ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, March 21, 2006

முன்னுரையிலிருந்து...

(குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் பேசப்பட்டு, மனதில் ஏற்பட்ட தாக்கமும் சுமையும் நீங்கி, மறந்து போய்விடாமல் இருக்க, தொடர்ந்து ஒரு விவாதப் பொருளாய் பார்வைக்கு வைக்கும் பொருட்டு, இடைவெளி விட்டு கீதா ரமசாமியின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை அளிக்கவிருக்கிறேன்.)

புத்தகத்தின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

..... 2005இல் கூட பொதுக்கழிப்பிடங்களிலும், தனிப்பட்ட கழிப்பிடங்களிலும், எதற்காக தனி மனிதன் ஒருவரால் மலம் எடுத்து செல்லப் பட வேண்டிய தேவை இருக்கிறது என்று நமக்கு நாமே கேட்டுகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வழக்கத்திற்கு மிக பெரிய அளவில் காரணமாக இருப்பதாக நான் நினைக்கும் சாதிய அமைப்பின் மூலமாக, துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்துடன் (ஸஃபாயி கரம்சாரி அந்தோலன் - SKA) இணைந்து பணியாற்றி, இந்த பிரச்சனை குறித்து நான் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையினூடே, எது அவர்களை இந்த தொழிலில் தொடர்ந்திருக்க நிர்பந்திக்கிறது என்பதை புரிந்துகொள்ள இந்த புத்தகம் முயலுகிறது. ஸபாயி கரம்சாரி அந்தோலனின்(SKA) பிறப்பையும் வளர்ச்சி, அதன் பாதிப்புகளை ஆவணப்படுத்த முயற்சிக்கிறது. ......


.... SKAவுடனான எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விளக்குவது பயனுள்ளதாகவும் ஒருவேளை தேவையானதாகவும் இருக்கலாம். எடுப்பு கழிவறை துப்புரவு தொழிலாளர்களுடன் முன்னமே எனக்கு தொடர்பு இருந்தது. தீவிர இடதுசாரி அரசியலில் (CPI(ML)) இருந்து விலகிய பிறகு, 1975இன் இறுதியில் நானும் எனது கணவ்ர் சிரில் ரெட்டியும் காசியாபாத் அருகில், இரண்டு வருடங்களுக்கு மேலாக, பங்கியருடன் (Bhangis - துப்புரவு தொழிலில் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஜாதி -ரோவ) வேலை பார்த்து வந்தோம். கட்சிரீதியான கருத்துருவத்திலிருது விலகி, மக்களோடு சேர்ந்து, அவர்களால் உணரப்பெறும் தேவைகளின் அடைப்படையில், வேலை செய்யவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். பங்கியருடன் ஏன் வேலை செய்ய நேர்ந்தது என்பது தெரியவில்லை என்றாலும், அவர்களை சென்று பார்த்து, கல்விபெற்ற தென்னிந்திய தம்பதியரான நாங்கள் அவர்களுக்கு என்ன செய்ய இயலும் என்று கேட்டோம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் வழி நடத்தும் படியும், ஆண்களுக்கு ஆங்கிலமும், பெண்களுக்கு தையலும் சொல்லி தரும்படி கேட்டனர். ஒரு அறையை எடுத்துகொண்டு வேலையை தொடங்கினோம். தினமும் பெண்கள் தலைச்சுமையாக மலத்தை சுமந்து, மதியம் திரும்பி வருவதையும், தங்கள் காலனி முன்னிருந்த வெற்று நிலத்தில் அதை கொட்டுவதையும் கவனித்திருந்தேன். ஆண்கள் ரயில்வேயிலும் மற்ற நிறுவனங்களிலும், அதே வேலையை செய்து வந்தனர். அவர்களின் வீட்டில் நான் உண்ண நேர்ந்த (வெற்று நிலத்தில் கொட்டப்படும் மலத்தை உண்ணும்) பன்றி மாமிசத்தின் மூலம் இலைபுழு என்னிடம் வந்து சேருமோ என்பதை தவிர, அவர்களின் வேலையையும் அதன் அவலநிலை பற்றியும், நான் வேறு எதையும் எண்ணவில்லை என்பதை இப்போது எழுத வெட்கமாய் இருக்கிறது. வழக்கமான பாணியில் அவர்களின் குறைந்த கூலி பற்றி கவலைபட்டேனே ஒழிய, அந்த வேலையின் அவலத்தன்மை பற்றி நினைத்து பார்க்கவில்லை.

அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் உதவக்கூடிய, ஒரு இந்தி தொடக்க நிலை பாடததை தயாரித்ததை நினைத்துப் பார்கிறேன். அந்த தொடக்க நிலைபாடம் ஒரு துப்புரவு தொழிலாளியின் கதையை அடிப்படையாக கொண்டிருந்தது. ஒவ்வொரு பாடத்திலும் அந்த பெண்ணின் படங்களையும், அவள் வேலை, வேலை செய்யும் இடத்தையும் வரைந்திருந்தேன். அவர்களுடன் திருமணங்களுக்கு, உறவினர்களின் வீட்டிற்கு, சினிமாக்களுக்கு சென்று, அதே வேலையை செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்தேன். இந்த எல்லா காலங்களிலும், இவர்கள் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற சிந்தனையின், சிறிய பிரதிபலிப்பு கூட என்னிடம் ஏற்படவில்லை. புத்தகம் பதிப்பிப்பதில் நிலைகொண்டபின், 1984-91 இடையில், தலித்களுடன் களப்பணி ஆற்றுவதில் திரும்பி, தலித் மகாசபாவின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்றேன். இவற்றை எல்லாம் மீறி, சஃபாயி கரம்சாரி அந்தோலனை பற்றி நான் கேள்விப்படிருக்கவில்லை என்றால், ஏன் நம் மக்களில் சிலர் மலம் அள்ள நேர்கிறது, மற்றவர்கள் அது குறித்து ஏன் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற பிரச்சனைக்கு என் கண்கள் திறந்திருக்காது என்பதை ஒப்புகொள்ள எனக்கு நடுங்குகிறது. ....

..... இது ஒரு தனிப்பட்ட தலைகுனிவிற்கான விஷயமான எனக்கு இருக்கிறது. இந்த அவலம் குறித்து 'தெரியாமல்' இருக்கும் ஒரே காரணத்தினால், துப்புரவு தொழிலாளர்களை மலத்தை சுத்தம் செய்ய வைப்பதற்கு நானும் பொறுப்பாகி போவதால், எல்லா ஜாதி இந்துக்களை போல நானும் சலுகைகளை அனுபவித்து வருவதை நான் உணர்ந்தேன். அதற்கு பிறகு (SKAவில் இருக்கும் யாரும் அவர்களின் களப்பணி இயல்பு காரணமாய் இதை செய்யும் வாய்ப்பு குறைவாக இருப்பதால்) இந்த புத்தகத்தை செயல்படுத்த தீர்மானித்தேன்.

Post a Comment

3 Comments:

Blogger ROSAVASANTH said...

சென்ற பதிவின் பின்னூட்டங்களுக்கான பதிலை http://vivathakooththu.blogspot.com/ இல் எழுதியிருக்கிறேன். எப்போது தமிழ்மணத்தில் வர சற்று நேரமாகலாம்.

3/21/2006 9:25 PM  
Blogger மதுரை மல்லி said...

Thanks for this post

http://maduraimalli.blogspot.com/2006/03/blog-post.html

&

http://maduraimalli.blogspot.com/2006/03/blog-post_26.html

Thanks

3/26/2006 8:04 PM  
Blogger ROSAVASANTH said...

mathrai malli, thanks for the links. I have also read it, the time you wrote it.

3/27/2006 3:25 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter