்மெஸ்! (TMS)</title><content type='html'>பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் உடல் நலம் குன்றி சிகிச்சையில் இருந்ததை சொன்ன நல்லவர்கள், அவர் தேறிவிட்டாரா என்கிற நல்ல செய்தி பற்றி சொல்லவில்லை. தேறி அவர் மீண்டும் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை பற்றியும் அபிப்பிராயம் வைத்திருக்கும் சிலரில் பலருக்கு நான் ஒரு தீவிர இளையராஜா ரசிகன் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. அதிலும் விமர்சனமற்ற ரசிகன் என்பதாகவும் ஒரு நினைப்பு இருக்கிறது. ரசிகன் என்பதன் பொருள் என்ன, அவ்வாறு இருப்பதில் என்ன பிரச்சனை, அதில் விமர்சனமின்றி இருப்பது எப்படி, இவையெல்லாம் எனக்கும் பொருந்துமா என்ற கேள்விகளுக்குள் போகாமல் சொல்வதென்றால், நான் என்னை இளையராஜாவின் ரசிகன் என்றே முதலில் நினைத்து கொள்ளவில்லை. இளையராஜாவை இந்திய திரை இசை உலகில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு ஜீனியஸாக கருதுகிறேன். அதை புரிந்து உள்வாங்கி கொண்டிருப்பதாக நினைக்கும் என்னால், சில அலைவரிசைகளுக்கிடையில் இருப்பவர்களுக்கு விளக்கவும் முடியும் என்றும் தோன்றுகிறது. ராஜா ஒரு தனித்த ஜீனியசாக இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் உடையதாகவும் நினைக்கிறேன். ராஜா மீதான பல தாக்குதல்கள் நியாயமற்றவை என்று நினைப்பதாலும், வேறு சில தாக்குதல்களில்  'அரசியல் சரி'களின் வன்முறை இருப்பதாகவும்  நினைப்பதால் அவற்றை எதிர்க்கிறேன். இவ்வாறெல்லாம் கருதும் காரணத்தால் ராஜாவின் ரசிகனாகிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.  ராஜாவின் இசை வியக்க வைக்கிறது; அது உருவான விதம் எல்லாவித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது.  இவ்வாறு சொல்வதற்கும் மிகவும் நேசிப்பதற்கும், மனதுக்கு நெருக்கமாக உணர்வதற்கும் மிகுந்த  வேறுபாடுகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் நான் என்னை எம்கேடியின் ரசிகனாக, முகமத் ரஃபியின் ரசிகனாக, பழைய ஹிந்திப்பாடல்களின் ரசிகனாக, மெல்லிசை மன்னரின் ரசிகனாகவே உணர்கிறேன். எம்.எஸ்.வியின் இசை அளவிற்கு எனக்கு ராஜாவின் இசை மனதுக்கு நெருக்கமானது இல்லை என்றுதான் உணர்கிறேன். இந்தவகையில் எல்லாவற்றையும் விட, இந்திய திரை இசையில்  எனக்கு மிக நெருக்கமானவர் TMS. அழகியல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டிஎம்மெஸ்ஸையே நான் கொண்டாட விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பிரபலமாக இருக்கும் ஒரு  பிண்ணனி படகர் ஒருவர் சொன்னதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். தமிழ் சினிமா இசையில் எல்லா பாடகர்களையும் தன்னால் ரசிக்க முடிகிறது - டி.எம். சௌந்தர்ராஜனை தவிர. டி.எம்.சௌந்தர்ராஜனை கேட்கும் போது தமிழ்நாட்டு வெயிலும், வரட்சியும் மட்டுமே தனக்கு நினைவுக்கு வருவதாக அந்த பிரபல பாடகர் சொன்னதாக் நண்பர் சொன்னார்.  என்னை போலவே ஒரு தீவிர டி.எம்.எஸ். ரசிகரான நண்பர் இதை மிகுந்த வியப்புடன் சொன்னார். ஆனால் ஒருவகையில் என்னால் அந்த பிரபல பாடகரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. பாலைத்தன்மையாக டிஎம்மெஸ்ஸின் குரலை அவர் சொன்னது என் புரிதலுக்கு உட்பட்டே இருக்கிறது. ஏனெனில் அப்படி ஒரு கருத்து எனக்கே சின்ன வயதில் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா பாடல் ரசனையற்ற பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட என்னை எஸ்பிபியின் குரலே சினிமாப் படல் பக்கம் கவர்ந்து இழுத்தது. சுஜாதாவை எழுத்து மேதை என்ற ஒரு காலகட்டத்தில் நினைத்திருந்தது போல், எஸ்பிபியை விட சிறந்த ஒரு பாடகரை எண்ணி பார்க்க முடியாத கட்டத்தில் இருந்தேன். மேலும் திரைப்பட பாடல்களை கவனம் கொண்டு கேட்க துவங்கிய கட்டத்தில் டிஎம்மெஸ் பாடிய பாடல்கள், இன்றைக்கும் கூட என் சகிப்பு தன்மையை சோதனை செய்வதாகவே உள்ளது. இந்த துவக்க நிலையிலிருந்து வழுவி நழுவி என்றைக்கு டிஎம்மெஸ்ஸை தீவிரமாக ரசிக்கத் துவங்கினேன் என்பது சொல்ல முடியாமலே இருக்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கு  'தரை மேல் பிறக்க வைத்தான்' பாடல் திடீரென அதிர்வு கொண்டு ஆட்கொண்ட ஒரு மாலைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது மட்டும் நினைவில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 12 வருடங்கள் தமிழகத்திற்கு வெளியேயான இந்தியாவில் வாழ நேர்ந்த போது, தமிழ் சினிமா பாடல்களும் கூடவே வந்தது. அப்போதே டிஎம்மெஸ்ஸின் தீவிர ரசிகனாக இருந்த எனக்கு, டிஎம்மெஸ்ஸை விடுதியறைகளில் கேட்பதும் (பொதுவாக கத்தி பாடும் பழக்கம் உள்ள எனக்கு) பாடுவதும் மிக பெரிய எக்சிஸ்டென்ஷியலிச பிரச்சனையை உருவாக்குவதாக இருந்தது. இன்று உலகின் பல பாகங்களை காண நேர்ந்த எனக்கு, வட இந்தியர்களிடம் உள்ளது போன்ற காரணமற்ற மொழி சார்ந்த அர்ரகன்ஸை வேறு எங்கும் கண்டதில்லை. என்னை போல சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் பேணும் எவரும் தமிழகம் தவிர்த்த இந்தியாவில் அவமதிக்கபட்டதான உணர்வை கொள்ளாமல் வாழ்வை கழித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. வட இந்தியர்களால் எந்த விதத்திலும் அடையாளம் காண இயலாத ஒரு குரலாகவே டிஎம்மெஸ்ஸின் குரல் இருந்தது. இந்த வட இந்திய மக்களில் நல்லவர்கள் என்று ஒரு வகையினரை பிரிக்கலாம். சாம்பாரில் கூட சுவை இருக்க கூடிய சாத்தியம் உள்ளதாக எண்ணுபவர்கள். அப்படி நண்பர்களான பலருக்கும் கூட டிஎம்மெஸ்ஸை சகித்து கொள்ள முடியவில்லை. பலரும் பொதுவாக புழங்கும் என் அறையில், மற்றவர்களின் இருப்புக்கு ஏற்ப ஹிந்தி அல்லது மேற்கத்திய இசையை போடுவதா, இளையராஜா பாடலை போடுவதா, டிஎம்மெஸ்ஸை போடுவதா என்று நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு பிடித்த இசையை எல்லாம் என்னால் ரசிக்க முடிந்தது; அதன் நுட்பங்களை பகுத்தறியும் திறனும் (சில நேரங்களில் அவர்களை விட மிகுதியாக) வாய்க்கிறது. ஆனால் அவர்களால் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் சகிக்க கூடியதாக இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இதை புரிவதை விட இந்த யதார்த்தம் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மன ஆழத்தில் உருவாக்குவதாக இருக்கிறது.  ஆஸ்கார் வாங்குவதையும், இந்தி சினிமாவில் தடம் பதிப்பதையுமே சாதனையின் நிருபணமாக கொள்ளும் அடிமை மனநிலை நம் கூட்டு உளவியலில் கலந்ததுதானே. டிஎம்மெஸ் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் தமிழ் சூழலில் கூட டிஎம்மெஸ்ஸை அறவே பிடிக்காத, டிஎம்மெஸ்ஸின் குரலை சகிக்காத பலர் இருப்பதை அறிந்த எனக்கு மிக முக்கியமான பதற்றம் வந்தது. என் வாழ்க்கை துணையாக போகும் பெண்ணிற்கு டிஎம்மெஸ்ஸை பிடிக்காமல் போய்விட்டால்? இந்த விஷயத்தை உறுதி செய்துவிட்டே எந்த தீர்மானத்தையும் எடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டுக்கு வந்தேன். இருந்தாலும் மற்றவர்கள் முற்றிலும் சகிக்காத, நாம் மிகவும் நேசிக்கும் விஷயத்தின் முரண் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. டிஎம்மெஸ் குரலை பாலையை ஒப்பிட்டு விவரித்த பாடகர் போல, பலர் தமிழ் மொழியின் ஒலியை கேட்பது ஒரு பாத்திரத்தில் கல்லை போட்டு உருட்டுவது போல கருதும் மனநிலையை கொண்டதாக தோன்றியது. (தமிழ் குறித்த இந்த உவமையை தமிழகத்திற்கு வெளியே பலர் கேட்டிருக்கலாம்.) ஆகையால் எனக்கான தேடல் கேள்வியாக, தமிழகத்தில் பிறக்காமல், தமிழின் ஒலியையே கேட்டிராத ஒருவரால் டிஎம்மெஸ்ஸின்  குரலை ரசிக்க முடியுமா என்பது.  இந்த தேடலின் விடை Tim gendron என்கிற ஒரு அமேரிக்க கணிதவியலாளனும், ராக் இசைஞனுமானவனுடனான நட்பின் போக்கில் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இசை குறித்த தேடலில், மேற்கத்திய தாக்கம் அதிகமுள்ள (ஆமாம்!) தமிழ் திரையிசை, ஹிந்தி இசையை விட , அதிகமாக டிம்மை ஈர்த்தது ஆச்சரியமில்லை. ஆனால் டிஎம்மெஸ்ஸின் குரலும், பாடும் விதமும் அவனை கலங்க அடித்த விஷயம்தான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  நான் போட்டு காட்டிய டிஎம்மெஸ்ஸின் சிறந்த பாடல்களை கேட்டு 'oh, this guy is too good!' என்று அவன் நொந்து வியக்காத சந்தர்ப்பமில்லை. என்னை விட டிஎம்மெஸ்ஸை அவன் அதிகம் ரசித்து வியந்ததாக எனக்கு தோன்றியது. என் ரசனையை நானே தீர்மானித்து கொள்ளும் எல்லா குணங்களும் எனக்கு இருந்தும், டிம் டிஎம்மெஸ்ஸை ரசித்தது என் தேடலுக்கான விடையாக, நாம் ஏதோ இரும்பு சுவர்களுக்குள்ளான கலாச்சரத்தை கொண்டிருப்பதான மனநிலையையிலிருந்து விடுவித்தது. அட பிரச்சனை நம்மிடம் இல்லை, இவன்களிடம்தான் என்கிற நிலைபாட்டிற்கு கொண்டு வந்தது. இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இடையில் விருப்ப பட்டியலில் கீழே போன எஸ்பிபி மீண்டும் மறு பரிசீலனைகளில் மிகவும் பிடிக்க தொடங்கியது, தேடலில் ஒரு பகுதியாக ரஃபி அவ்வப்போது மாபாடகன் என்கிற இடத்தை என்னுள் பெற்று கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இரண்டு வருடங்கள் முன்பு இகாரஸ் பிரகாஷுடன் பாரில் மதுவருந்திக் கொண்டிருந்த போது சொன்னேன் "டிஎம்மெஸ் மாதிரி ஒரு பாடகன் உலகத்திலேயே இல்லை' என்றேன். இதை அந்த நேர உணர்வெழுச்சியாக அல்லாமல், நான் பல ஆண்டுகளாக அசை போட்டு கண்டுபிடித்த புது உண்மை போன்ற ஒரு முடிவாக சொன்னேன். நான் சொன்னதன் காரணங்களை, பின்னணிகளை அவர் அன்றய உரையாடலில் புரிந்து கொண்டிருக்க முடியாது. நான் சொன்னதன் தீவிரமும் ஆழமும் அவரை அடைந்திருக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. அதற்கு பிறகு இன்னும் அந்த கருத்து மேலும் மேலும் உறுதியாகி போனாலும், இன்றைக்கும் அதை விளக்கங்களுடன் சொல்ல முடியாது. ஆனால் அது மிகுந்த யோசனைக்கு பின் நான் வந்த முடிவு. இதே முடிவுக்கு வரும் இன்னொருவரால்தான் இதை புரிய முடியும். அவருக்கு நான் விளக்கி சொல்ல இதில் ஏதாவது இருக்க முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-8846033967443093643?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/8846033967443093643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=8846033967443093643' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/8846033967443093643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/8846033967443093643'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/03/tms.html' title='டீஎம்மெஸ்! (TMS)'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-3482280057814193957</id><published>2010-03-13T00:54:00.004+09:00</published><updated>2010-03-13T02:12:07.610+09:00</updated><title type='text'>ஜெயமோகனின் உள் (ஒதுக்கீடு) அரசியல்.</title><content type='html'>&lt;a href="http://www.jeyamohan.in/?p=551"&gt;ஜெயமோகனின் பழைய பதிவொன்றை &lt;/a&gt;கண்டு, &lt;a href="http://roza-thuli.blogspot.com/"&gt;புதிதாக தொடங்கியுள்ள குட்டி பதிவுகளில் &lt;/a&gt;குறிப்புகளாக எழுத நினைத்தேன்.  சற்று நீண்டுவிட்டதால் இங்கு இடுகிறேன். விஷயம் பழையதுதான் என்றாலும் அது குறித்த புரிதல் நித்யமாக உதவக்கூடியது. எதிர்வினை என்பதால் &lt;a href="http://www.jeyamohan.in/?p=551"&gt;ஜெமோவின் பதிவை &lt;/a&gt;படித்து விட்டு இந்த பதிவை வாசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நிறைவேற்றபட்ட மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், 'உள் ஒதுகீடு கிடைக்க பாடுபாடுவோம்' என்கிறார் திருமா. நம் சமூகத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதில் இருக்கும் சிக்கலை கணக்கில் கொண்டு நிறைவேற்றப்படுவது மகளிருக்கான ஒதுக்கீட்டு. இதில் தலித்துக்கான உள் ஒதுக்கீடு கேட்பதை விட, மிகவும் வெளிப்படையான நியாயங்கள் கொண்டது தலித்துக்கான நிலவும் இட ஒதுக்கீட்டில் அருத்ததி சமுதாயத்தினருக்கான உள் ஒதுக்கீடு. அந்த உள் ஒதுக்கிட்டை ஒரு கட்டத்தில் திருமாவும் கிருஷ்ணசாமியும் எதிர்த்தார்கள். அது  தன் சாதி சார்ந்த பரப்பிய அரசியல் நிலையின் மேலாதிக்க பார்வையில்  முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு. திருமா பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உள் ஒதுக்கீட்டின் நியாயத்தை ஒத்துகொண்டு பேசியதை வாசித்தேன். கிருஷ்ணசாமி உள் ஒதுக்கீடு குறித்த, எந்த வித நியாயமும் இல்லாத தன் நிலைப்பாட்டை பரிசீலித்து மாற்றிக்கொண்டாரா என்று நான் அறியேன். &lt;br /&gt;&lt;br /&gt;உள் ஒதுகீடு என்பது தலித்துக்களுக்கான நிலவும் இட ஒதுக்கீட்டீல், தலித்களை சாதிப்படிநிலை சார்ந்து மேலும் சில வகை பிரிவுகளாக பிரித்து, தனியாக அந்த பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்வது. இதற்கான கோரிக்கை ஆந்திராவின் (அருந்ததியினருக்கு சமானமான) மாதிகா  சமூகத்தினாரால் எழுப்பப்பட்டு, சந்திரபாபு நாயிடுவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. (தமிழக பறையர்களுக்கு சமானமான) மாலா ஜாதியினரின் தீவிர எதிர்ப்பிலும் வழக்குகளிலும் மாட்டி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அரசு சார்ந்த கமிஷன்களால் இதன் நியாயங்கள் விசாரிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு குறித்த குரல்கள் 90களிலேயே ஆதி தமிழர் பேரவையால் முன்வைக்கப்பட்டு 2000த்தில் தீவிரமடைகிறது. மதிவண்ணனின்  'உள் ஒதுக்கீடு சில பார்வைகள்' என்ற புத்தகம், ஆந்திர+தமிழக வரலாற்றை சொல்வதாக வெளிவருகிறது. (இன்னும் சில புத்தகங்கள் உண்டு.) தமிழகத்தில் தொடர்ந்து கூட்டங்கள் நடக்கின்றன;  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், பெரியார் திகவும் இதற்கு தொடர்ந்து ஆதரவு தந்து கலந்து கொள்கின்றன. கலைஞர் உள் ஒதுக்கிடு கோரிக்கையை ஏற்பதாக அறிவிக்கிறார்; திருமா, கிருஷ்ணசாமி போன்றவர்கள் எதிர்ப்பு குரலை முன்வைக்கின்றனர். இந்த பிண்ணணியில் ஜெயமோகன் இதை முன்வைத்து &lt;a href="http://www.jeyamohan.in/?p=551"&gt;எழுதிய பதிவை &lt;/a&gt;பார்போம். அதை பற்றி பேசுவதுதான் இந்த பதிவின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெயமோகனின் இந்த பதிவை குறித்து  'ஜெயமோகன் செய்வது அவரது வழக்கமான அசிங்க வேலை' என்று ரொம்ப நாட்கள் முன்பு ட்விட்டரில் எழுதியிருந்தேன். என்னை தொடரும் யாரோ ஒருவர் ஆதாரம் தரமுடியுமா என்று கேட்டிருந்தார். நான் பதில் சொல்லவில்லை. இப்போது ஜெமோவை பதிவை  மீண்டும் கண்டு எழுதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கம், பெரியார் குறித்து  ஜெமோ எழுதியவைகளை வாசித்து, அதில் உள்ள தர்க்க திறமைகளை புரிந்து கொண்டவர்கள், எளிதில் ஜெமோவின் இந்த பதிவின் உள் அரசியலையும் புரிந்து கொள்ளமுடியும். இந்த பதிவில் வெளிப்படும் ஜெமோவின்  அரசியல், டோண்டு போன்றவர்கள் முன்வைக்கும் மிக எளிமையான ஒரு  ̀சோ'த்தனமான அரசியலை, இன்னும் நளினமான மொழியில், அண்மைக்கால கருத்தியல்களை செரித்து, திறமையாக தர்க்கப்படுத்தி முன்வைக்கிறது.  அதாவது தலித்கள் மீதான பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வன்முறைகளை முன்வைத்து தன்னை நியாயப்படுத்தும் பார்பனிய அரசியலை போன்றது. (அவ்வாறு ஜெமோவின் விசிறிகளான சரவணன், சூர்யா போன்றவர்களே, பிற்படுத்தப்பட்டவர்களின் வன்முறையை வைத்தே பலமுறை இணையத்தில் பேசியிருக்கிறார்கள்.) இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் சற்று வசதியான நிலமை; தலித்களில் ஆக கடைசி சாதியினரான அருந்ததியர் மீது மேலாதிக்கமும், நியாயமற்ற தன்மையும் கொண்ட ஆதிக்க தலித் சாதியினரின் முரண்பகை.  இதை முன்வைத்து ஜெமோ தன் பதிவில் செய்வது இதுவரை தலித் அரசியல் என்பதாக நிகழ்ந்தவற்றை சாதியரசியல் என்பதாக் சுருக்கி நிராகரிப்பது. இதுவரையான தலித் அரசியலை மதிவண்ணன் போன்றவர்கள் விமர்சித்து வந்ததற்கும், ஜெமோ திருகி விமர்சிப்பத்கும் உள்ள வித்தியாசத்தை வாசித்து தெளியலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெமோ எழுதும் ஒரு விஷயத்தை கவனிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;span style="font-style:italic;"&gt;'மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஏன் குரல் கொடுக்கவேண்டும்? மிக எளிய விடைதான். அருந்ததியர்கள் பெரும்பாலும் அந்தக் கட்சியில்தான் உள்ளனர்.நடைமுறையில் அருந்ததியர் ,காட்டுநாயக்கர் போன்ற மக்களைப்பற்றி பேசும் உரிமை இப்போது இரு தரப்பினருக்கே உள்ளது. ஒன்று, மார்க்ஸிய கம்யூனிஸ்டுக்கட்சி. இரண்டு கிறித்தவ மிஷனரிகள். அவர்களை மதித்து அவர்களுக்காக ஏதேனும் செய்ய முன்வந்தவர்கள் அவர்களே.&lt;/span&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக சொல்கிறார். சிபிஐ(எம்) குரல் கொடுத்தது நல்ல விஷயம். ஆனால் சிபிஐ(எம்)ற்கு வாக்கரசியல் என்று ஒரு அரசியல் நலன் உண்டு. அப்படி எந்த அரசியல் நலனும் இல்லாமல் பெரியார் திக தீவிர ஆதரவை நடைமுறையிலும், கருத்தியல் ரீதியிலும் அளித்ததை ஜெமோ தவிர்த்து செல்கிறார். அதை குறிப்பிடுவது அவர்  குறி வைத்திருக்கும் பெரியாரிய அரசியல் மற்றும் தலித் அரசியலின் நிராகரிப்பு தர்க்கத்திற்கு வலு சேர்க்காது. &lt;br /&gt;&lt;br /&gt;உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை தன் பதிவில் முன்வைக்கும் ஜெமோ, இட ஒதுக்கீடு என்பதை பற்றிய தன் கருத்தையே எங்கும் நேரடியான வார்த்தைகளில் பதிவு செய்ததாக எனக்கு தெரியவில்லை. (நான் தவறவிட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.) ஜெமோவின் பல்லக்கு, ரப்பர் போன்ற படைப்புகளில் இடவொதுக்கீட்டிற்கு எதிரான அரசியல் இருப்பதாகவே கருதப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை பேசாத ஒருவர், உள் ஒதுக்கீட்டின் நியாயத்தை பேசுவது விசித்திரமானது என்றில்லாமல், உள் அரசியல் கொண்டது என்றே கருத இடம் உண்டு. இட ஒதுக்கீட்டை எதிர்த்து இதுவரை வந்துள்ள சாதிய வெறி கொண்ட புனைவுகளை, தர்க்கங்களை, நகைச்சுவைகளை எதிர்த்து தன் குரலை பதிவு செய்யாத ஒருவர், ஆதிக்க சாதி தலித்களின் உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பை முன்வைத்து செய்வது என்ன? இதுவரையான ஒட்டு மொத்த தலித் அரசியல் என்பதையே நிராகரிப்பது.  அதை ரொம்ப சாமர்த்தியமாக கோபம் கொண்ட காட்டு நாயக்கர் ஒருவரின்  குரலாக, வேதசகாயக்குமாரின் வாதங்களாக, திருமா கிருஷ்ணசாமி போன்ற தலித தலைவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பு, அதை விமர்சிக்கும் குரல்கள் எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்கிறார். எல்லாவற்றையும் கலந்து கட்டி அவர் செய்வது உள் ஒதிக்கீடு குறித்த நியாயத்தை அல்ல; இதுவரையான தலித் அரசியலின் நியாயத்திற்கான நிராகரிப்பை. ஆனால் அவர் திறமையாக மறைத்து வைப்பது, இதுவரை முன்வைக்கப்பட்ட தலித் அரசியலின் அடுத்த கட்ட பரிணாமமே அருந்ததியினரின் உள் ஒதுக்கீட்டிற்கான குரல் என்பதை. &lt;br /&gt;&lt;br /&gt;பார்பனரல்லாத ஆதிக்க சாதியினரின் குரல், பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சி, 80களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் போராட்டம், 90களின் தலித் அரசியல் என்ற வரலாற்று பின்னணியில், அதன் தொடர்சியான பரிணாமமாக, பரவலான ஆதரவுடன் அருந்ததியினரின் உள் ஒதுக்கீட்டிற்கான குரல் எழுகிறது. ஜெமோ இந்த வரலாற்று பின்னணியின் முக்கியத்தை அறியாதவர் அல்ல. அவரது உள் அரசியல் காரணமாக திறமையான வார்த்தைகளை போட்டு தலித் அரசியலையே நிராகரிக்கும் தர்க்கத்தை சமைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;திருமாவும், கிருஷ்ணசாமியும், ரவிக்குமாரும் பேசும் அதே தலித் அரசியலைத்தான் அடிப்படையில் மதிவண்ணனும், ஆதி தமிழர் பேரவையினரும் பேசுகிறார்கள், முன்வைக்கிறார்கள். ஆனால் திருமாவும், கிருஷ்ணசாமியும் நடைமுறை அரசியலாக முன்வைத்த உள் ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்பு என்பது, அவர்கள் செயல்பட்டு வந்த தலித் அரசியல் சட்டகத்திற்கு எதிரானது. மார்சியவாதி மார்சியத்திற்கு எதிராக செய்வது போல், காந்தியவாதி என்று சொல்லும் சிலர் நடைமுறையில் செய்வது போல், ஆன்மீகவாதி மோசடி செய்வது போல், சொல்லுக்கும் செயலுக்கும் முரணான, முன்வைக்கும் அரசியலுக்கு எதிரான ஒரு செயல். அதை முன்வைத்து அரசியலை மறுக்கவியலாது. ஒரு இடத்தில் கூட, தலித் அரசியல் என்பதாக இன்றுவரை முன்வைக்கப்பட்டதற்கு எதிரான ஒரு தர்க்கத்தை ஜெமோ முன்வைக்கவில்லை.  மாறாக நடைமுறை யதார்த்தத்தை மட்டும் தனக்கு சாதகமாக்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூரில் நடந்த உள் ஒதுக்கீட்டு ஆதரவு கூட்டத்திற்கு, ஆந்திராவில் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பிரமாண்டமான எழுச்சிக்கு ஒரு காரணமான பேராசிரியர் முத்தைய்யா வந்திருந்தார். அவருடன் நடந்து கொண்டிருந்த போது மதிவண்ணன் ஒரு தலித் எழுத்தாளரை காட்டி  ̀அவர் மாலா(பறையர்)' என்றார். முத்தைய்யாவின் முகம் ஜாக்கிரதை உணர்வு கலந்த ஆச்சர்யத்துடன் மாறியது. நான் உடனே அங்கிருந்த பலரும் பறையர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதையும், மேடையில் இருந்த பெரியார் திகவினர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் என்பதையும் குறிப்பிட்டேன். ஆந்திராவின் உள் ஒதுக்கீடு கோரிக்கை என்பது தலித்களான மாதிகா மாலா ஜாதியினரிடையே பிளவையும் பகையையும் ஏற்படுத்தியது. அதனால் பறையர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது முத்தையாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.  தமிழகத்தில் சில எதிர்ப்பு வந்தாலும், பெரியாரிய அரசியல் பேசுபவர்களும், தலித் அரசியல் பேசும் பறையர் இனத்தை சேர்ந்த பலரும் ஆதரிக்கும் நிலைமை இருப்பதை அவரிடம் பின்னர் சொன்னேன். (உதாரணமாக அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா). இது இங்கே பேசப்பட்டு வந்த பெரியாரிய, தலித்திய அரசியலால்தான் சாத்தியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட அரசியல் பரிணாமம் மற்றும் அதற்கான வெளி என்பது பல வரலாற்று காரணங்களை கொண்டது. அந்த வகையில் தமிழகத்தின் இடது சாரி இயக்கம், (எல்லாவகை) திராவிட அரசியல், தலித் அரசியல் அனைத்தும் முக்கியமானவை; திராவிட இயக்கத்தின் வெகுஜன பரவலாக்கம், 90 களில் பேசப்பட்ட தலித் அரசியல், இடது சாரி இயக்கமும் அதன் மனமாற்றங்களும் கலந்துதான் உள் ஒதுக்கீட்டிற்கான அரசியல் ஆதரவை இங்கே உருவாக்குகிறது.  அந்த காரணிகளை எதிரிகளாக கற்பித்து மறுக்கும் வேலையைத்தான் ஜெமோவின் பதிவு செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு கட்டத்தில் வரலாற்று  காரணியாக இருப்பது, பின்னர் எதிரியாகவும் கூடும். அப்போது பழைய காரணத்தை சொல்லி அந்த அரசியலின் இருப்பை நியாயப்படுத்துவது விபரீதமானது. அந்த வகையில் திராவிட அரசியலை, இதுவரை பேசிய தலித் அரசியலை விமர்சிக்க, பரிசீலிக்க, சிலதை நிராகரிக்க தேவை இருக்கலாம். அந்த வகையில் பேச வேண்டிய விஷயங்கள் வேறு. அருந்ததியர்கள் இன்று அந்த குரலை ஒலிக்கிறார்கள். மதிவண்ணன் உள் ஒதுகீடு குறித்த புத்தகத்தை  ̀மற்ற தலித்களால் கொல்லப்பட்ட அருந்தியினருக்கு' சமர்பிக்கிறார். ஆனால் ஜெமோ செய்யும் உள் அரசியல் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெமோவின் வாதத்தை தலித் அரசியலை முன்னேடுக்கும் யாரும் எடுத்து கொள்ள போவதில்லை. ( ஆனால் ஜெமோ சொன்னதால் வீம்பாக செய்ய வேண்டிய விமர்சனத்தை கூட சிலர் செய்து கொள்ளாமல் போகும் ஆபத்து உண்டு.) அவர்களுக்காக இந்த பதிவை நான் எழுதவில்லை. ஜெமோவிற்கு இணய உலகில் உருப்படியான தர்க்கத்துடன் யாரும் எதிர்வினை செய்ததில்லை என்று சிலர் வருத்தப்படுவதால் என் பங்கிற்கு மட்டுமே இந்த பதிவை எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8830351-3482280057814193957?l=rozavasanth.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rozavasanth.blogspot.com/feeds/3482280057814193957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8830351&amp;postID=3482280057814193957' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3482280057814193957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8830351/posts/default/3482280057814193957'/><link rel='alternate' type='text/html' href='http://rozavasanth.blogspot.com/2010/03/blog-post_13.html' title='ஜெயமோகனின் உள் (ஒதுக்கீடு) அரசியல்.'/><author><name>ROSAVASANTH</name><uri>http://www.blogger.com/profile/15364954312745030579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8830351.post-6607859675059521033</id><published>2010-03-01T16:17:00.001+09:00</published><updated>2010-03-01T19:12:25.464+09:00</updated><title type='text'>எமக்குள் ஒரு ஜான் இல்லாதவர் எவர்?</title><content type='html'>(நண்பர் யமுனா ராஜேந்திரன் கேட்டுகொண்டதற்கு இணங்க, ஜான் ஆப்ரஹாம் பற்றிய இந்த கட்டுரை கீழே பதியப்படுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எமக்குள் ஒரு ஜான் இல்லாதவர் எவர்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;யமுனா ராஜேந்திரன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I&
