ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 21, 2006

மீண்டும் நர்மதாவிற்கு ஆதரவாக.

மேதா பட்கரின் உண்ணா விரதம் மற்றும் பலதரப்பட்ட மக்களின் போராட்டம் தந்த அழுத்தத்தின் பலனாக, நடுவண் அரசு தனது அமைச்சர்களை பார்வையிட அனுப்பி, கொஞ்சமாவது பாதிக்கப் பட்ட மக்களின் நியாயத்தை அங்கீகரிக்கும் வகையில் இறங்கி வந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியும், குஜராத் காங்கிரஸ் கட்சியும், அரசியல் நிர்பந்தங்களும் தந்த அழுத்தத்தில் மீண்டும் முருங்கை மரமேறி உச்ச நீதி மன்றத்தில் (தனது மந்திரிகளை கொண்டு தானே உறுதிபடுத்திக்கொண்ட நிலமையை மாற்றியமைத்து) வேறு ஒரு சித்திரத்தை அளிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. மே 1க்கு தனது முடிவை உச்ச நீதி மன்றம் தள்ளிப் போட்டிருக்க, அணைகட்டும் வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த பிரச்சனையில் மீண்டும் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த பிரச்சனையில் பாதிக்கப் பட்ட மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் மீண்டும் சில நிமிடங்கள் எடுத்து, மீண்டும் பெடிஷன் ஆன்லைனில் புதிதாக இடப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தங்கள் குரலை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வலைப்பதிவில் ஏற்கனவே யாராவது எழுதிவிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தால் மன்னிக்கவும். மிக்க நன்றி!

Post a Comment

1 Comments:

Blogger பினாத்தல் சுரேஷ் said...

எழுதவில்லை, ஆனால் கையெழுத்திட்டுவிட்டேன், நன்றி.

4/21/2006 5:30 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter